என் மலர்
வழிபாடு
- கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
- பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
- அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோவிலில் இன்று நண்பகல் வரை சிறப்பு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை மீட்க அவர்கள் மீது சரயு நதிநீரை டிரோன்கள் மூலம் தெளித்து வருகிறார்கள்.இன்று இரவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அயோத்தி நகரில் ஆங்காங்கே நிறுவப்பட் டுள்ள எல்.இ.டி. திரைகள் மூலம் கோவிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்பட்டுள்ளது.
- இன்று ஸ்ரீ ராமநவமி.
- அயோத்தி ஸ்ரீ ராம் லல்லாவுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-23 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நள்ளிரவு 12.25 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.31 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஸ்ரீ ராமநவமி. அயோத்தி ஸ்ரீ ராம் லல்லாவுக்கு சிறப்பு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம். பத்ரா சலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ரதோற்சவம். பழனி ஸ்ரீ ஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி. சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் புறப்பாடு. கங்கைகொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி கருட வாகனத்தில் பவனி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராய ணருக்கு காலையில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-சுபம்
மிதுனம்-அன்பு
கடகம்-நட்பு
சிம்மம்-அமைதி
கன்னி-புகழ்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- நிறைவு
மகரம்-திறமை
கும்பம்-முயற்சி
மீனம்-பாசம்
- பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
- ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.
பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.
பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து இருப்பதாலும், மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்தநிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
- தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-22 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நள்ளிரவு 1.07 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: திருவாதிரை காலை 10.47 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா. நெல்லை ஸ்ரீ நெல்லையப்பர், சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில்களில் பவனி. ராமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெமாள் சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். புதுச்சேரி சப்பரத்தில் புறப்பாடு. குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-செலவு
கடகம்-பாராட்டு
சிம்மம்-திடம்
கன்னி-உறுதி
துலாம்- பக்தி
விருச்சிகம்-முயற்சி
தனுசு- சாந்தம்
மகரம்-உழைப்பு
கும்பம்-ஆதாயம்
மீனம்-ஊக்கம்
- கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களே சுவரி உடனுறை மங்கள நாதர் சுவாமி கோவில் உள்ளது. உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் இந்த ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
மேலும் இங்குள்ள மரகத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நாளன்று சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ள இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று (4-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியான கும்பாபி ஷேகம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மங்களநாதர்-மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் அதனைத் தொடர்ந்து ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை யில் இருந்து புனித நீர் உள்ள கும்பத்துடன் வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் சிவனே போற்றி என பக்தி கோஷ மிட்டு வழிபட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு வாசல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் ராமநாதபுரம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் சேதுபதி ராணி, ராஜேஸ்வரி நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நடராஜரை தரிசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இன்று இரவு மரகத நடராஜருக்கு 32 வகையான திரவ பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின் ஆருத்ரா நாளன்று மரகத நடராஜர் சன்னதி திறக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
- எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது.
திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
- பங்குனி உத்திர திருவிழாவின் போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.
- பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை.
திருவாரூர் தியாராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.

இந்த விழாவிற்காக மாசி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தில் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி.
ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமவிதியை கடைபிடித்து ஆரூரானுக்கு ஆயில்யத்தன்று தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆழித்தேரோட்டம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும், முறையே, கடந்த ஆண்டு (2024) நடந்த பங்குனி திருவிழாவின் போது ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தான் தேரோட்டம் நடந்தது.
அதே போல், இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக ஆயில்ய நட்சத்திரம் வரும் அதே நாளான வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும்.
- நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அது குறித்து அறிய, அறிய நம்மிடம் பல ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க சிறப்புகளை இங்கு சுருக்கமாய் காண்போம்.
ராஜேந்திர சோழன் சிலை
தென்கிழக்கு ஆசியாவை கட்டியாண்டவரும், உலகின் மிகப்பெரிய படைக்கு சொந்தக்காரருமாகவும் விளங்கிய ராஜேந்திர சோழனின் உருவச்சிலை திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இது இக்கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு சிறப்பாகும்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
மகாலட்சுமி, தவம் செய்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததும், குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்து குழந்தைப்பேறு பெற்றதும், இந்த தியாகராஜர் தலமாகும்.
எனவே, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிட்டும், காதலுக்கு தூது போனவர் தியாகராஜர் என்பதால், காதல் கைகூடவும் எவ்வித சிக்கலும் இன்றி திருமணம் நடந்தேறவும் தியாகராஜரை வழிபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொடுமையான பாவங்கள் செய்தால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்க பெறலாம்.

தோல் நோய் குணமாகும்
உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித்தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதன் மூலம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
தீப வடிவில் நவகிரகங்கள்
இத்தலம் நளனும், சனியும் வழிபட்ட தலம். தியாகேசர் சன்னதியின் மேல் வரிசையில் 9 விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். பெருமானுக்கு முன் 6 மற்றும் 5 அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களை குறிக்கும்.
சந்தனத்தின் மீது குங்கும பூவையும் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
- 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார்.
- 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.
புல்லாங்குழலுடன் காட்சி தரும் கிருஷ்ணன், வேணுகோபாலனாக ஆலயம் கண்ட தலங்கள் பல உள்ளன. அவற்றில் அமர்ந்த, நின்ற, சயனம் என மூன்று கோலங்களிலும் இறைவன் காட்சி தரும் ஆலயமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ரங்கையா என்பவர், இந்தப் பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு கட்டி வந்தார்.
ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப் பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல், அதை வைத்து இங்குள்ள 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மேல்கோட்டில் உள்ள திரு நாராயணபுரத்திற்குச் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு
இந்த கோவில் மூன்று நிலை மற்றும் ஐந்து கலசங்கள் கொண்ட ராஜ கோபுரத்துடன், கண்களை கவரும் வண்ணம் அழகாக காட்சி தருகிறது. மேலும் உயரமான சுற்றுச் சுவர்களையும் கொண்டுள்ளது.
கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் பெரிய விசாலமான பரப்பைக் காணலாம். கோவிலை கடந்து உள்ளே சென்றவுடன் எதிரே 30 அடி உயரத்தில் செப்புக் கவசத்துடன் நீண்ட நெடிய கொடிக் கம்பம் ரம்யமாக காட்சி தருகிறது.
அதனை அடுத்து அழகிய வேலைப்பாடுடன் கூடிய 108 கல் மண்டபங்கள் வரிசையாக அழகாக காட்சி தருகின்றன. இந்த மண்டபத்தின் முகப்பில் ருக்மணி, சத்தியபாமா உடனாய குழல் ஏந்திய கிருஷ்ணனின் சுதை வடிவ சிற்பம் இருக்கிறது.

கல் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் வித்தியாசமாக கல்யாண விநாயகரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில் திப்புசுல்தானின் புடைப்பு சிற்பமும் இருக்கிறது.
கொங்கு நாட்டை திப்பு சுல்தான் ஆட்சி செய்த போது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கு அடுத்ததாக 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார், சுதர்சன ஆழ்வார்.
இவருக்கு சித்திரை நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதர்சன ஆழ்வாருக்கு மறுபுறம், யோக நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இவருக்கு அடுத்ததாக விநய ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கல்விக் கடவுளான ஹயக்ரீவர், ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி பகவான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இவர்களை வணங்கி தாயாரான கல்யாண மகாலட்சுமியை தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய - வரத முத்திரையோடும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதோடு, விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக 9 வாரங்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அடுத்ததாக மூலஸ்தானத்திற்கு துவாரபாலகர்களைக் கடந்து உள்ளே செல்கிறோம். மூலவரை நோக்கி கூப்பிய கரத்துடன் கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக ஆனந்தமான முகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

இவரது சன்னிதிக்கு பின்புறம் ரங்கநாதர் சன்னிதி இருக்கிறது. அங்கு சிறிய மற்றும் அழகான வடிவத்தில் 'கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயரில் 7 தலை ஆதிசேஷனின் மேல் தூங்கும் புஜங்க சயன தோரணையில் அவர் உள்ளார்.
அவருக்கு இரு பக்கமும் நிலமகளும், திருமகளும் நின்றபடி இருக்கின்றனர். திருவரங்கம் போன்ற மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிலை சிறியதாக இருந்தாலும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சன்னிதிக்கு முன்னால் பல நூற்றாண்டு பழமையான கல்வெட்டும் இருக்கிறது.
பிரகாரத்தை சுற்றி வரும்போது சிவபெருமான் கோவில்களில் உள்ளது போல, மகாலட்சுமியின் அம்சமான வில்வ மரத்தை காண முடிகிறது. அதற்கு கீழே நாகர் சன்னிதி, அதற்கு பக்கத்தில் காளிங்க நர்த்தனர் மற்றும் வாமன அவதார பெருமாள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
தல விருட்சமாக மகிழம் மரம் உள்ளது. அடுத்ததாக அமர்ந்த நிலையில் லட்சுமி நாராயணர் அருள்கிறார். திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில், இறைவன் நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் அருள்வது போல, இங்கும் மூன்று கோலங்களில் இருக்கும் இறைவனை நாம் தரிசிக்கலாம். இந்த மூன்று மூலவர்களுக்கும் வழக்கமான அபிஷேகம் நடைபெறுகிறது.
மேலும் இங்கு ஆண்டாள் சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. 108 கால் மண்டபத்தின் கடைசி கல் மண்டபத்தில், சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது.
பெருமாள் கோவில்களில் சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் இருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. இதேபோல கோவில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளதைப் போலவே, மோட்ச பல்லியின் சிற்பமும் இருக்கிறது. விஷ பூச்சியால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பல்லியை வணங்கிச் சென்றால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை, 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் இருப்பது விசேஷமானது.
புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.
வேணுகோபாலனுக்கு ஆவணியில் நடைபெறும் ஜெயந்தி உற்சவம், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் விசேஷமான வழிபாடுகளாகும். இவ்வாலய இறைவனை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டரில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.
- மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- பைரவருக்கு மேற்கூரை கிடையாது.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்'. இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.
இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.

கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும்.
கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.






