என் மலர்
ஆன்மிகம்
- பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
- திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.
திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.
இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.
விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.
பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.
இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.
- சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
- ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
குரும்புக்கோட்டை மன்னன் பட்டம் என்ற பெயர் கொண்ட 2-ம் குலோத்துங்கன் திருவ நகரத்தில் பெண் எடுக்க சென்றபோது இருவேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்துக்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி? என பெண் வீட்டார்கள் கேட்க, குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீரங்கரைப் போல அதே மாதிரி கோவிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
அதன்படி காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இடையே அரங்கன் இருப்பதுபோல திருவதிகையில் கருடன் நதி-தென்பெண்ணையாற்றின் நடுவில் அதிகாபுரியில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 2-ம் குலோத்துங்கனின் திருமணம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன்பு இந்த இடத்தில் அய்யனார் சிலை இருந்ததாகவும், அவர் காவல் தெய்வமாக வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகாமண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது. மூலவர் ஸ்ரீரங்கன் வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கே பாம்பணையில் பள்ளிகொண்டவந்தாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் அருள் பாலிக்கிறார்.
சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்த கோவிலில் உள்ள தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மூலவர் சிலை 8 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சாத்துதல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயாசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள ஆண்டாள் பல்லவர் கால படைப்பு சத்திரமாய் காட்சி அளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவர், உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மரும் அருள் புரிகின்றனர். கோவிலின் எதிரே திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறும்.
குழந்தை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீரங்கநாயகியிடம் சகஸ்ர நாம அர்ச்சனையும், பால் பாயசமும் அமுது படைப்பதாய் வேண்டி அவ்வாறே குழந்தை பேறு பெற்றதுடன் தங்கள் நேர்த்தி கடனை செய்கின்றனர். புது வஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரும், ஆறாவமுதம் பொதிந்த கோவில் என்று சிறப்பு பெற்றது இந்த கோவில்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
- இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
- மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.
இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.
மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும்.
மிதுனம்
சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் யோகமுண்டு.
கடகம்
மனக்குழப்பம் அகலும் நாள். பயணம் பலன்தரும் விதம் அமையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
சிம்மம்
வரவைவிட செலவு கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். மனத்தளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.
துலாம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கல்யாண கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.
மகரம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம்.
கும்பம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மீனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை.
- வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-3 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 9.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : மரண யோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகனத்தில் சேவை
இன்று பிரதோஷம், ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமலையில் திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலையில் சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-பெருமை
கடகம்-வாழ்வு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-நலம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- உறுதி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-நம்பிக்கை
மீனம்-பயணம்
- பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது
- திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவிலும் ஒன்றாகும்.
தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் வெங்கல கருடனுக்கு புஷ்ப அங்கி சேவை புரட்டாசி மாத பிறப்பான நடைபெற்றது. 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெண்கலத்தால் ஆன நூற்றாண்டு பழமை வாய்ந்த வாகனத்தில் வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பல்வேறு வாசனை மலர்கள் அணிவித்து புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் கருட பகவானுக்கு செங்கோல் மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று எடுத்து வந்து மீண்டும் கருட பகவானுக்கு செங்கோல் வழங்கி தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இத்தகைய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
- பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உருவகிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மகாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகத் தன்மையாகும்.
மகாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் உள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ருட தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக் கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மகாளயபட்ச தர்ப்பண தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக.
- யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், கோலாட்டம் மற்றும் கேரள புகழ் தெய்யம் ஆட்டம் ஆகியன நடைபெறும்.
- பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 23-ந் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வருதல் நடைபெறுகிறது.
விழாவில் 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. இதில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், கோலாட்டம் மற்றும் கேரள புகழ் தெய்யம் ஆட்டம் ஆகியன நடைபெறும்.
மகாதானபுரத்தில் பரிவேட்டை நடக்கிறது. பின்னர் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.
- வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
- பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.
கடகம்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும்.
கன்னி
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
துலாம்
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். சென்ற வாரத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
தனுசு
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை காட்டிலும் செலவு கூடும்.
மகரம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
கும்பம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-2 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி நள்ளிரவு 1.18 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பூசம் காலை 9.28 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று சன்யஸ்த மகாளயம், சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-சாதனை
மிதுனம்-முயற்சி
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-பெருமை
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-யோகம்
தனுசு- பரிசு
மகரம்-நன்மை
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-உவகை
- தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும்.
- கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது.
சந்திரன் சூரியனின் ஒளியை மறைப்பதால் பூமியின் மீது சில பகுதிகளில் சூரிய ஒளி விழாமல் இருக்கும் போதே சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இந்த மாதம் 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது கன்னி ராசியில் நிகழ இருப்பதாகவும், அந்த நாளில் கன்னி ராசிக்காரர்கள் செய்யக்கூடியவகைள், செய்யக்கூடாதவை ஆகிவைகளை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணம் ஏற்படும் காலம் வழக்கமான அமாவாசையைப் போல் இல்லாமல் இருப்பதால், அவை நம் மனநிலைகள் மற்றும் உணர்வு நிலைகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரக்கூடும். இது துல்லியமான தெளிவுக்கு நல்ல அறிகுறியாக இருந்தாலும், உங்கள் விருப்பங்களை ஒத்துப்போகாதவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும். அதனால் தெளிவான மனநிலையுடன் இருங்கள்.
இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள், உங்கள் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
உதாரணமாக தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால் இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
இந்த காலங்களில் சுய பராமரிப்பை மேற்கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது முக்கியமான ஒன்றாகும். யோகா மற்றும் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.
கிரகணம் மனநலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், உறவுகளை கையாள்வதை திறம்பட செய்யவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுக்காரர்கள் என யாரையும் கட்டுப்படுத்த முயலாதீர்கள், நீங்கள் இறுகப்பிடிக்க முயற்சித்தால் உறவுகளிடையே மோதல் உருவாக வாய்ப்புண்டு. அதனால் உறவுகளிடையே பொறுமையை கடைபிடியுங்கள். உறவுப்பிரச்சனைகளை அமைதியாக கவனியுங்கள்.
கிரகணங்கள் ஆழ்ந்த ஆன்மீக சக்தியைக் கொண்டுள்ளன. கவனச்சிதறல் இருந்தால் சக்தி வாய்ந்த நுண்ணுர்வுகளை தவறவிடுவீர்கள். ஆகையால் தியானத்தில் ஈடுபடுங்கள், உள்ளத்தை குவித்து ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்வழியை மீட்டுத் தரும் ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு கன்னி ராசிக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஜோதிடர்கள் விளக்கியுள்ளனர்.






