என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan-இன்றைய ராசிபலன் 15.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு சந்தோஷம் கூடும்
    X

    Today Rasipalan-இன்றைய ராசிபலன் 15.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு சந்தோஷம் கூடும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    ரிஷபம்

    யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள்.

    மிதுனம்

    செல்வாக்கு உயரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீரும்.

    கடகம்

    உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரியவிதம் நடந்துகொள்வர்.

    சிம்மம்

    பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    கன்னி

    நட்பால் நன்மை கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்தொழிலில் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார்.

    விருச்சிகம்

    தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் வரவு உண்டு. வரன்கள் முடிவாகும். பாராட்டும், புகழும் கூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    சந்தோஷம் கூடும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உறவினர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் தொல்லை உண்டு.

    கும்பம்

    எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

    மீனம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வந்தர்களின் ஆதரவு உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    Next Story
    ×