என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கருத்து.
    • நிதிஷ்குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    வாஷிங்டன்:

    பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார். இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    அவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ்குமார் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியது.

    இதையடுத்து, பீகார் சட்டசபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் எனது பேச்சுகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    இந்நிலையில, நிதிஷ்குமார் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் எக்ஸ் சமூக வலைதளத்தில், பீகார் முதல் மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால் பீகாருக்குச் சென்று முதல் மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன். பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
    • அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.

    வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.

    தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.

    இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.

    விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

    நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

    அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.

    அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.

    இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.

    அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.

    மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    நியூயார்க்கின் குயின்சில் உள்ள பூங்கா ஒன்றில் சிறிய குளம் ஒன்று உள்ளது. அதில் ஏராளமான வண்ண, வண்ண செடிகள் பூத்து குலுங்குகின்றன. இந்த செடிகள் நிறைந்த குளத்தில் பார்வையற்ற நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனால் அந்த நாய் நீரில் சிக்கி தவிப்பதை பார்த்த பூங்கா ஊழியர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்து சென்று செடிகளுக்குள் சிக்கி தவித்த பார்வையற்ற நாயை போராடி மீட்டனர். இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர், அருமையான வேலை. அந்த நாய் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன் என கூறி உள்ளார். இதே போன்று ஏராளமான பயனர்களும் போலீசாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    நியூயார்க் நகர தெருக்களில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், பச்சை நிறத்தில் திரவம் போன்று தண்ணீர் ஓடுகிறது.

    சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் சில பயனர்கள், இவ்வாறு திரவம் தெருக்களில் ஓடுவது நிலத்தடி நீர் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பது போன்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • குழந்தைகளை கவர, டைனோஸர் வடிவத்தில் இவை தயாரிக்கப்படும்
    • ஒருவருக்கு மட்டும் வாயில் காயம் ஏற்பட்டதாக புகார் வந்துள்ளது

    அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் (Arkansas) மாநிலத்தை மையமாக கொண்டு இயங்குவது, குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனமான டைஸன் ஃபுட்ஸ் (Tyson Foods). இது அசைவ உணவு தயாரிப்பில் உலகளவில் பிரபலமான பன்னாட்டு நிறுவனம்.

    இவர்களின் தயாரிப்புகளில் "ஃபன் நக்கெட்ஸ்" (Fun Nuggets) எனப்படும் சிறுவர்-சிறுமியர்களுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை குழந்தைகள் விரும்பி வாங்குவதுண்டு. குழந்தைகளுக்கு பிடித்தமான 'டைனோஸர்' வடிவத்தில் சிக்கன் மற்றும் பிரெட் தூள்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்கள் அதன் தனிப்பட்ட சுவைக்காக பிரபலமானது.

    இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன் "2024 செப்டம்பர் 4" எனும் தேதியை காலாவதியாகும் தேதியாக குறிப்பிட்டு சுமார் 1 கிலோகிராம் (29 அவுன்ஸ்) எடையுள்ள பல்லாயிரம் பாக்கெட்டுகளை அந்நாட்டின் சுமார் 9 மாநிலங்கள் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு அனுப்பியிருந்தது.

    நாடு முழுவதும் இவற்றை விலைக்கு வாங்கிய பலர் அந்த பாக்கெட்டுகளில் சிறு உலோக துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்செய்தி இணையத்திலும் பரவியது.

    இதையடுத்து இந்நிறுவனம் தானாகவே முன் வந்து அனைத்து கடைகளிலும் உள்ள "ஃபன் நக்கெட்ஸ்" பாக்கெட்டுகளை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

    "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் உடலாரோக்கியம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். முன்னரே இவற்றை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை பயன்படுத்தாமல் போட்டு விடவும். இல்லையென்றால் கடைகளில் கொடுத்து மாற்றி கொள்ளவும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்" என அந்நிறுவனம் இது குறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த செய்தியை அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உலோக துண்டுகளால் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே தனது வாயில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளதாக இந்த துறை அறிவித்திருக்கிறது.

    இந்தியாவிலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் விற்கும் தின்பண்டங்களை அதிகளவில் பெற்றோர் வாங்கி தருகின்றனர். அதனால் பெற்றோர் அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் ஆட்சி அமைப்பார்
    • டிரம்பின் செயல்திட்ட வடிவம் அஜெண்டா-47 என அழைக்கப்படுகிறது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி வகிப்பார்.

    அதிபர் தேர்தலில் வென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக டிரம்ப் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கைகளை 'அஜெண்டா 47' (Agenda 47) என அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். அதன்படி, தனது முந்தைய பதவி காலத்தில் தனது திட்டங்களுக்கு நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் தடையாய் இருந்ததாக கருதும் டிரம்ப், இம்முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தயார் செய்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    நகரங்களில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை அமெரிக்க நகரங்களுக்கு வெளியே குடியமர்த்துவது, தேசபக்தி உள்ள ஆசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவது, அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரு உலகளாவிய அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது, ரஷியாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கான பல கோடி மதிப்பிலான உதவிகளை நிறுத்துவது, எரிசக்திக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வது என பல அதிரடி நடவடிக்கைகள் இந்த 'அஜெண்டா 47' மூலம் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வகுக்கும் இந்த திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியிலும் ஒரு சிலர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிரம்ப் மீது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளில் வரும் தீர்ப்பை பொறுத்தே அவர் அதிபராவது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து ஆய்வின் தரவுகளை அமெரிக்க பல்கலைக்கழகம் பெற்ற ஆய்வு செய்தது
    • அதிக உப்பு, கார்டிசாலை அதிகரித்து, அதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 'அப்சர்வேஷனல் ஸ்டடி' (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். 



    அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

    • கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
    • இந்த ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    2020-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து சுமார் 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும்.

    கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் பேரும், மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற 41 ஆயிரம் இதில் அடக்கம் என தெரிவித்துள்ளது.

    • ஆர்டர் செய்த உணவை சாப்பிட்ட உட், ஸ்ட்ரா மூலம் ‘மில்க்‌ஷேக்’-ஐ பருக தொடங்கினார்.
    • உணவு வினியோக நிறுவனத்தை அணுகி, தான் ஆர்டர் செய்த உணவுக்குரிய பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் உட் ஈடுபட்டார்.

    அமெரிக்காவில் உள்ள உடா பகுதியை சேர்ந்த உட் என்பவர் அங்குள்ள ஒரு உணவகத்தில் துரித உணவு வகை மற்றும் 'மில்க்ஷேக்' ஆர்டர் செய்துள்ளார். அதன்படி சிறிது நேரத்தில் ஆர்டர் செய்த உணவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்ட உட், ஸ்ட்ரா மூலம் 'மில்க்ஷேக்'-ஐ பருக தொடங்கினார். அப்போது அது 'மில்க்ஷேக்' இல்லை என்பதையும், தனக்கு வினியோகம் செய்யப்பட்டது ஒரு கோப்பை சிறுநீர் என்பதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனக்கு உணவு வினியோகம் செய்த நிறுவன டிரைவரை அழைத்து விசாரித்தார்.

    அப்போது அவர், தனது வாகனத்தில் இருந்த 2 கோப்பைகள் மாறியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது அந்த டிரைவர் நீண்ட நேரம் வேலை செய்வதாகவும், போதிய இடைவேளை எடுக்க முடியாததால் தனது காரில் டிஸ்போசபிள் கோப்பைகளில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டதாகவும் கூறினார்.

    இதுதொடர்பாக உணவு வினியோக நிறுவனத்தை அணுகி, தான் ஆர்டர் செய்த உணவுக்குரிய பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் உட் ஈடுபட்டார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது உணவு வினியோக நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    • காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    நியூயார்க்:

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது.

    • காசாவில் பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • மனிதாபிமான உதவி கிடைக்காததால், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்து வருகிறது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பிரசார உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை என்று தெரிவித்துள்ளார். இது பிணைக்கைதிகளை மீட்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள், மருத்துவமனைகள், முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் காசா மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சையின்றி பரிதவிக்கிறார்கள்.

    இதனால், உலகம் முழுவதும் இருந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை குறைக்கவில்லை.

    இந்த நிலையில்தான், பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற, காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

    ஆனால், போர் நிறுத்த அழைப்பு என்பதை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    • 2022ல் டுவிட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்
    • ராக்கெட் வெடித்து சிதறும் செய்தியையே கேட்டு கொண்டவன் நான் என்றார் மஸ்க்

    பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" (all-hands meet) எனப்படும் சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் சிக்கல்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் அலசப்படும்.

    உலகின் நம்பர் 1. பணக்காரரான எலான் மஸ்க், புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான டுவிட்டர் (Twitter) நிறுவனத்தை 2022ல் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் பெயரை 'எக்ஸ்' (X) என மாற்றி பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் மஸ்க், தனது ஊழியர்களுடன் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் மஸ்க் பல ஆச்சரியமான வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளார்.

    அந்த சந்திப்பில் மஸ்க் பேசியதாவது:

    நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் எந்த சந்திப்புகளிலும், நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கெட்ட செய்தியை கூட கூறலாம். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள்; ஆனால், கெட்ட செய்தியை உரக்க, உடனடியாக, பல முறை கூறுங்கள். எனது 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது அவை பல முறை தோல்வியுற்ற செய்தியையே நான் கேட்டு கொண்டவன். ஒரு ராக்கெட் வெடித்து சிதறுவதை விட கெட்ட செய்தியை இது போன்ற நிறுவனங்கள் தந்து விட முடியாது. உங்களுக்குள்ளேயே நடைபெறும் சந்திப்புகளிலும் கூட இதை ஒரு வழிமுறையாக பின்பற்றுங்கள். எனது 'டெஸ்லா' மற்றும் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களும் சந்திப்புகளில் முதலில் கெட்ட செய்தியைத்தான் பகிர்ந்து கொள்வார்கள். அங்கெல்லாம் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இங்கும் நடைமுறைப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்ற மஸ்கின் வியப்பூட்டும் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    ×