என் மலர்
தாய்லாந்து
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் ஜேசன் குணவான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இஸ்ரேல் வீரர் டேனில் டுபோவென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கிடாம்பி, ஹாங்காங் வீரரை எதிர்கொள்கிறார்.
- காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்க தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாங்காக்கில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் சமீபத்திய மிகப்பெரும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் எரிந்து வருவதால் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
இதற்கிடையே ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் 7-வது இடத்தை பிடித்தது. அண்டை நாடான வியட்நாம், கம்போடியாவில் உள்ள நகரங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது அங்கு வசிப்பவர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்க தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை மந்திரி அனுடின் சார்ன்விரகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் மாணவர்களின் நலன் கருதி தலைநகர் பாங்காக்கில் 352 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கும்படி தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தலைநகர் பாங்காக்கில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை குறைக்க அனைவரும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அடுத்த ஒரு வாரத்துக்கு பஸ், ரெயில் போன்றவற்றில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்து பிரதமராக பதவி ஏற்றார்.
- தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனிடம் சொத்து மதிப்பு மற்றும் கடன் விவரங்களை தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா இருந்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமரும், டெலிகாம் பில்லேனியருமான தக்ஷின் ஷினவத்ராவின் இளைய மகள் ஆவார். பெண் பிரதமரான இவர் கடந்த செப்டம்பர் மாதம்தான் பதவி ஏற்றார். கடந்த 20 வருடத்தில் குடும்ப பின்னணியில் பதவி ஏற்ற 4 நபர் இவர் ஆவார்.
தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனுக்கு தனது சொத்துகள் மற்றும் கடன்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவருடைய கட்சி சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து பண மதிப்பின்படி அவருக்கு 13.8 பில்லியன் baht உள்ளது. இது சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய பண மதிப்பில் 3431.30 கோடி ரூபாய் ஆகும்.
இதில் 11 பில்லியன் Baht (2737 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளார். மீதமுள்ளது அவருடைய டெபாசிட்ஸ் மற்றும் கையிருப்பு தொகையாகும்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 162 மில்லியன் baht (40.31 கோடி ரூபாய்) அளவிற்கு 75 வாட்ச்கள் வாங்கி வைத்துள்ளார். 217 கைப்பைகள் 76 மில்லியன் baht (18.91 கோடி ரூபாய்) அளவிற்கு வாங்கி வைத்துள்ளார். 200 டிசைனர்கள் வடிவமைத்த பேக்குகளை வாங்கியுள்ளார். ஜப்பான், லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐந்து பில்லியன் baht (1244 கோடி ரூபாய்) அளவிற்கு கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடோங்டார்ன் ஷினவத்ரா நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் Baht (258 மில்லியன் டாலர்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடோங்டார்ன் ஷினவத்ரா தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்ஷின் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பின் உரிமையாளராக இருந்தவர். அதன் நிகர மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். தாய்லாந்தின் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தார்.
- 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
- 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பாங்காக்,
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது.
இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.
இதனால், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் வகையில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவிக்கின்றது.
தாய்லாந்து நாட்டுடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பிரிக்ஸ் அமைப்பானது நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2006-ம் ஆண்டு ரஷியாவால் நிறுவப்பட்டது. இதில், ரஷியா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
சுழற்சி முறையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ரஷியா இதன் தலைமையை ஏற்றது. 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமைப்பின் உறுப்பினராக அதிகாரப்பூர்வ முறையில் இணைந்தன.
- குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை.
- வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது.
மணிலா:
தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது.
இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி மியான்மர் எல்லைக்கு அருகே உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கே.என்.யூ என்ற கிளர்ச்சிக் குழுவினர் தங்களது எதிரிகும்பலுடன்' மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அந்த கிளர்ச்சி குழு மறுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தனதிப் சவாங்சாங் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது.
அந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- முதல் முறை மசாஜ் முடித்துக்கொண்டு வீடு சென்ற அவருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.
- 2-வது முறையாக மசாஜ் செய்ய சென்ற போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து:
தாய்லாந்தில் மசாஜ் செய்து கொண்ட தாய்லாந்தின் இளம் பாடகி உயிரிழந்துள்ளார். 20 வயதே ஆன பாடகி சாயதா, கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை சரிசெய்வதற்காக மசாஜ் செய்து கொண்டுள்ளார். முதல் முறை மசாஜ் முடித்துக்கொண்டு வீடு சென்ற அவருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து 2-வது முறையாக மசாஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்டது.
இதனால் சில நாட்களில் அவருக்கு முதுகு மற்றும் வயிற்றில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது. இது மசாஜால் ஏற்பட்ட வலி என நினைத்து மீண்டும் மசாஜ் செய்து கொண்டுள்ளார். முதல் இரண்டு முறை இருந்த பணியாளர் இல்லாமல் 3-வது முறை புதிய பணியாளர் மசாஜ் செய்தார். அவர் கடுமையான முறையில் செய்தார். இதனால் அவருக்கு கழுத்தில் வீக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோவில் இந்த மசாஜ் தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார்.
- 15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
- கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர்.
கடல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஆபத்து நிறைந்தது. பலரும் அதை உணருவதில்லை.
சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றமாக இருந்தது. யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று விளையாடியதை பார்த்தோம். சீற்றம் அதிகமுள்ள நேரத்தில் மட்டுமல்ல, சாதாரண நாட்களிலும் முன்னெச்சரிக்கை இன்றி கடற்கரை பகுதிக்கு செல்வது ஆபத்துதான்.
இதை உணராமல், கடற்கரை பகுதிக்கு சென்ற நடிகை ஒருவர் அலையில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரஷிய நாட்டின் பிரபல நடிகை கெமில்லா பெல்யாஸ்டாக்யா. 24 வயதான அவர் தனது காதலனுடன், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தலமான கோசியா மியூய் தீவிற்கு சென்றார்.
யோகா ஆர்வலரான கெமில்லா, கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கண்களை மூடியபடி யோகா செய்தார். அப்போது கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை கரைக்கு வந்து யோகா செய்து கொண்டு இருந்த நடிகை கெமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலைல் சிக்கிய அவர், கடலுக்குள் உயிருக்கு போராடினார்.
நீண்ட நேரம் கடலில் தத்தளித்து கொண்டு இருந்த அவரை மீட்க யாரும் இல்லாததால், கடலில் மூழ்கினார்.
15 நிமிடத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு, வேறு பகுதியில் கெமில்லாவின் உடல் கரை ஒதுங்கியது.
நடிகை கெமில்லா பாறையில் அமர்ந்து யோகா செய்வதும், அவரை கடல் அலை இழுத்து செல்வதும், கடலில் அவர் தத்தளிப்பதும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கமிலா தியானம் செய்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சச அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
ரஷிய நடிகை ராட்சச அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார்.
அப்போது திடீரென வந்த ராட்சச அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்த நபர் நடிகையை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சில கி.மீ. தொலைவில் ரஷிய நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.
அந்த தீவில் கனமழை பெய்து வருவதால், கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக தகவல்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து.
டெல்லி வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தாய்லாந்தின் பூகெட்டில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான புறப்பாடு தாமதமாகி இருக்கிறது. பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதன்பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் இதர உதவிகளுக்கு ஏர் இந்தியா வழிவகை செய்வதாக அறிவித்து இருக்கிறது.
சில பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்குவது மற்றும் வேறு தேதியில் பயணம் மேற்கொள்வது பற்றி பயணிகளுக்கு ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பயணிகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் பயணத்திற்குத் தயார்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபூகெட்டில் தரையிறங்கியது, அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. எனினும் பயணிகள் ஃபூகெட்டில் சிக்கிக்கொண்டனர்.
முன்னதாக, விமான நிறுவன வட்டாரம், "பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் 40 பேர் இன்னும் ஃபூகெட்டில் உள்ளனர், அவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.
- டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்பதுதான் தற்போதைய கோடிக்கணக்கானோரின் கேள்வி. இதற்கான நாள்தான் இன்று. இன்று அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே யார் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுவது உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகள் அல்லது பூங்காவில் உள்ள மிருகங்கள் ஆகியவற்றை வைத்து கணிப்பது உண்டு.
அப்படித்தான் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானையை வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி யாருக்கு என கணித்துள்ளனர்.
தாய்லாந்தின் உள்ள பூங்காவில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை உள்ளது. இந்த நீர் யானையை கவரும் வகையில் இரண்டு தர்பூசணி பழங்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் டொனால்டு டிரம்ப் எனப் பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கமலா ஹாரிஸ் என பெயரிட்டு தனித்தனியே வைக்கப்பட்டது
நீரில் இருந்து வெளியே வந்த குட்டி நீர் யானை நேராக சென்று டொனால்டு டிரம்ப் எனப் பெயர் எழுதப்பட்ட பழத்தை சாப்பிடுகிறது. இதன்மூலம் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என குட்டி நீர் யானை கணித்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியும்.
2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
- சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.
- வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார்.
பாங்காங்:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024' போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார். பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன. அனைத்து சுற்றுக்களிலும் அதிக புள்ளிகள் பெற்று ரேச்சல் குப்தா முதலிடம் பிடித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிஜே ஒபைசா என்பவர் 2-ம் இடம் பிடித்தார். இதனால் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்-2024' வெற்றியாளராக ரேச்சல் குப்தா அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த 'மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்' போட்டியில் இந்திய அழகி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.






