என் மலர்
நீங்கள் தேடியது "Paetongtarn Shinawatra"
- கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
- ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தொலைபேசி உரையாடல் எதிரொலியாக எதிர்ப்பலை கிளப்பியது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனைத்தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் ஷினவத்ரா பிரதமர் பதவியில் நீக்கிய அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்.
ஷினவத்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மே 28ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் கம்போடியா ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஜூலை 24ஆம் தேதி தாய்லாந்து- கம்போடியா ராணுவ வீரர்கள் எல்லையில பயங்கரமாக மோதலுக்கு வழி வகுத்தது. இந்த சண்டை ஐந்து நாட்கள் நீடித்தன. எல்லைப் பகுதியில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டன. பின்னர் இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
தனது மீதான குற்றச்சாட்டு குறித்து ஷினவத்ரா "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.
நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்திருந்தார்.
- புதிய பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- தாய்லாந்தின் 2-வது பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
பாங்காக்:
தாய்லாந்தில் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் உத்தரவிட்டது.
ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா (37) ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில் பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து அறிவித்தது. அவருக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணிக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்து பிரதமராக பதவி ஏற்றார்.
- தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனிடம் சொத்து மதிப்பு மற்றும் கடன் விவரங்களை தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா இருந்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமரும், டெலிகாம் பில்லேனியருமான தக்ஷின் ஷினவத்ராவின் இளைய மகள் ஆவார். பெண் பிரதமரான இவர் கடந்த செப்டம்பர் மாதம்தான் பதவி ஏற்றார். கடந்த 20 வருடத்தில் குடும்ப பின்னணியில் பதவி ஏற்ற 4 நபர் இவர் ஆவார்.
தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனுக்கு தனது சொத்துகள் மற்றும் கடன்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவருடைய கட்சி சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து பண மதிப்பின்படி அவருக்கு 13.8 பில்லியன் baht உள்ளது. இது சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய பண மதிப்பில் 3431.30 கோடி ரூபாய் ஆகும்.
இதில் 11 பில்லியன் Baht (2737 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளார். மீதமுள்ளது அவருடைய டெபாசிட்ஸ் மற்றும் கையிருப்பு தொகையாகும்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 162 மில்லியன் baht (40.31 கோடி ரூபாய்) அளவிற்கு 75 வாட்ச்கள் வாங்கி வைத்துள்ளார். 217 கைப்பைகள் 76 மில்லியன் baht (18.91 கோடி ரூபாய்) அளவிற்கு வாங்கி வைத்துள்ளார். 200 டிசைனர்கள் வடிவமைத்த பேக்குகளை வாங்கியுள்ளார். ஜப்பான், லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐந்து பில்லியன் baht (1244 கோடி ரூபாய்) அளவிற்கு கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடோங்டார்ன் ஷினவத்ரா நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் Baht (258 மில்லியன் டாலர்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடோங்டார்ன் ஷினவத்ரா தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்ஷின் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பின் உரிமையாளராக இருந்தவர். அதன் நிகர மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். தாய்லாந்தின் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தார்.






