என் மலர்tooltip icon

    இலங்கை

    • சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்
    • விராட் கோலி 267 இன்னிங்சில் கடந்து சாதனை

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    94 பந்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    அவர் 98 ரன்களை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் விரைவாக 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார். தற்போது விராட் கோலி 267 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், குமார் சங்கக்காரா 363 இன்னிங்சிலும், சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

    மேலும், 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டியவர் என்ற சாதனையும் இவரது கைவசமே உள்ளது.

    மேலும், 47 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • இந்திய அணியின் சார்பில் விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவரும் சதம் அடித்த அசத்தினர்.
    • 32 ஓவர்களின் 128 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர்.

    அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது.

    இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது.

    இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

    இதில், பக்கார் ஜமான் 27 ரன்கள், அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்களும், பாபர் அசாம் 10 ரன்களும், இமாம் உல் ஹாக் 9 ரன்களும், ஷாஹீன் ஷாஹ் அஃப்ரிதி 7 ரன்களும், ஷாதாப் கான் 6 ரன்களும், ஃபஹீம் அஷ்ரப் 4 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

    • 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை தொடங்கின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர். இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    ஆனால், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனமழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகளவில் இருந்ததால் ரிசர்வ் டேவுக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டது.

    நாளையும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    இந்நிலையில், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.
    • போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், 3 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • லீக் ஆட்டம் மழையால் இந்தியா பேட்டிங் செய்ததுடன் முடிவடைந்தது
    • இன்று மழைக்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48.5 ஓவரில் 266 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும், 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விக்கெட் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டும் விக்கெட் கைப்பற்றவில்லை. பீல்டிங் மெச்சும் வகையில் இருக்கவில்லை.

    இந்திய அணியின் ரன் குவிப்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

    அத்துடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ஒருசேர முன்னேற்றம் காண வேண்டியதும் தேவையான ஒன்றாகும். குழந்தை பிறந்ததால் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து தனது மனைவியை அருகில் இருந்து கவனிக்க மும்பை வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

    இதேபோல் காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் முழு உடல் தகுதியை எட்டி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பும்ரா, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால் முகமது ஷமி, இஷான் கிஷனுக்கு இடம் கிடைப்பது கடினம்தான்.

    உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை எளிதில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். சூப்பர் 4 சுற்றில் 193 ரன்னில் வங்காளதேசத்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பாபர் அசாம், இப்திகர் அகமது, இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வானும் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்பும் நல்ல நிலையில் உள்ளனர். மேகமூட்டமான சூழல் நிலவுவது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    இந்த போட்டி இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையேயான போராக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நடக்கிறது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் நாடுகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    சூப்பர் 4 சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில், இலங்கை வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் சந்திரமோகன் கிரிஷாநாத், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வெள்ளியிலான பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவரது ஒவ்வொரு சதத்தின் விவரங்களையும் இந்த வெள்ளி பேட்டில் பொறித்துள்ளேன் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

    இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • மீதமுள்ள சூப்பர்-4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.
    • லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வங்காள தேசம் முயற்சிக்கும்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான், இலங்கையில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.

    ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்-4 சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. லாகூரில் நடந்த இந்த சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோற்கடித்தது.

    அடுத்து மீதமுள்ள சூப்பர்-4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.

    சூப்பர்-4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வுனகா தலைமையிலான இலங்கை அணி, லீக் சுற்றில் தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    இதில் ஏற்கனவே வங்காளதேசத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் இலங்கை அணியின் குசல் மென்டிஸ், நிசாங்கா, தனஞ்ஜெய டிசில்வா, அசலங்கா, ரஜிதா, தீக்ஷனா, பதிரனா ஆகிய வீரர்கள் உள்ளனர். லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை போராடியே வெற்றி பெற்றது.

    இதனால் அந்த அணி கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம். சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு சாதகமாக கருதப்படுகிறது. வுகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணி சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும்.

    வங்காள தேசம் அணியில் முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரகீம், லிட்டன்தாஸ், தவ்ஹீத் ஹரிதி, தங்தின் அகமது, ஹசன் மக்மூத் சோலபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வங்காள தேசம் முயற்சிக்கும். கடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இதனால் பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இச்சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்
    • அந்த சந்திப்பின் போது நான் அங்கு இல்லை என ஆசாத் மவுலானா கூறினார்

    இலங்கையில் 2019 ஏப்ரல் 21 காலை ஈஸ்டர் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று, 3 கிறித்துவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. சில மணி நேரங்கள் கழித்து அதே நாளில் டெமடகோடா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், டெஹிவாலா பகுதியில் ஒரு விருந்தினர் விடுதியிலும் மீண்டும் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேருக்கும் மேல் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆசாத் மவுலானா என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

    அதில், "அவ்வருடம் நடக்க இருந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்காக இலங்கையில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள இலங்கையை சேர்ந்த கும்பலுக்கு, அந்நாட்டின் உளவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின் போது நான் இல்லை. ஆனால், சந்திப்பிற்கு பிறகு அந்த அதிகாரி, 'தேச பாதுகாப்பின்மை மட்டுமே ராஜபக்ஷேவின் குடும்பம் ஆட்சியில் அமர ஒரே வழி' என என்னிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.

    இந்த பேட்டி இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதில் குறிப்பிடப்படும் உயர் அதிகாரி யார் என்றும் அவருக்கு குண்டு வெடிப்பில் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரிக்கவும் ஒரு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கையின் தொழிலாளர் துறை அமைச்சர் மனுஷ நானயக்கரா தெரிவித்தார்.

    • நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
    • வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

    இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது.
    • சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    கச்சத்தீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், இலங்கையின் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது. பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை இந்தியாவிற்கு கொடுப்பதும், இந்தியா இலங்கைக்கு கொடுப்பதுமாக இல்லாமல், ஒரு நிரந்தரமான நிரந்தர முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார்.

    இலங்கையின் முன்னாள் எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×