என் மலர்
இலங்கை
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
ஆனாலும் சுப்மன் கில் நிதானமாக ஆடி சதமடித்தார்.இதில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
- இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
- கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.
கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.
அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
- இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.
பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள்.
- வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள். அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கொழும்பு ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மமூத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷர்துல் தாக்குர், ரவீந்திரஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது பும்ரா.
வங்காளதேசம்: மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன் அல்லது முகமது நைம், லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், அபிப் ஹூசைன், ஷமிம் ஹூசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமூத்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
- பாகிஸ்தான் 5 முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டங்களில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, இலங்கை அணி கடைசி பந்தில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) 12-வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐநது முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடைசி பந்தில் இலக்கை எட்டிய சம்பவம், ஆசிய கோப்பை தொடரில் இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2018 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.
ஆசிய கோப்பையில் முதல் மூன்று போட்டிகளில் 68.3 ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 52.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர்.
- கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி
- 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தல்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.
இறுதியாக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் அசலங்கா சிறப்பாக விளையாடி இரண்டு ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மேலும், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து கூறியதாவது:-
பீல்டரின் இடையே பந்தை தட்டிவிட்டு எப்படி இரண்டு ரன்களுக்கு கஷ்டப்பட்டு ஓடுவது என்பது குறித்து யோசித்தேன். எதிர்பக்கம் இருந்த பதிரனாவிடமும் கடுமையாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றேன்.
கடைசி பந்தை பவுன்சர் அல்லது யார்க்கர், அதை தவிர்த்து ஸ்லோவர் பந்தாக வீசுவார் என்று நினைத்தேன். இது எனக்கு ஏற்ற பந்துதான். இதனால் நான் உற்சாகமாக இருந்தேன். மெண்டிஸ்- சதீரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் போட்டியை முடிக்க விரும்பினேன். அது என்னுடைய ரோல். என்னுடைய வரலாற்று சாதனை புத்தகத்தில் இது என்னுடைய 2-வது இன்னிங்ஸ்'' என்றார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவரில் 252 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
அந்த அணியின் குசால் மெண்டிஸ் 91 ரன்னில் அவுட்டானார். சரித் அசலங்கா கடைசி வரை ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:
எங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தது. எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.
இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.
இலங்கை அணி பேட்டிங் ஆரம்பத்திலும் சரி, ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டனர்.
கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று தோல்வியை தழுவினோம் என தெரிவித்தார்.
- மழை காரணமாக போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் ரிஸ்வான், ஷபிக் அரை சதத்தால் 252 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் பதிரனா 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 42 ஓவரில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமரவிக்ரமா 48 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 91 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் அசலங்கா பொறுப்புடன் ஆடி 49 ரன்னுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஆவார்.
- ஆசிய கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். கடைசி 2 போட்டிகளில் அவர் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார். இவர் 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் முகமது ஷமி (80 ஒருநாள் போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 106 போட்டிகளில் 150 விக்கெட் எடுத்துள்ளார்.
உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.
கே.எல்.ராகுல் 39 ரன்னும், இஷான் கிஷன் 33 ரன்னும், அக்சர் படேல் 26 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டும், சரித் அசலங்கா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இலங்கை அணி 99 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகே ஜோடி 63 ரன்களை சேர்த்தது. டி சில்வா 41 ரன்னில் அவுட்டானார். கடைசி வரை போராடிய வெல்லாலகே 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ்ப் 4 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு வழங்கப்பட்டது.
- பாகிஸ்தானின் 3-வது மிக மோசமான குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
- பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகும்
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பல்வேறு மோசமான சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.
1. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் நான்காவது ஆகும். 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பெர்முடாவிற்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், 2008-ல் ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
2. பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திய 2-வது அணி இந்தியா ஆகும். 2009-ல் இலங்கை 234 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. 2002-ல் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 1992ல் இங்கிலாந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
3. ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இது நான்காவது வெற்றியாகும். 2009-ல் இந்தியா ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2023-ல் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2000-ல் வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
4. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 3-வது குறைந்த பட்சம் இதுவாகும். 1985-ல் 87 ரன்னில் சுருண்டு உள்ளது. 1997-ல் 116 ரன்னில் சுருண்டுள்ளது. தற்போது 128 ரன்னில் சுருண்டுள்ளது. 1984-ல் சார்ஜாவில் 134 ரன்னில் சுருண்டுள்ளது.
5. பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2008-ல் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 2017-ல் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
6. பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த சுழற்பந்து வீச்சு. 1988-ல் அர்சத் ஆயுப் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். 2005-ல் சச்சின் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். தற்போது குல்தீப் யாதவ் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். 1996-ல் அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார்.
7. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்- தற்போது விராட் கோலி- ராகுல் 233 ரன்கள் எடுத்துள்ளனர். அதன்பின் 1996-ல் சித்து-டெண்டுல்கர் 231 ரன்கள் எடுத்துள்ளனர். 2018-ல் தவான்- ரோகித் சர்மா ஜோடி 210 ரன்கள் எடுத்துள்ளது. 2005-ல் ராகுல் டிராவிட்- சேவாக் ஜோடி 201 ரன்கள் எடுத்துள்ளது.
8. ஆசிய கோப்பையில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
- காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
- விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.
228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.
நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.
பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.
எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.






