என் மலர்
இஸ்ரேல்
- ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.
- முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன.
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதை நடுவானில் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் அழித்தது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.
- ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- ஹமாஸ் அமைப்பினரிடம் 90-க்கும் அதிகமாக பிணைக்கைதிகள் உள்ளனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக ஹமாசிடம் இருந்த 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிணைக்கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர். தங்கள் வீரர்கள் சுரங்கம் சென்றடைவதற்கு சற்று முன் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காசா சுரங்கப்பாதையின் காட்சிகள் பிணைக்கைதிகள் குடும்பங்களுக்குக் காட்டப்பட்டன. அந்தச் சூழ்நிலைகளில் தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதைப் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என தெரிவித்தார்.
- காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த போரை தற்காலிமாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தின. இதற்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஒத்துக் கொண்டன.
இதையடுத்து காசாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள காசாசிட்டி, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் மத்திய காசா பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

முகாம்கள் நடக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றாலும் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முகாம்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் கூறும்போது, போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்த, தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
- ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.
- இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே பேச்சு வார்த்தை மூலம் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர். இன்னும் ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.
இதற்கிடையே காசாவில் உள்ள ஹமாசின் சுரங்கப் பாதையில் பிணைக்கைதி கள் 6 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டது.

இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிணைக் கைதிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரதமர் நெதன்யாகு கூறும்போது, "6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம் (மக்கள்) மன்னிப்பு கேட்கிறேன். இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்" என்றார்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறும் போது, "பிணைக்கைதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு தொடர்ந்து வலியுறுத்தினால் பிணைக்கைதிகள் சவப்பெட்டிகளுக்குள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பி அனுப்பப்படுவார்கள்.
இஸ்ரேல் ராணுவம் நெருங்கினால் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கைதிகளின் பரிமாற்ற ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தடை செய்ததால் கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும், இஸ்ரேல் ராணுவமும்தான் முழு பொறுப்பு" என்றார்.
- ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இன்னும் ஹமாஸ் அமைப்பினர் வசம் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதகிள் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரை கொன்று குவித்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு இழுத்து சென்றனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.
திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வெகுண்டெழுந்தது. அந்த அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மீண்டும் அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
அதேவேளையில் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்பதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார்.
தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் பணய கைதிகளின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த படுகொலைக்காக ஹமாசுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார். மேலும் பணய கைதிகளை கொன்றதன் மூலம் அவர்கள் (ஹமாஸ்) அமைதி ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
பிணைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், உயிருடன் உள்ள மற்ற பிணைக்கைதிகளை உயிரோடு மீட்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்த நிலையில் 29 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளது. இதனால் இன்று இஸ்ரேல் நாட்டின் முழுவதும் பொது சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.
- ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
- இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்றன.
ஜெருசலேம்:
பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகக் கடத்திச்சென்றது. அவர்களில் பலர் வெளிநாட்டினர்.
இதைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
இதனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் மேலும் ஒருவரை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது.
இதுவரை 8 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் வசம் 100-க்கு மேற்பட்ட பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அதில் பலர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவப்பட்டன
- இஸ்ரேலில் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது
இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான் மீது நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து 100 இஸ்ரேலிய பைட்டர் ஜெட் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
வடக்கு இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா பெரியளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கவே இந்த தற்காப்புத் தாக்குதல் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா பதிலடி
இத் தாக்குதலால் லெபனானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் பதிலடி கொடுத்தனர். அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வடக்கு இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்ட்டனர். இஸ்ரேல் முழுவதும் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவைகள் பெரிய அளவில் பாதித்தன. இந்த தாக்குதல்களால் லெபனானில் 3 பேரும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்


போர்
இந்நிலையில் இந்த தாக்குதல்களை மேலும் தொடர இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இருவரும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேல் மீது தொலைதூர ஏவுகணை அல்லது துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு கிடையாது. ஆனால், வரும் காலங்களில் இஸ்ரேல் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்' என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், நாங்கள் முழுமையான போரை எதிர்நோக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எதைச் செய்தும் எங்கள் நாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம், எங்களை காயப்படுத்த நினைப்பவர்களை நாங்கள் காயப்படுத்துவோம், இது [தாற்காலிக நிறுத்தம்] கதையின் முடிவல்ல என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலில் இன்று அதிகாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.
- கோலன் குன்றுகளில் உள்ள 4 தளங்கள் உள்பட 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள், முகாம்கள் மீது 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
போர்ப் பதற்றம்
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கடந்த 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் எந்த நேரமும் போர் மூளலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா கிளர்ச்சி
இதற்கிடையில் லெபனான் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவினர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் ஏவுகணைகளை வீசி அடிக் கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் [தற்காப்பு] தாக்குதல்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலைக் குறி வைத்து பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அதனால் தற்காப்புக்காக தங்கள் தரப்பிலிருந்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள லெபனான் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா பதிலடி
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால் லெபனானில் பெரும் பதற்றம் நிலவியது. மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இத் தாக்குதலால் லெபனானில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.லெபனான் மீதான தாக்குதலையடுத்து இன்று அதிகாலை, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்தன.

அவசர நிலை பிரகடனம்
இதையடுத்து இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் உஷார்ப்படுத்தப்பட்டனர். குறிப்பாக லெபனான் எல்லையை ஒட்டி உள்ள வடக்கு இஸ்ரேல் பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இஸ்ரேலில் இன்று அதிகாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.

பழிக்குப் பலி
இதற்கிடையில் இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, இஸ்ரேலின் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேலுக்குள் ஏவுகணை, டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. மெரோன் தளம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் உள்ள 4 தளங்கள் உள்பட 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள், முகாம்கள் மீது 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
இஸ்ரேலுக்கு எதிரான எங்களது பதிலடித் தாக்குதலின் முதல் கட்டம் முழு வெற்றியுடன் முடிவடைந்தது. ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷுக்ரைக் கொன்றதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காசா போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல்-லெபனான் இடையேயான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அறிவித்துள்ளார்
- போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது
போரும் பேச்சுவார்த்தையும்
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாத காலமாக நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் இருந்துவந்தபோதும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான போர் மூண்டுள்ளது.
தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் இதுவரை இஸ்ரேல் எதற்கும் பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தது. இஸ்ரேலுக்கு உதவும் விதமாக ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அமெரிக்கா தந்து கொண்டிருந்தாலும், விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பெருமுயற்சி எடுத்து வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் நிலையில் உள்ளது என்று கடந்த வாரம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
பாதியில் நின்ற பேச்சுவார்த்தை
கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த வாரம் நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்திருந்தது.
அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா - ஆண்டனி பிளிங்கன் பயணம்
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அமெரிக்கா தயாராக இல்லை. எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து 9 வது முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் நெதன்யாகுவுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே தற்போது முடிவு ஹமாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்டனி பிளிங்கன் வருகையும் அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் அமைந்ததாகவும், முக்கியமான ஒன்று என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் ஹனியே - ஹிஸ்புல்லா காரணிகள்
ஆனால் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க முடிகிறது. ஹனியே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கு நாடுகள் ஈரான் அதிபரை எச்சரித்து வருகின்றனர். ஹெஸ்புல்லா நிலை கொண்டுள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தி வருவதும் நிலைமையை மோசமாகியுள்ளது. நேற்று லெபனானின் ஹிஸ்புல்லா ஆதிக்க பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த புறக் காரணிகள் பாலஸ்தீன போர் நிறுத்தத்தைத் தாமதமாக்கி வருகிறது.
ஹமாஸ் திட்டவட்டம்
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தன்,ஆண்டனி ப்லிங்கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது என்றும் கூறியுள்ளது தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் அது குறித்து எங்களிடம் எந்த தகவலும் கூறப்படவில்லை. நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவிக்கவும் இல்லை . இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று மத்தியஸ்தர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவையில்லை. [பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆதிக்கம் இல்லாத] புதிய கட்டமைப்பை உருவாக்கினால் அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆண்டனி பிளிங்கன் அடுத்ததாக மத்தியஸ்த நாடுகளான எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
- குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.
- போர் சூழலால் மருத்துவப் பணி முடக்கம்
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடக்கியுள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோயை பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஜூன் மாதத்தில் கழிவுநீரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. ஒரு குழந்தைக்கு போலியோ அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர்.
இதையடுத்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பிறகு, தொற்று உறுதி செய்யப்பட்டது என்றனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் மீது கொடிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி7 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இஸ்ரேலை சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி நேதன்யாகு கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கல்லாட் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு படை தலைவர் ஹெர்ஸி ஹலேவி மற்றும் இஸ்ரேலின் முன்னணி உளவு அமைப்புகளான மொசாத் மற்றும் ஷின் பெட் ஆகியவற்றின் தலைவர்களான டேவிட் பர்னி மற்றும் ரோனென் பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 30 ஆம் தேதி ஹிஜ்புல்லா மூத்த தலைவர் ஃபௌத் சகரை (Faud Shukr) இஸ்ரேல் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான், ஹிஜ்புல்லா இடையே பதற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டுவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
- இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
- 50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன.
டெல்அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.
50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இத்தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கத்யுஷா ராக்கெட்டுகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.
ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் குறித்து ஈரான் கருத்து கூறும்போது, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் இன்னும் ஆழமாக சென்று தாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹிஸ்புல்லா இன்னும் அதிக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டின் கேபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அவர் தங்கி இருந்த அறை மீது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்றும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.






