என் மலர்
இஸ்ரேல்
- இஸ்ரேல் ஜெனெரல்களால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது
- கடந்த இரண்டு வாரங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவது குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது
காசா - ஹமாஸ்
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக தாக்குதல் நடத்தி 41 ஆயுரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொன்ற பிறகும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேலால் ஒழிக்க முடியவில்லை. முக்கியமாக காசா நகரின் வேர்களோடு கலந்திருக்கும் ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்பும், போர் யுக்திகளுக்கும் இஸ்ரேலுக்கு இன்னும் குழப்பமானதாகவே உள்ளது.
அதனாலேயே பொதுமக்கள், ஹமாஸ் என பிரித்துப்பார்க்காமல் அனைவர் மீதும் கண்ணில் படும் அனைத்தின்மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் காசாவின் அடிப்படை சுகாதார வசதிகள், உணவு ஆகியவை கிடைக்காமல் பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தில் உள்ளனர்.
ஜெனெரல்ஸ் பட்டினி திட்டம்
இந்நிலையில் நிலைமையைத் தீவிரப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ஜெனெரல்ஸ் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திடம் வடக்கு காசாவுக்குள் எந்த ஒரு உணவும் அத்தியாவசிய பொருட்களும் செல்லாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போடுவதே ஆகும்.
இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஜியோரா எய்லாண்ட் உள்ளிட்ட முக்கிய ஜெனெரல்கள் இந்த திட்டத்திற்கான மூளை. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்தத்திடன்படி வடக்கு காசா மக்களுக்கு அங்கிருந்து மொத்தமாக வெளியேற 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் அந்த பகுதி ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படும்.
எனவே அதன்பின்னும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அந்த ராணுவ மண்டலத்துக்குள் அதாவது வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவு,தண்ணீர், மருந்து என அனைத்தும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டு நிறுத்தப்படும்.
அழிவு
அவர்கள் ஹமாஸ் என்று முத்திரை குத்தப்படுவதால் அவர்கள் மீது சர்வதேச சட்டப்படி எந்த தடையும் இல்லாமல் தாக்குதல் நடத்த முடியும். இதன்படி அங்குள்ள மக்களுக்கு இஸ்ரேல் இரண்டே வழியைத்தான் வழங்குகிறது. ஒன்று மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும், இல்லை பட்டினியால் அங்கேயே சாக வேண்டும். இந்த திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்குத் தீவிரம் காட்டப்படுகிறது.
ஏற்கவே காசாவுக்குள் கடந்த இரண்டு வாரங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவது குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக ஐநா கூறியுள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காசாவில் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது.
- லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதற்கிடையே, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் பினியாமினா பகுதியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிக அளவிலான டிரோன்கள் ஏவப்பட்டன.
இதில் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர் என்று, 50-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
- கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கணினி ஒன்று கைப்படறப்பட்டுள்ளது.
- ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
ரகசிய ஆவணங்கள்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ள நிலையில் ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் குறித்த முக்கிய ரகசியங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கணினியில் இருந்து 36 பக்க ரகசிய ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைதி
அந்த ஆவணத்தின்படி, கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் ஒரு வருடத்துக்கு முன்பாகவே 2022 ஆம் ஆண்டிலேயே நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்ட இந்த திடீர் தாக்குதலுக்காகக் கடந்த 2021 முதல் ஹமாஸ் அமைப்பு எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இஸ்ரேலை நம்ப வைக்க அமைதி காத்து வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டபோதும் ஈரான், ஹிஸ்புல்லா உதவியைப் பெறும்வகையில் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் ஆன பின்னர் காசா தெற்கு முனையிலும், அல்அக்சாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட்டுவந்ததால் ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதில் உறுதியாக இருந்துள்ளது. ஜூலை 2023 இல் லெபனானில் ஈரான் படைத்தலைவரைச் சந்திக்க ஹமாஸ் தரப்பில் இருந்து உயர் மட்ட அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.
உதவி
அப்போது இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டம் குறித்து இரான் படைத்தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிக நேரம் செலவிட்டு கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அந்த கணினியில் கிடைத்த ஆவணத்தின்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடனும் ஹமாஸ் திட்டம் குறித்து விவாதித்துள்ளது.

இந்த சந்திப்புகளின் பின் ஈரான், ஹிஸ்புல்லா பின்னணியில் ஆதரவு அளிக்கும் என்ற தைரியம் ஹிஸ்புல்லவை அக்டோபர் 7 தாக்குதலை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் ஈரானிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்கள் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


திட்டம்
அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேல் நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள், ராமானுவ கமாண்ட் சென்டர்களும் முதலில் குறிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று டுவின் டவர்ஸில் அல் கொய்தா நடத்திய 9/11 தாக்குதலைப் போல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள அஸ்ரேலி [Azrieli] டவர்ஸ் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஹமாஸ் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

- ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஜெருசலேம்:
பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.
- லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த நிலையில், உயிரிழந்த நஸ்ரலாவை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவராக இருந்தவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகு அந்த அமைப்பை வழிநடத்த சரியான தலைமை இல்லை என்றும், அந்த அமைப்பு உடைந்து போயுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தனக்கு பின் ஹிஸ்புல்லாவின் உயர் அதிகாரியான ஹஷேம் சஃபிதீன் அந்த அமைப்பின் தலைவராக செயல்படுவார் என்று நஸ்ரல்லா உயிருடன் இருந்த போதே தெரிவித்து இருந்தார்.
- கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
டெல்அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
மேலும் தெற்கு லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலையும் தொடங்கினர். இதற்கிடையே லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. அந்நாட்டின் வடக்கு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானின் தெற்கு கடற்கரையில் விரைவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம். எனவே பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறோம்.
மீனவர்கள் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். லெபனானின் அவாலி ஆற்றின் தெற்கே வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நதி இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் மத்திய தரைக்கடலில் கலக்கிறது. லெபனானின் தெற்கு கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே காசாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைபாவை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகள் வீசினர். இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த மாதம் 21-ந்தேதி சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
- கத்தாருடன் ரகசியமாக பேசியதாக தகவல்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்து இருக்கிறது.
- வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
- மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
அக்டோபர் 7 தாக்குதல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் இதே நாளில் [அக்டோபர் 7] முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமான போர் தொடங்கி 1 வருடம் ஆகிய நிலையிலும், அமைதி எட்டப்படாமல் அண்டை நாடான லெபனானுக்கும் போர் விரிவடைந்துள்ளது.
ஒரு வருடம்
பாலஸ்தீனதுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈரானும் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.
இதற்கிடையே அக்டோபர் 7 தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதே நாளையொட்டி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், மற்றவை திறந்த வெளியில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபா [Beersheba] மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் நுழைந்த அஹமத் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் எல்லை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அஹமத் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

உலகம்
இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி நேற்றைய தினம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர். மத்திய லண்டனில் சுமார் 40,000 பேர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன், நியூயார்க் என பலேவறு நாடுகளிலும் பெரிய அளவிலான பேரணிகள் நடத்தப்பட்டன. வாஷிங்டன் நகரில் அமைத்துள்ள வெள்ளை மாளிகை அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

- லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
- லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவிவ்:
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
- இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது.
காசா மீதான போரை தொடர்ந்து லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர் பகுதிகள், எல்லையில் உள்ள தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. மேலும் லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் சுமார் 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மேலும் லெபனானின் வடக்கு பகுதியில் முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. வடக்கு பெடாவியில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதேபோல் லெபனானின் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வடக்கு பகுதியிலும் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
- இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருபக்கம் தாக்குதல் மறுப்பக்கம் தனது படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
நாளை (திங்கள் கிழமையின்) தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பேசும் போது "இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம். எல்லையில் தாக்குதல்கள் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய குழு சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், சிறைபிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.
கொடூர தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து, காசாவில் போர் குறைந்த வேகத்தில் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது கவனத்தை வடக்கு லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நடைபெற்று வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
- மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.
டெல் அவிவ்:
பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.
பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.






