என் மலர்
இஸ்ரேல்
- இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கல்லன்ட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , "தற்காலிக நியமனம், நீண்ட காலத்திற்கானது இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் காசிம் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
- பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
- வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரசல்ஸ் பிளான் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது.
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலும் செயல்படத் தடை விதிக்கும் மசோதாவுக்கு நேற்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மசோதா நடைப்முறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும் என்று ஐநா கவலை தெரியவிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. லெபனான்- இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் நீலக் கோட்டில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.

மேலும் வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரல்ஸ் பிளான் என்ற திட்டமும் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.

- ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
- மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
நாமும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி டிரோன்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களை சேதப்படுத்தினால் போரை தொடங்க வேண்டாம். அதேவேளையில் எண்ணெய் கிடங்குகள், எரிசக்திக்கான கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைகளின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ராணுவம் எக்ஸ் வலைதள பக்கத்தில், ஏவுகணைகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.
- ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
நஸ்ரல்லா கொல்லப் பட்டதையடுத்து ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 3 வாரங்க ளுக்கு முன்பு நடந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா வின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், ஹிஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹிஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கடந்த 8-ந்தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஹஷேம் சபிதீன் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இதை ஹிஸ்புல்லா இயக்கம் இன்னும் உறுதி செய்ய வில்லை.
இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது.
- இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெருசலேம்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், லெபனானில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்திருந்தது.
கடந்த 19-ந்தேதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தனர். அந்த 2 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு ராக்கெட் திறந்தவெளி பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே போல், டெல் அவிவ் நகரத்தின் மீதும், வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீதும் சுமார் 20 ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதே சமயம், ஒரு குடியிருப்பு கட்டிடம் மற்றும் சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் உள்ள ஹைபா, கிலிலாட் பகுதிகளில் செயல்பட்டு வரும் மொசாட் தலைமையகம் மற்றும் சைபர் உளவுத்துறை பிரிவு ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது.
- அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்துகின்றனர்.
நேதன்யாகு வீடு
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தற்போது லெபனான் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதும் தாக்குதலை தொடர்கிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தியது.
சூளுரை
இதில் உயர் தப்பிய நேதன்யாகு ஹிஸ்புல்லாவை அழித்திழிக்க சூளுரை செய்துள்ளார். அதன்படி லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு பணபலம் கொடுக்கும் அல் குவார்த் அல் - ஹசன் என்ற பொருளாதார பிரிவு உள்ளிட்ட முக்கிய இலக்குகளை தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே அந்த இலக்குகளுக்கு அருகில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
அல் குவார்த் அல் - ஹசன்
அல் குவார்த் அல் - ஹசன் மூலமே ஹிஸ்புல்லாவுக்கு ஈரானிடம் இருந்தும், மக்கள் நன்கொடையாகவும் வரும் பணம் பரிவர்த்தனை செய்யபடுகிறது. இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்த அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்தி வருவதால் இதன் மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தலைமையகம்
இதற்கிடையே லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.

100 ராக்கெட்
மேலும் நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது
- பிரதமர் நேதன்யாகு குடியிருப்பு அமைந்த செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின.
டெல் அவிவ்:
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது
லெபனானில் இருந்து நேற்று ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறியதாவது:
இன்று என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது.
ஈரானுக்கும் அதன் தீமையின் அச்சில் உள்ள அதன் பினாமிகளுக்கும் சொல்கிறேன்: இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம்.
எங்கள் பிணைக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம். நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம்.
நமது போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
- பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது
பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் டிரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த சமயத்தில் நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை
மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாவும் அதை அழித்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலைக்கு பின்னர் புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். நீண்ட கால தேடலுக்கு பிறகு தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
"காசாவில் நடைபெறும் போரின் இறுதி இதுவல்ல என்ற போதிலும், முடிவுக்கான ஆரம்ப புள்ளி இதுதான். சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல்," என்று பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட அவரின் கடைசி நொடிகள் குறித்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ காண்பிக்கும் யாஹ்யா சின்வாரின் கடைசி நொடிகள் டிரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். நீண்ட கால தேடலுக்கு பிறகு தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. போரின் துவக்கத்தின் போது ஹமாஸ் அழித்து விடுவதாக கூறிய யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
"காசாவில் நடைபெறும் போரின் இறுதி இதுவல்ல என்ற போதிலும், முடிவுக்கான ஆரம்ப புள்ளி இதுதான். சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல்," என்று பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியானது.
- ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் உளவுத்துறையும், ராணுவமும் தொடர்ச்சியாக காசாவில் சின்வாரை தேடியது. இந்த நிலையில், சின்வார் கொல்லப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் கொல்லப்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்வார் கொல்லப்பட்டதை பெயர் சொல்ல விரும்பாத இஸ்ரேல் ராணுவ அதிகாரி இந்த தகவலை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
- இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது
- 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர்.
காசா:
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் என்றும், அவர்கள் பொதுமக்களின் இருப்பிடங்களை முகாம்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.






