என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
    • ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டார்
    • பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தியும் ஹமாஸ் அமைப்பை அழிக்க முடியமால் இஸ்ரேல் திணறி வருகிறது.

    இதற்கிடையே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதராவாக செயல்படும் ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் இஸ்ரேல் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. தொடர்ந்து அடுத்த தலைவராக அறியப்பட்ட ஹாசன் ஷபிதைனி கொல்லப்பட்டார்.

    எனவே தற்போது நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் ஈரான் உடனும் வம்பிழுத்து வருகிறது.

    அந்நாட்டின் அணு ஆயுத தளங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார்.

    தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பல தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

    இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

    இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

    இந்த சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

    இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது என ஈரான் அரசு கூறியிருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார். தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "ஈரான் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட எதிர்ப்பு கூட்டணிகளுக்கு எதிராக, எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

    இந்நிலையில், ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், திரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கிய ஒரு ஏவுகணையால் 11 பேர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரோடும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் போரிட்டு வருகிறது. இந்த சூழலில், ஈரான் தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. அதே போல் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்கள்.

    இதற்கிடையே ஈரானும் சமீபத்தில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இதில் ரேடார் மற்றும் தாமிர் இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேல் மீது ஏவப்படும் ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணித்து நடு வானில் தாக்கி அழிக்கும்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான அயன் பீம்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அயன் பீம், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை ஒளியின் வேகத்தில் ஈடுபட முடியும். உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும். அயன் டோமும் கடினமாக உள்ள இலக்குகளையும் தாக்கும். இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அயன் பீம் சிறிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பெரிய இலக்குகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.

    இந்த லேசர் பாதுகாப்பு அமைப்பு நாட்டின் அயர்ன் டோம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை பூர்த்தி செய்யும். இது போரின் புதிய சகாப்தத்தை அறிவிக்கும் என்று தெரிவித்தது.

    அயர்ன் டோமை இயக்கும் செலவில் ஒரு பகுதியிலேயே அயன் பீம் அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
    • இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அந்த அமைப்பிற்கு ஆதரவாக உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை முன்னெடுக்கிறது இஸ்ரேல்.

    இதற்கிடையே சுமார் 1½ லட்சம் கிலோ வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி. கேதரின் கப்பல் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்த ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.

    • இரண்டு குழுக்கள் உளவுப்பணியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கண்டுபிடித்தது.
    • அதனைத் தொடர்ந்து ஒரு தம்பதி ஈரானுக்கு உளவு வேலை பார்த்துள்ளதாக கைது செய்துள்ளது.

    இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

    ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே இரண்டு தரப்பிலும் இருந்து உளவு பார்க்க ஆட்களை நியமிப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஈரானில் உளவாளிகளை வைத்துதான் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.

    ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது நேரடியாக தாக்குதல் நடத்த முடியாது. அங்குள்ள ராணுவ நிலைகள், முக்கியமான வளங்கள் எங்கே இருக்கின்றன போன்ற ரகிசிய தகவலை பெற வேண்டும். அதற்காக உளவு சொல்லக் கூடியவர்களை தயார் செய்வார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைப்பார்கள். இல்லை எனில் பணம் கொடுத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களையே உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.

    இந்த உளவுப் பணியில் இஸ்ரேல் மிகவும் பயங்கரமாக செயல்படும். அவர்கள் யாரை உளவு பார்க்க பணியமர்த்தியுள்ளார் என எதிரி நாடுகளால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொசாட் தனது உளவுப்பணிகளை செய்து வருகிறது.

    அப்பேற்பட்ட மொசாட் உள்ள இஸ்ரேல் நாட்டிலேயே ஈரான் உளவு பார்ப்பதற்கான ஆட்களை தாயர் படுத்தியுள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழுக்கள் ஈரானுக்கு உளவு பார்த்ததாக, அதில் உள்ளவர்களை கைது செய்தது இஸ்ரேல் போலீஸ். இந்த நிலையில் தற்போது ஒரு தம்பதி உளவு வேலை பார்த்தாக சந்தேகித்து கைது செய்துள்ளனர்.

    இஸ்ரேலியர்களை தொடர்ந்து உளவாளி வேலைகளுக்கு அமர்த்தும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் மத்திய நகரான லாட்டை சேர்ந்த அந்த ஜோடி, தேசிய கட்டமைப்பு, பாதுகாப்பு இடங்கள் போன்றவை தொடர்பாக தகவல் சேகரித்துள்ளனர்.

    • அக்டோபர் 1-ந்தேதி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • அதன்பின் லெபனானில் இருந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

    ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரிமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஐந்து பேர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கின. ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

    லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரம் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த வருடத்தில் இந்து லெபனான் மீது இஸ்ரேல நடத்திய தாக்குதலில 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.

    • ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.
    • முதன்முறையாக கிராம மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.

    இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

    அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுதான் எங்களது போரின் திட்டம் என இஸ்ரேல் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது. அத்துடன் லெபனான் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அத்துடன் குறைந்த அளவு தரைவழி தாக்குதலையும் நடத்தியுள்ளது.

    தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவரையும் தாக்குதல் நடத்தி கொன்றது.

    இந்த நிலையில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை குறிவைத்துள்ளது. இதனால் அந்த நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காலி செய்ய சொல்லும் இடத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய பழங்காலத்து ரோமன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் உள்ளது.

    லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதிக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 2,790 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பால்பெக் நகர் பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முக்கிய வழியாகும். இந்த பகுதிகளை ஏற்கனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளது.

    ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக வெளியேறும் எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்.

    • அந்த தவறை செய்தால், கடந்த முறை குறிவைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம்.
    • நிகழ்வு முடிவடையவில்லை, நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என்றார்.

    இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக 25 நாட்களுக்கு பிறகு ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

    ஈரானின் அணு நிலையங்கள் தாக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் ராணுவ தளங்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி கூறும்போது, இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தினால் அவர்களை மிகக் கடுமையாக" தாக்குவோம். அந்த தவறை செய்தால், கடந்த முறை குறிவைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம். ஈரானை எவ்வாறு வெற்றி அடைவது, நாங்கள் பயன்படுத்தாத திறன்களைக் கூட எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிவோம். ஈரானில் சில இலக்குகள் எங்களின் பார்வையில் உள்ளது.

    இந்த நிகழ்வு முடிவடையவில்லை, நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என்றார். இதன்மூலம் ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

     


    ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கல்லன்ட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , "தற்காலிக நியமனம், நீண்ட காலத்திற்கானது இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் காசிம் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

    • பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
    • வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரசல்ஸ் பிளான் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது.

    பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.

    உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலும் செயல்படத் தடை விதிக்கும் மசோதாவுக்கு நேற்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

     

    இந்த மசோதா நடைப்முறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும்  என்று ஐநா கவலை தெரியவிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

     

    முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. லெபனான்- இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் நீலக் கோட்டில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.

     

    மேலும் வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரல்ஸ் பிளான் என்ற திட்டமும் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
    • மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.

    நாமும் இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி டிரோன்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களை சேதப்படுத்தினால் போரை தொடங்க வேண்டாம். அதேவேளையில் எண்ணெய் கிடங்குகள், எரிசக்திக்கான கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூத்த ராணுவ அதிகாரிகளை கொன்றாலோ நாம் உக்கிரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைகளின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ராணுவம் எக்ஸ் வலைதள பக்கத்தில், ஏவுகணைகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது.

    ×