என் மலர்
ஆஸ்திரேலியா
- இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
- முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது.
ஹோபர்ட்:
11-வது மகளிர் பிக்பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.
இதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. சோபி டிவைன் 34 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர்.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சார்பில் லின்சே ஸ்மித், ஹீதர் கிரஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான லிசெல் லீ அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
லிசெல் லீ 77 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்ததால், அவர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடை. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் உள்பட 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்தனர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னும், ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், அலெக்ஸ் கேரி 63 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 44 ரன்கள் எடுத்தார். ஒல்லி போப் 26 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 43 ரன் பின்தங்கியுள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால் 2வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதில் வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- அந்த அணியின் ஜோ ரூட் 138 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 205 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
- தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32.5 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 34.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
205 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 28. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து 123 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் சேசிங்கின்போது அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 17-21 என இழந்த லக்ஷயா சென் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்ஷயா சென், ஜப்பானின் யூஷி டனகா உடன் மோதுகிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் - பிக்ரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
கான்பெரா:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் வூ குவான் சன்-சிங் ஹெங் சூ
ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சீ யூ ஜென் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடாய் நரோகாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தைவானின் லீ சியா ஹோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ லீ-யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மார்சிலினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.






