என் மலர்
விளையாட்டு
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி முதல் அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா 304 ரன்கள் குவித்த நிலையில், குஜராத் 119 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
சவுராஷ்டிரா - குஜராத் அணிகள் மோதும் ரஞ்சி டிராபியின் முதல் அரையிறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக்சன் 69 ரன்களுடனும், ஜானி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜாக்சன் சதம் அடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜானி 29 ரன்கள் சேர்த்தார். மன்கட், ஜடேஜா தலா 15 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 304 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.
பின்னர் குஜராத் முதல் இன்னிங்சை தொடங்கியது. சவுராஷ்டிரா வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் குஜராத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 119 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக்சன் 69 ரன்களுடனும், ஜானி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜாக்சன் சதம் அடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜானி 29 ரன்கள் சேர்த்தார். மன்கட், ஜடேஜா தலா 15 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 304 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.
பின்னர் குஜராத் முதல் இன்னிங்சை தொடங்கியது. சவுராஷ்டிரா வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் குஜராத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 119 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
பெண்கள் டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 143 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஸ்கிவர் 57 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் ஜோன்ஸ் 13 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அந்த அணி 97 ரன்னில் சுருண்டது.
இதனால் இங்கிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ‘பி’ பிரிவில் இங்கிலாந்து நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. இதேபிரிவில் இடம்பிடித்துள்ளத மற்றொரு அணியான தென்ஆப்பிரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 143 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஸ்கிவர் 57 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் ஜோன்ஸ் 13 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அந்த அணி 97 ரன்னில் சுருண்டது.
இதனால் இங்கிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ‘பி’ பிரிவில் இங்கிலாந்து நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. இதேபிரிவில் இடம்பிடித்துள்ளத மற்றொரு அணியான தென்ஆப்பிரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
நீல் வாக்னர் அடித்த பந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அற்புதமான வகையில் கேட்ச் பிடித்து அசத்தினார் ஜடேஜா.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது 9-வது விக்கெட்டுக்கு ஜாமிசன் உடன் நீல் வாக்னர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் நீல் வாக்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தை டீம் ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடித்தார். அந்த பந்தை ஜடேஜா சரியான கணித்து ஜம்ப் செய்து ஒரு கையால் அற்புதமாக பிடித்தார். அவர் கேட்ச் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரீ-பிளேயில் அவர் அதை அற்புதமாக பிடித்தது தெரியவந்தது. நீல் வாக்னர் கூட ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு வெளியேறினார். இவரது கேட்ச்சால் கைல் ஜாமிசன் (49)- நீல் வாக்னர் ஜோடி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
நான் அந்த கேட்ச்-ஐ பிடிக்கும்போது அதை பிடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஜடேஜா இதுகுறித்து கூறுகையில் ‘‘நீல் வாக்னர் டீப் ஸ்கொயர் லெக்கில் பந்தை அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் நின்ற இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காற்று வீசியதால் பந்து வேகமாக வந்தது. நான் கையை நீட்டும்போது அதில் மாட்டிக் கொண்டது. கேட்ச்-ஐ பிடித்த போதிலும், எப்படி பிடித்தேன் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. நாங்கள் ஒரு குழுவாக சிறப்பாக பந்து வீசினோம்’’ என்றார்.
இந்த நிலையில்தான் நீல் வாக்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தை டீம் ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடித்தார். அந்த பந்தை ஜடேஜா சரியான கணித்து ஜம்ப் செய்து ஒரு கையால் அற்புதமாக பிடித்தார். அவர் கேட்ச் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரீ-பிளேயில் அவர் அதை அற்புதமாக பிடித்தது தெரியவந்தது. நீல் வாக்னர் கூட ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு வெளியேறினார். இவரது கேட்ச்சால் கைல் ஜாமிசன் (49)- நீல் வாக்னர் ஜோடி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
நான் அந்த கேட்ச்-ஐ பிடிக்கும்போது அதை பிடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஜடேஜா இதுகுறித்து கூறுகையில் ‘‘நீல் வாக்னர் டீப் ஸ்கொயர் லெக்கில் பந்தை அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் நின்ற இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காற்று வீசியதால் பந்து வேகமாக வந்தது. நான் கையை நீட்டும்போது அதில் மாட்டிக் கொண்டது. கேட்ச்-ஐ பிடித்த போதிலும், எப்படி பிடித்தேன் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. நாங்கள் ஒரு குழுவாக சிறப்பாக பந்து வீசினோம்’’ என்றார்.
#jadeja#NZvsIND some catch this pic.twitter.com/BpaAY1C7SA
— kiran Reddy (@rockyrddy) March 1, 2020
உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்கி அவுட்டாக்கியது திருப்தி அளிக்கிறது என டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் சேர்த்தன. பின்னர் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தனர்.
இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 90 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நான்கு இன்னிங்சில் விளையாடிய அவரால் ஒரு இன்னிங்சில் கூட 20 ரன்களை தாண்ட முடியவில்லை.
இந்நிலையில் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்து, அவரது விக்கெட்டை வீழ்த்தியது திருப்தி அளிக்கிறது என நியூசிலாநது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையிலேயே அவர் எங்களுக்கு மிகப்பெரிய வீரர். அவர் மீது போதுமான அளவு நெருக்கடியை சுமத்த முயற்சி செய்தோம். பவுண்டரிக்கான பந்துகளை வீசி அவரை தவறு செய்ய தூண்டினோம்.
அவரை இரண்டு முறை நாங்கள் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் அவர்கள் குறைவான பவுன்சர் மற்றும் ஸ்லோ பிட்சியில் விளையாடக் கூடியவர்கள். நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொள்ள நேரம் தேவைப்படும்’’ என்றார்.
இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 90 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நான்கு இன்னிங்சில் விளையாடிய அவரால் ஒரு இன்னிங்சில் கூட 20 ரன்களை தாண்ட முடியவில்லை.
இந்நிலையில் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்து, அவரது விக்கெட்டை வீழ்த்தியது திருப்தி அளிக்கிறது என நியூசிலாநது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையிலேயே அவர் எங்களுக்கு மிகப்பெரிய வீரர். அவர் மீது போதுமான அளவு நெருக்கடியை சுமத்த முயற்சி செய்தோம். பவுண்டரிக்கான பந்துகளை வீசி அவரை தவறு செய்ய தூண்டினோம்.
அவரை இரண்டு முறை நாங்கள் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் அவர்கள் குறைவான பவுன்சர் மற்றும் ஸ்லோ பிட்சியில் விளையாடக் கூடியவர்கள். நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொள்ள நேரம் தேவைப்படும்’’ என்றார்.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்காலின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் சதத்தால் பெங்கால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் 120 ரன்களுடனும், இஷான் பொரேல் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் பொரேல் 7 ரன்னில் ஆட்டமிழக்க பெங்கால் 312 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கர்நாடகா அணி சார்பில் மிதும், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் தலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேஎல் ராகுல், ஆர் சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சமர்த் ரன்ஏதும் எடுக்காம் டக்அவுட் ஆனார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலும், சித்தார்த் 14 ரன்னிலும், மணிஷ் பாண்டே 12 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே கேஎல் ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடநிலை வீரர்களான கே. கவுதம் 31 ரன்களும், மிதுன் 24 ரன்களும் அடிக்க கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பெங்கால் அணி சார்பில் இஷான் பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் சதத்தால் பெங்கால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் 120 ரன்களுடனும், இஷான் பொரேல் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் பொரேல் 7 ரன்னில் ஆட்டமிழக்க பெங்கால் 312 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கர்நாடகா அணி சார்பில் மிதும், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் தலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேஎல் ராகுல், ஆர் சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சமர்த் ரன்ஏதும் எடுக்காம் டக்அவுட் ஆனார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலும், சித்தார்த் 14 ரன்னிலும், மணிஷ் பாண்டே 12 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே கேஎல் ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடநிலை வீரர்களான கே. கவுதம் 31 ரன்களும், மிதுன் 24 ரன்களும் அடிக்க கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பெங்கால் அணி சார்பில் இஷான் பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை வைத்து குறைசொல்லும் விளையாட்டில் ஈடபட விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இந்தியா 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அரைசதம் அடித்த பின், ஹனுமா விஹாரி மற்றும் புஜாரா தேவையில்லாமல் ஆட்டமிழந்தனர்.
பும்ரா, ஷமி இணைந்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஏழு ரன் முன்னிலையுடன் களம் இறங்கிய இந்தியா 2-வது இன்னிங்சில் இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 90 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் மீது பழியை போட்டி குறைகூறும் ஆட்டத்தை விளையாட விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லமாட்டோம். இது எங்கள் அணியின் பழக்கம். சில நேரம் எங்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை என்றால், அது பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்காது.
ஒரு அணியாக நாங்கள் கடினமாக முயற்சி செய்து வெற்றி பெற முயற்சிப்போம். ஆனால் சூழ்நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய இரண்டு பேட்ஸ்மேன்கள் (விஹாரி, ரிஷப் பண்ட்) களத்தில் உள்ளனர். அதனால் நாளை சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்ப முயற்சிப்போம்.
நாங்கள் ஒரு அணியாக கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் விரும்பியதை விட இன்று அதிக விக்கெட்டுக்களை இழந்து விட்டோம். இருந்தாலும் குறைகூறும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை. ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட முயற்சி செய்கிறோம்’’ என்றார்.
பும்ரா, ஷமி இணைந்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஏழு ரன் முன்னிலையுடன் களம் இறங்கிய இந்தியா 2-வது இன்னிங்சில் இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 90 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் மீது பழியை போட்டி குறைகூறும் ஆட்டத்தை விளையாட விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லமாட்டோம். இது எங்கள் அணியின் பழக்கம். சில நேரம் எங்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை என்றால், அது பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்காது.
ஒரு அணியாக நாங்கள் கடினமாக முயற்சி செய்து வெற்றி பெற முயற்சிப்போம். ஆனால் சூழ்நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய இரண்டு பேட்ஸ்மேன்கள் (விஹாரி, ரிஷப் பண்ட்) களத்தில் உள்ளனர். அதனால் நாளை சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்ப முயற்சிப்போம்.
நாங்கள் ஒரு அணியாக கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் விரும்பியதை விட இன்று அதிக விக்கெட்டுக்களை இழந்து விட்டோம். இருந்தாலும் குறைகூறும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை. ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட முயற்சி செய்கிறோம்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்ஜேன் காப் 31 ரன்களும், லாரா வால்வார்த் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது.
பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் ஜவேரியா கான் 31 ரன்களும், அலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் அடித்த போதிலும் பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்ஜேன் காப் 31 ரன்களும், லாரா வால்வார்த் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது.
பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் ஜவேரியா கான் 31 ரன்களும், அலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் அடித்த போதிலும் பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த ரபாடா காயம் காரணமாக இந்தியா தொடரிலும் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது இடுப்பு பகுதியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபடா, இந்தியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் (மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை) இருந்து விலகியிருக்கிறார்.
இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 29-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபடா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 29-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபடா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சும் மோதினர்.
இதில் ரபேல் நடால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். பந்துவீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். இதனால் முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ஓவரில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியில் அதிகமாக புஜாரா 24 ரன் எடுத்தார். தற்போது இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
பெர்ல்:
ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்களில் அவுட்டானார். டேவிட் மில்லர் 64 ரன்னும், கைல் வெர்னே 48 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவன் ஸ்மித் 76 ரன்னும், லாபஸ் சாக்னே 41 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் நிதானமாக ஆடி அரை சதமடித்தார்.
பிளண்டல் 30 ரன்னும், கிராண்ட்ஹோம் 26 ரன்னும், வாக்னர் 21 ரன்னும் எடுத்தனர்.
பந்து வீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அவ்வப்போது பவுண்டரி விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்னில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவரில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.






