என் மலர்
விளையாட்டு
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது.
ஸ்டோனிஸ் 26 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்விஷா 23 பந்தில் 42 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரிஷப் பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி,2 சிக்சர் ) எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , உதனா, மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் டெல்லி அணி 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 39 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஆன்ரிச் நார்ட்ஜே, அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இதன்மூலம் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தினால் அந்த அணி முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.
பெங்களூர் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 9-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 10-ந்தேதி எதிர்கொள்கிறது.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி 43 ரன்கள் எடுத்தார்.
10 ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.
20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார். வி1ராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ரன் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ரன்னை எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் வருமாறு:-
1. கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)-13,296 ரன்
2. போல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்)- 10,370 ரன்
3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ரன்
4. மெக்குல்லம் (நியூசி லாந்து)- 9922 ரன்
5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)- 9451 ரன்
6. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- 9646 ரன்
7. வீராட்கோலி (இந்தியா) - 9033 ரன்
துபாய்:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக பணியாற்றினார்.
அப்போது ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டம் இழக்க செய்தார். பந்து வீசுவதற்கு முன்பு கிரீசை விட்டு வெளியே வந்ததால் பட்லரை, அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார்.
கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இது இருந்தாலும் அஸ்வினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் டெல்லி அணிக்கு மாறினார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கட் முறையில் பேட்ஸ்மென்களை அவுட் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அஸ்வினை அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சை டெல்லி பந்துவீச்சாளர் அஸ்வின் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.
ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தை அஸ்வின் வீசும் போது பிஞ்ச் கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை கவனித்த அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு பிஞ்சை எச்சரிக்கை செய்தார். அவர் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.

பாண்டிங்கின் அறிவுரையை ஏற்றதால் அஸ்வின் இப்படி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதைபார்த்து மைதானத்தில் இருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் வீரர்கள் சிரித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 179 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதில் தன்வசப்படுத்தியது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 7-5, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் புக்சோவிக்சை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கச்சனோவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான டொமி னிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ வாய்ப்பில் முன்னேறிய ஹூகோ காஸ்டனை (பிரான்ஸ்) போராடி வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக் கும் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூவாய் ஜாங்கை தோற்கடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்ட் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோ சாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார்.






