என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது.

    ஸ்டோனிஸ் 26 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்விஷா 23 பந்தில் 42 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரி‌ஷப் பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி,2 சிக்சர் ) எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , உதனா, மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் டெல்லி அணி 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 39 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஆன்ரிச் நார்ட்ஜே, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இதன்மூலம் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தினால் அந்த அணி முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.

    பெங்களூர் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 9-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 10-ந்தேதி எதிர்கொள்கிறது.

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

    டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி 43 ரன்கள் எடுத்தார்.

    10 ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.

    20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார். வி1ராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ரன் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ரன்னை எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் வருமாறு:-

    1. கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)-13,296 ரன்

    2. போல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்)- 10,370 ரன்

    3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ரன்

    4. மெக்குல்லம் (நியூசி லாந்து)- 9922 ரன்

    5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)- 9451 ரன்

    6. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- 9646 ரன்

    7. வீராட்கோலி (இந்தியா) - 9033 ரன்

    பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரோன் பிஞ்சை மன்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்யாததற்கு அவரது பயிற்சியாளர் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

    துபாய்:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக பணியாற்றினார்.

    அப்போது ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டம் இழக்க செய்தார். பந்து வீசுவதற்கு முன்பு கிரீசை விட்டு வெளியே வந்ததால் பட்லரை, அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார்.

    கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இது இருந்தாலும் அஸ்வினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் டெல்லி அணிக்கு மாறினார்.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கட் முறையில் பேட்ஸ்மென்களை அவுட் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அஸ்வினை அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சை டெல்லி பந்துவீச்சாளர் அஸ்வின் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.

    ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தை அஸ்வின் வீசும் போது பிஞ்ச் கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை கவனித்த அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு பிஞ்சை எச்சரிக்கை செய்தார். அவர் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.

    ரிக்கி பாண்டிங்

    பாண்டிங்கின் அறிவுரையை ஏற்றதால் அஸ்வின் இப்படி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதைபார்த்து மைதானத்தில் இருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் வீரர்கள் சிரித்தனர்.

    ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய். ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் உள்ள   கடையில் பொருட்கள் வாங்க  சாலையைக்  கடந்த போது கார் விபத்தில் சிக்கினார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தார்.

    இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு எனவும் இரங்கல் செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 
    ‘வரும் ஆட்டங்களிலும் நாங்கள் இதேபோல் சிறப்பாக செயல்படுவோம்’ என்று சென்னை அணியின் கேப்டன் டோனி நம்பிக்கை தெரிவித்தார்.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 179 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதில் தன்வசப்படுத்தியது.

    சென்னை அணி வெற்றி பெற்றதும் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் உற்சாக போஸ் கொடுக்கின்றனர்.


    ஷேன் வாட்சன் (53 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 83 ரன்கள்), பாப் டுபிளிஸ்சிஸ் (53 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 87 ரன்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் தொடக்க விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. தொடக்க விக்கெட்டுக்கு சென்னை அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும். முதல் 4 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.

    வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ‘சிறிய விஷயங்களை நாங்கள் சரியாக செய்தோம் என்று நினைக்கிறேன். அது தான் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. எங்களுக்கு என்ன தேவையானதாக இருந்ததோ? அந்த மாதிரியான தொடக்கத்தை நாங்கள் பேட்டிங்கில் பெற்றோம். இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை அடுத்து வரும் போட்டிகளிலும் எங்களால் பிரதிபலிக்க முடியும் என்று நம்புகிறோம். எங்கள் அணியின் நிலையான வீரர் தேர்வுக்கான பாராட்டுகள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கையே சாரும். நல்ல விஷயம் என்னவென்றால் எங்களிடம் ஒரே திட்டம் உள்ளது. அதற்காக விவாதம் இல்லை என்று சொல்ல முடியாது.

    ஆனால் ஒரே திட்டம் தான் எங்களுக்குரிய உறவுக்கு காரணமாகும். கடந்த 3 ஆட்டங்களில் சந்தித்த தோல்வியை பார்க்கையில் எதிரணியின் ரன்னை கட்டுப்படுத்தி கூடுதல் நெருக்கடி அளிக்க தவறி விட்டோம் என்று கருதுகிறேன். ஒவ்வொரு அணியிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் உள்ளனர். அவர்களால் எதிரணியின் பந்து வீச்சு திட்டத்தை தகர்க்க முடியும். ஷேன் வாட்சன் வலைப்பயிற்சியில் நன்றாக அடித்து ஆடினார். அதனை களத்திலும் செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதற்கு சற்று காலம் பிடித்து இருக்கிறது. பிளிஸ்சில் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடியவர். அத்துடன் அவர் தனது வித்தியாசமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை குழப்பி விடுவார். சரியான ஷாட்களை வாட்சன், பிளிஸ்சிஸ் ஆகியோர் ஆடி எங்களுக்கு தேவையாக இருந்த உத்வேகத்தை அளித்தார்கள்’ என்றார்.
    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணி 165 ரன்கள் அடித்தால் வென்று என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த போட்டியில் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர்  குமார் சிறப்பாக பந்து வீசினார்.

    பரபரப்பான கட்டத்தில் போட்டியின் 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தை வீசும்போது அவரது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது. அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முயன்றார். ஆனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இதனால், அந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், கணுக்கால் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புவனேஷ்வர் குமார் விலகும்பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். 

    முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விக்குப்பின் தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் புவனேஷ்வர் குமாரின் விலகல் குறித்த தகவல் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. 
    ஏற்கனவே, மிட்செல் மார்ஷ் காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 7-5, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் புக்சோவிக்சை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கச்சனோவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

    முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான டொமி னிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ வாய்ப்பில் முன்னேறிய ஹூகோ காஸ்டனை (பிரான்ஸ்) போராடி வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக் கும் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூவாய் ஜாங்கை தோற்கடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்ட் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோ சாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது.
    துபாய்:    

    ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது.

    அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை அளித்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். 

    அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 23 பந்தில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் விளாசி சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். அதேபோல் மற்றொரு வீரரான ஷிகர் தவான் 28 பந்தில் 32 ரன் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

     4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 

    25 பந்தில் 3 பவுண்டரில் 2 சிக்சர் உள்பட 37 ரன் எடுத்த நிலையில் பண்ட் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 இக்சர்கள் உள்பட 53 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

    இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பெங்களூர் தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

    4 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதேபோல் 13 ரன் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் வெளியேறினார். 

    அடுத்துவந்த கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடி 43 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் ரபாடாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

    இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வியடைந்தது.

    டெல்லி தரப்பில் அந்த அணியின் ரபாடா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.   
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா விளையாடி வந்தார். கொல்கத்தா அணிக்கெதிராக பந்து வீசியபோது, பேட்ஸ்மேன் அடித்த பந்தை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது வலது கை மோதிர விரலில் பந்து பலமாக தாக்கியது.

    இதனால் 2 ஓவர்களோடு வெளியேறினார். மிஷ்ராவுக்கு தசை நார் கிழிந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடாத நிலை ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    மார்கஸ் ஸ்டாய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது.

    அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் ஓவரில் பிரித்வி ஷா மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

    உடனடியாக விராட் கோலி சுழற்பந்தை கொண்டு வந்தார். வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசானர். ஆனால் நவ்தீப் சைனி வீசிய 3-வது ஓவரில் டெல்லி 14 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 4 ரன்கள் மட்டுமே வி்ட்டுக்கொடுத்தார்.

    வாஷிங்டன் சுந்தர் பந்து எடுபட்டதால் 5-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் 18 ரன்கள் அடித்தது டெல்லி. 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் அடித்தது.

    7-வது ஓவரை சிராஜ் முகமது வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அதன்பின் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்வில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து ஷ்ரோயஸ் அய்யர் களம் இறங்கினார்.

    10-வது ஓவரின் 4-வது பந்தில் தவான் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 12-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அப்போது டெல்லி 11.3 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 14-வது ஓவரில் 15 ரன்களும், 15-வது ஓவரில் 17 ரன்களும் அடித்தது டெல்லி. இந்த ஓவரின் கடைசி பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் கொடுத்த கேட்ச்-ஐ ஆர்சிபி வீரர்கள் பிடிக்கத் தவறினர்.

    நவ்தீப் சைனி வீசிய 17-வது ஓவரில் 18 ரன்கள் அடித்தது. 19-வது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ரிஷப் பண்ட் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்டாய்னிஸ் 24 பந்தில் அரைசதம் அடித்தார். உடனான வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 12 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே சேஸிங் செய்த நம்பிக்கையில் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 19-வது ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆர்.சி.பி. - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    நேற்று சென்னை - பஞ்சாப் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் போட்டி நடைபெறுவதால், சிஎஸ்கே செஸிங் செய்த நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல் அணி விவரம்:-

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர்,  4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின். 8. ரபடா, 9. நோர்ட்ஜ், 10. அக்சார் பட்டேல், 11. ஹர்சல் பட்டேல்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

    1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. முகமது சிராஜ், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. மொயீன் அலி, 11. இசுரு உடானா.
    டெல்லி அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட பஞ்சாப் அணிக்கு, இந்தத் தொடரில் இதுவரை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
    அனில் கும்ப்னே, கேஎல் ராகுல் காம்பினேசனில் பஞ்சாப் அணி புது எழுச்சியுடன் விளையாடும் என ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கணிக்கப்பட்டது. முதல் போட்டியில டெல்லியை எதிர்கொண்டது. 158 ரன் இலக்கை தொடக்கதத்தில் எட்ட திணறியது. மயங்க் அகர்வால் அதிரடி காட்ட கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரன் எடுக்காத மயங்க் அகர்வால், 5-வது பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஜோர்டான் ஆட்டமிழக்க சூப்பர் ஓவரானது. இதில் தோல்வியடைந்தது.

    அடுத்த போட்டியில் கேஎல் ராகுல் அதிரடி சதத்தால் ஆர்சிபியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. என்றாலும் அடுத்தடுத்து மூன்று போட்களை ராஜஸ்தானுக்கு எதிராக, மும்பைக்கு எதிராக. சென்னைக்கு எதிராக எந்தவித போராட்டமின்றி தோல்வியை சந்தித்தது.

    ஐபிஎல் ரன் குவிப்பில் கேஎல் ராகுல் 302 ரன்களுடன் முதல் இடத்தையும், மயங்க் அகர்வால் 272 ரன்களுடனும் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி 8 விக்கெட்டும் (அதிக ரன் கொடுத்ததால் 4-வது இடம்), காட்ரெல் 6 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    என்றாலும் அணிகளின் புள்ளிகள் பட்டியலில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றை எதிர்பார்க்க முடியும்.

    டெல்லியிடம் வெற்றி பெற வேண்டிய முதல் போட்டியை இழந்தது, அந்த அணிக்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
    ×