என் மலர்
விளையாட்டு
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசவில்லை. பந்து வீசுவதில் தாமதம் செய்தது. இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் கேப்டன் விராட் கோலி, டெல்லி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது.
அபுதாபியில் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.
சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 79 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஸ்ரேயாஷ் கோபால் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பட்லர் அதிகபட்சமாக 44 பந்தில் 70 ரன் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பும்ரா 20 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். போல்ட்,பேட்டின்சன் தலா 2 விக்கெட்டும், போல்லார்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. மொத்தத்தில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
மும்பை அணி வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் நிறைய தரம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்கிறோம். அனைவரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் அந்த நாளில் தங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார்கள்.
ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள்.
சூர்யகுமார் யாதவ் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஷாட்டுகள் நேர்த்தியாக இருந்தது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் அவர் புதுமையை புகுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியது.
தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. கடந்த 3 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை என்றார்.
மும்பை அணி 7-வது ஆட்டத்தில் டெல்லியுடன் வருகிற 11-ந் தேதி அபுதாபியில் மோதுகிறது. ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 9-ந் தேதி சந்திக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து போட்டி) டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடப்பது உள்ளூர் மாகாண அரசாங்கத்தின் ஒப்புதலை பொறுத்து இறுதி செய்யப்படும். நவம்பர் 10-ந்தேதி ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரத்துக்குள் தேர்வு செய்யப்படும்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவை சந்தித்தார்.
1 மணி 19 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தினார்.
மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபெரை (துனிசியா) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
இதற்கிடையே, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சூதாட்ட புகார் கிளம்பி இருக்கிறது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது.
அபுதாபி:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 20-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ட்வ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டத்தில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. கொல்கத்தா (49 ரன்), பஞ்சாப் (48 ரன்), ஐதராபாத் (34 ரன்) ஆகிய அணிகளை வென்றது. சென்னை (5 விக்கெட்), பெங்களூர் (சூப்பர் ஓவர்) அணிகளிடம் தோற்றது.
மும்பை அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். கடைசி நேரத்தில் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக ஆட கூடியவர்கள்.
இது தவிர கேப்டன் ரோகித் சர்மா (176 ரன்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை அணி உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 2 ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. அதற்கு அடுத்த 2 போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூர் அணிகளிடம் தோற்று இருந்தது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து ராஜஸ்தான் 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மும்பை நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணியை தோற்கடிப்பது சவாலானது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திவேதியா, ஆர்ச்சர்,டாம் கரண் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று ராஜஸ்தான் அணியோடு இணைந்துள்ளார். அவர் தனிமையில் இருப்பதால் இன்றைய போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.
இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 10-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளன.






