என் மலர்
விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர் 19 வயதான மனுபாக்கர். டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளவர்.
போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மனு பாக்கர் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றைப் பையில் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.
துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா என கேட்டு ஏர் இந்தியா அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.
இதனால் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் தகவல் தெரிவித்து முறையிட்டார். மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.
தன்னை துன்புறுத்திய அவமதித்த இரண்டு ஏர் இந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு பாக்கர் கோரியுள்ளார்.
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உடனடி தலையீட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அதிகாரிகள் சிறிய மரியாதை கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் வீரர்களை அவமதிக்க வேண்டாம், தயவுசெய்து பணம் கேட்க வேண்டாம் என தெரிவித்தார்.
ஏர் இந்தியாவும் தனது ஊழியர்களின் நடத்தைக்கு மன்னிப்பு கோரியது.

ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் மெட்வதேவுடன் தோற்ற கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபான் சிட்சிபாஸ் கூறியதாவது:-
நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடாலுடன் ஆஸ்திரேலிய ஓபனில் மோதினேன். எனக்கு எதிராக அவரது ஆட்டம் மிகுந்த ஆக்ரோஷமாகவும், அபாரமாகவும் இருந்தது. அப்போது நடால் பட்டம் வெல்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.
தற்போது டேனியல் மெட்வதேவ் அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார். அவர் ஆட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்றார் போல் விளையாடுகிறார். மெட்வதேவின் சர்வீஸ் ஜான் இஷ்னருக்கு நிகராக இருக்கிறது. நான் அவரிடம் அரை இறுதியில் தோற்றது ஏமாற்றம் அளித்தது. அதே நேரத்தில் இந்த ஆட்டத்தின் மூலம் சில பாடங்களை கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு சிட்சிபாஸ் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.
மெட்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளார். அவர் அதிக பட்டம் பெற்ற வீரர்களில் முதல் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார். இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
களிமண் தரையான பிரெஞ்சு ஓபனில் ஆடுவதில் நடால் புதிய வரலாறு படைத்து உள்ளார். அவர் அதில் மட்டுமே 13 பட்டங்களை வென்றுள்ளார். புல்தரையான விம்பிள்டனில் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டங்களை வென்றுள்ளார்.
இதேபோலத்தான் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் அசைக்க முடியாத வீரராக உள்ளார். அவர் 8 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.
அவர் 9-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மெட்வதேவ் அவருக்கு எல்லா வகையிலும் கடும் சவாலாக விளங்குவார்.
28-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டியில் ஜோகோவிச் விளையாடுகிறார். அவர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றது கிடையாது. ஆண்டி முர்ரேயை (2011, 2013, 2015, 2016) 4 முறையும், நடாலை (2012, 2019) 2 தடவையும், வில்பிரட் சோங்கா (2008), டொமினிக் தீம் (2020) ஆகியோரை தலா ஒரு முறையும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
25 வயதான மெட்வ தேவ் 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இதன்மூலம் 2-க்கும் மேற்பட்ட கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கபெல்னிகோவ், மாரட்சபின் ஆகியோருக்கு அடுத்த நிலையை அவர் பெற்றார்.
ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருந்தது.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது சுவிங் பந்தில் அவர் பலமுறை விக்கெட் கீப்பரிடமும், சிலிப் பகுதியிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த தொடரில் விராட் கோலியின் ஸ்கோர் 1, 8, 25, 0, 39, 28, 0, 6, 20 ஆகிய ரன்களாக இருந்தது. அவரது சராசரி 13.5 ஆக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் பாடங்களை கற்று தனது தவறுகளை திருத்திக் கொண்டு விராட் கோலி அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 692 ரன்களை விளாசினார்.
இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ‘நாட் ஜஸ்ட் கிரிக்கெட்’ என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிக்கோலசுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த உரையாடலின்போது 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மோசமாக பேட்டிங் செய்தபோது எப்படி உணர்ந்தீர்கள். மன அழுத்தம் இருந்ததா? என்று நிக்கோலஸ் கேட்டார். இதற்கு பதிலளித்து விராட் கோலி கூறியதாவது:-
மோசமான ஆட்டத்தால் எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதனுடன் கடுமையாக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிகுந்த அதிகமான வலியால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
மோசமான ஆட்டத்தில் இருந்து எப்போது மீண்டு வருவேன் என்று புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாதவனாக நான் இருந்தேன். அப்போது உலகிலேயே நான் தனி மனிதனாக இருந்ததாக உணர்ந்தேன்.
நான் மிகுந்த மன அழுத்தத்திலும் நம்பிக்கை அற்றவனாக இருந்தபோது பலரும் ஊக்கமளித்தனர். யாரும் என்னுடன் பேசவில்லை. ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன்.
1990களில் இருந்த இந்திய அணிதான் என் கிரிக்கெட் சார்ந்த கற்பனையை மேலும் விசாலப்படுத்தியது. நான் பார்த்த வரையில் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
18 வயதில் என் தந்தையை இழந்தேன். நான் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னுடைய தந்தையின் கனவும், என்னுடைய கனவும் ஒருநாள் நனவாகும்.
தேசத்துக்காக உயர்ந்த இடத்தில் இருந்து விளையாடுவேன் என்று நம்பினேன்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.






