என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ரஷியாவின் டேனில் மெட்வதேவ், கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

    மெட்வதேவ் தரவரிசையில் 4-வது இடத்திலும், சிட்சிபாஸ் 5-வது இடத்திலும் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெட்வதேவ் ஆட்டத்திற்கு சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    மெட்வதேவ், சிட்சிபாஸ்

    இதனால் மெட்வதேவ் 6-4, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் மெட்வதேவ் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு புஜாராவை ஏலம் எடுத்த நிலையில், சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம் பிடிக்கும். ஆனால் எந்த அணியும் இவரை கண்டுகொள்வதில்லை. கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் சுமார் 7 வருடம் கழித்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்க இருக்கிறார்.

    ஐபிஎல் போட்டியில் விளையாட இருப்பது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது சிறப்பு. உண்மையிலேயே சிஎஸ்கே ஜெர்சி அணிந்து விளையாடுவதை எதிர்பார்த்து இருக்கிறேன். மீண்டும் எம்எஸ் டோனியின் தலைமையின் கீழ் விளையாட இருக்கிறேன். நான் இந்திய அணியில் அறிமுகம் ஆகும்போது எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார். எம்எஸ் டோனியின் கீழ் விளையாடிய சிறப்பான நினைவலைகள் உள்ளன. அவருடன் மீண்டும் இணைவதை எதிர்பார்த்து இருக்கிறேன்.

    ஐபிஎல் பற்றி பேசும்போது, டெஸ்ட் போட்டி மனநிலையில் இருந்து மாற வேண்டும். முடிந்த அளவிற்கு எவ்வளது விரைவாக மாற முடியுமோ, அந்த அளவிற்கு மாற வேண்டும். சிறந்த தயார் படுத்துதலுடன் விரைவாக மாறுவது மனதளவை பொறுத்தது என உணர்கிறேன். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என நான் மிகவும் நம்புவேன்’’ என்றார்.

    புஜாரா 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 390 ரன்கள் அடித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் தெண்டுல்கரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில், போட்டியில் களம் இறங்க காத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    மும்பை இந்தியன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் ‘‘முன்னதாக வான்கடே மைதானத்தில் பந்து எடுத்து போடும் பையன். கடந்த சீசனில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளர். முதன்முறையாக அணியில் இணைந்துள்ளார். ஆட்டத்தை வெளிப்படுத்தும் நேரம் அர்ஜுன்’’ எனத் தெரிவித்துள்ளது.

    அர்ஜுன் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘சிறுவயதில் இருந்தே நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன். பயிற்சியாளர்களுக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் என்மீது நம்பிக்கை வைத்ததற்காக நன்றி சொல்லியாக வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய ஆர்வமாக உள்ளேன். ப்ளூ மற்றும் கோல்டு கலர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்காக காத்திருக்க முடியாது’’ என்றார்.

    சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் ஹரியானா அணிக்கெதிரான முதன்முறையாக மும்பை அணிக்காக டி20 போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் தெண்டுல்கர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை கிருஷ்ணப்பா கவுதம் படைத்தார்.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    இதற்கான மினி ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஏலப்பட்டியலில் 164 இந்தியர்கள் உள்பட 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் இருந்து 61 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஆனால் ஐ.பி.எல். ஏலத்தில் 22 வெளிநாட்டவர் உள்பட 57 வீரர்கள் விலை போனார்கள். 8 அணிகளும் சேர்த்து இவர்களை ரூ.143 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கின.

    தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் ரூ 16 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதை கிறிஸ் மோரிஸ் முறியடித்தார். அவருக்கான அடிப்படை விலை ரூ 75 லட்சம் ஆகும்.

    கிறிஸ் மோரிசுக்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனை ரூ 15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஏலத்தில் 3வது இடத்தை பிடித்தார். அவரை பெங்களூர் அணி ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.

    ஐ.பி.எல் ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை படைத்தார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ 20 லட்சம் தான். ஆனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ9.25 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் அவர் ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 2018 ஆண்டு ஏலத்தில் குணால் பாண்ட்யா ரூ 8 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

    32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். கர்நாடகாவை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அதற்கு முன்பு ராஜஸ்தான், மும்பை அணிகளில் விளையாடி உள்ளார்.

    தமிழக வீரர்களில் ஷாருக்கான் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு எடுத்தது.

    மற்ற தமிழக வீரர்களான ஹரி நிஷாந்த்தை சென்னை அணியும், சித்தார்த்தை டெல்லி அணியும் தலா ரூ.20 லட்சத்துக்கு எடுத்தன.

    ஏலத்துக்கு பிறகும் பஞ்சாப் அணியிடம் தான் கைவசம் அதிகபட்சமாக ரூ. 18.80 கோடி இருக்கிறது. ராஜஸ்தானிடம் ரூ.13.65 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.6.95 கோடியும் , மும்பை, டெல்லி அணிகளிடம் தலா ரூ.3.65 கோடியும் கொல்கத்தாவிடம் ரூ.3.20 கோடியும், சென்னையிடம் ரூ 2.55 கோடியும்,பெங்களூரிடம் ரூ.35 லட்சமும் எஞ்சியுள்ளன.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும், ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்ச்சை நடத்துகின்றனர்.

    மெல்போர்ன்:

    இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

    இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா- ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ஒசாகா அரைஇறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒசாகா இதுவரை மூன்று முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார்.

    2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அமெரிக்க ஓபன் பட்டத்தை இரண்டு முறை (2018, 2020) கைப்பற்றினார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2-வது முறை வெல்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒசாகா மூன்று முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அனைத்திலும் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    22-ம் நிலை வீராங்கனை ஜெனிபர் பிராடி முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதே சிறந்த நிலையாக இருந்தது.

    பிராடி முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் பலம் வாய்ந்த ஒசாகாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் ரஷியாவின் அஸ்லான் கரட்டுலுவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 4-ம் நிலை வீரர் மெட்வேதேவ் (ரஷியா)- 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுவார்கள்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் கரட்சேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 114-வது இடத்தில் இருப்பவரும், தகுதி சுற்றின் மூலம் முன்னேறி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தவருமான ரஷ்யாவின் அஸ்லான் கரட்செவை சந்தித்தார்.

    தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை6-3 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், கரட்சேவை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    அர்ஜுன் தெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அத்துடன் ஐபிஎல் 2021 சீசன் வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள்.
    ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அடுத்தப்படியாக மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரையும் ஆர்சிபி அணியே வாங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல் ரிலே மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பாக கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இந்த இருவரும்தான் அதிக விளைக்குப் போனார்கள்.

    ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை. அதன்பின் அடிப்படை விலையில் எடுக்கப்பட்டார்கள். ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் ஏலம் முடிவடைந்தது.

    இன்று மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 8 அணிகளும் மொத்தம் 145 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
    ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் ஏலம் போகாத ஹர்பஜன் சிங், கருண் நாயர், கேதார் ஜாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 2-வது சுற்றில் அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்ற ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், கருண் நாயர், சாம் பில்லிங்ஸ், முஜீப் உர் ரஹ்மான், பென் கட்டிங் போன்றோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

    2-வது சுற்றின்போது அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கும், பென் கட்டிங்கை 75 லட்சம் ரூபாய்க்கும், கருண் நாயரை 50 லட்சம் ரூபாய்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    முஜீப் உர் ரஹ்மானை 1.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. சி. ஹரி நிஷாந்த்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனான புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்க, ஏலம் நடைபெற்ற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா, ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார். இருந்தாலும் அவர் கடந்த சில சீசனில் எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. டி20 போட்டிக்கு நான் சரியான நபர். என்னால் அதிரடியாக விளையாட முடியும். டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின்னர் என்னுடைய ஸ்டிரைக் ரேட்டை பாருங்கள் என்று புஜாரா கூறியபோதும், அணியில் சேர்க்க எந்த உரிமையாளரும் தயாராக இல்லை.

    இந்த நிலையில் இன்றைய ஏலத்தின்போது புஜாரா பெயர் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. அவரை யார் எடுப்பார்கள்? என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    புஜாராவை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தைரியத்தை அங்கிருந்த மற்ற அணியைச் சேர்ந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். அதத்துடன் பிசிசிஐ அதிகாரிகளும் கைத்தட்டு சென்னை அணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வீரராக கிருஷ்ணப்பா கௌதமை 9.35 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில், ஷாரூக் கான் 5.25 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடிப்படை விலை ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்க விரும்பியது. ஆனால் மற்ற அணிகளும் ஆர்வம் காட்டியதால், குறிப்பாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விலையை கூட்டிக் கொண்டே சென்றது.

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9.25 கோடி ரூபாய் கொடுத்து கிருஷ்ணப்பா கவுதமை ஏலம் எடுத்தது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக் கானை ஏலம் எடுக்க டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 5.25 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தின் அடிப்படை விலை 40 லட்சம் ரூபாய். பஞ்சாப் அணி அவரை வாங்க விரும்பியது. டெல்லி அணி குறுக்கிட்டு அவருக்கான விலையை அதிகமாக உயர்த்தியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 8 கோடி ரூபாய் கொடுத்து அவரை ஏலம் எடுத்தது. இது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுப்பதில் அணிகள் ஆர்வம் காட்டின. கிறிஸ் மோரிஸ் ரூ. 16.25 கோடிக்கும், முஷ்டாபிஜுர் ரஹ்மான் ரூ. 1 கோடிக்கும், நேத்தன் குல்டர்-நைல் ரூ. 5 கோடிக்கும், ஆடம் மில்னே ரூ.3.2 கோடிக்கும், உமேஷ் யாதவ் ஒரு கோடி ரூபாய்க்கும் ஏலம் போனார்கள்.

    ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் ஏலம் விடப்பட்டார். அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாயில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்த்தி கேட்கப்பட்டார்.

    டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அவரின் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 14. கோடி கொடுத்து வாங்கியது. இதுவரையிலான ஏலத்தில் இது 2-வது மிகப்பெரிய தொகையாகும்.

    ஜய் ரிச்சர்ட்சன் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 14 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
    யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கும், ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி 3.20 கோடி  ரூபாய்க்கும், தாவித் மலனை 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷிவம் துபேவை 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலம் எடுத்தது.

    முதற்கட்ட இடைவேளைக்கு முன் கடைசி வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஏலம் விடப்பட்டார்.

    இவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விருப்பம் காட்டின. இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியை தாண்டியது. 10 கோடி ரூபாயை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதின. கிங்ஸ் பஞ்சாப் விடாமல் 16 கோடி ரூபாய் வரை கேட்டது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    33 வயதான கிறிஸ் மோரிஸ் இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
    ×