என் மலர்
விளையாட்டு

சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
இதற்கான மினி ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஏலப்பட்டியலில் 164 இந்தியர்கள் உள்பட 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் இருந்து 61 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால் ஐ.பி.எல். ஏலத்தில் 22 வெளிநாட்டவர் உள்பட 57 வீரர்கள் விலை போனார்கள். 8 அணிகளும் சேர்த்து இவர்களை ரூ.143 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கின.
தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் ரூ 16 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதை கிறிஸ் மோரிஸ் முறியடித்தார். அவருக்கான அடிப்படை விலை ரூ 75 லட்சம் ஆகும்.
கிறிஸ் மோரிசுக்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனை ரூ 15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஏலத்தில் 3வது இடத்தை பிடித்தார். அவரை பெங்களூர் அணி ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.
ஐ.பி.எல் ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை படைத்தார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ 20 லட்சம் தான். ஆனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ9.25 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் அவர் ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு 2018 ஆண்டு ஏலத்தில் குணால் பாண்ட்யா ரூ 8 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.
32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். கர்நாடகாவை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அதற்கு முன்பு ராஜஸ்தான், மும்பை அணிகளில் விளையாடி உள்ளார்.
தமிழக வீரர்களில் ஷாருக்கான் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு எடுத்தது.
மற்ற தமிழக வீரர்களான ஹரி நிஷாந்த்தை சென்னை அணியும், சித்தார்த்தை டெல்லி அணியும் தலா ரூ.20 லட்சத்துக்கு எடுத்தன.
ஏலத்துக்கு பிறகும் பஞ்சாப் அணியிடம் தான் கைவசம் அதிகபட்சமாக ரூ. 18.80 கோடி இருக்கிறது. ராஜஸ்தானிடம் ரூ.13.65 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.6.95 கோடியும் , மும்பை, டெல்லி அணிகளிடம் தலா ரூ.3.65 கோடியும் கொல்கத்தாவிடம் ரூ.3.20 கோடியும், சென்னையிடம் ரூ 2.55 கோடியும்,பெங்களூரிடம் ரூ.35 லட்சமும் எஞ்சியுள்ளன.
மெல்போர்ன்:
இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா- ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஒசாகா அரைஇறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒசாகா இதுவரை மூன்று முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார்.
2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அமெரிக்க ஓபன் பட்டத்தை இரண்டு முறை (2018, 2020) கைப்பற்றினார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2-வது முறை வெல்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒசாகா மூன்று முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அனைத்திலும் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
22-ம் நிலை வீராங்கனை ஜெனிபர் பிராடி முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதே சிறந்த நிலையாக இருந்தது.
பிராடி முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் பலம் வாய்ந்த ஒசாகாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் ரஷியாவின் அஸ்லான் கரட்டுலுவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 4-ம் நிலை வீரர் மெட்வேதேவ் (ரஷியா)- 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுவார்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 114-வது இடத்தில் இருப்பவரும், தகுதி சுற்றின் மூலம் முன்னேறி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தவருமான ரஷ்யாவின் அஸ்லான் கரட்செவை சந்தித்தார்.
தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை6-3 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், கரட்சேவை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.






