search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ் மோரிஸ்"

    உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த அன்ரிச் நோர்ட்ஜ் காயத்தால் விலகியதால், கிறிஸ் மோரிஸ் இடம்பிடித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த 23-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ் இடம் பிடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் காயம் சரியாகிவிடும் என்று நினைத்த தென்ஆப்பிரிக்கா, அவரது பெயரை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்தது.

    இந்நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ்-யின் காயம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குணமடையவில்லை. இதனால் கிறிஸ் மோரிஸ் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் மோரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



    டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசும் திறமைப் படைத்த கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பேட்டிங்கும் செய்வார். உலகக்கோப்பைக்கான 10 அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் பேட்ஸ்மேன் ஹென்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்று மதியம் இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் ரீசா ஹென்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. அம்லா, 3. குயின்டான் டி காக், 4. ஸ்டெயின், 5. ரபாடா, 6. டேவிட் மில்லர், 7. மார்கிராம், 8. இம்ரான் தாஹிர், 9. லுங்கி நிகிடி, 10. டுமினி, 11. பெலுக்வாயோ, 12. அன்ரிச் நோர்ட்ஜ், 13. பிரிட்டோரியஸ், 14. டஸ்சன், 15. தப்ரைஸ் ஷம்சி.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐந்து போட்டியில் நான்கில் வெற்றியை ருசித்துள்ளது. டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்துள்ளது.

    அந்த அணியின் அந்த்ரே ரஸல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நான்கு போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசியுள்ளார். அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைதான் எதிரணிகள் முழு குறிக்கோளாக வைத்துள்ளது.

    கேகேஆர் அதன் சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடக்கூடியது. குறிப்பாக சேஸிங்கில் புகுந்து விளையாடும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் மோரிஸ் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்கள் அணியில் தலைசிறந்த மேட்ச் வின்னர்கள் இடம்பிடித்துள்ளனர். மற்ற வீரர்களும் முக்கிய காரணிகளாக விளங்கி வருகிறார்கள். எங்களுக்கு சில நாட்கள் ஓய்வு உள்ளது. அதன்பின் விளையாட இருக்கிறோம். இதனால் எங்களுடைய உடல் புத்துணர்வுடனும், வலிமையாக இருக்கும்.



    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வெளியில் இருந்து செல்லும் அணிக்கு மிகவும் கடினமானதாக விளங்கி வருகிறது. ஆனால் எங்கள் அணி ஒரு குழுவாக இணைந்து, போட்டியை எதிர்கொள்ள இருக்கிறோம். வெள்ளிக்கிழமை அவர்களை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்திய போட்டியின் முழுவதையும் ஆராய்ந்து, என்ன தவறு செய்தோம் என்பதை பார்ப்போம். நாங்கள் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமோ? அந்த இடத்தில் கவனம் செலுத்தி, போட்டிக்கு தயார் என்பதை உறுதி செய்து கொள்வோம்’’ என்றார்.
    ×