என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக்  லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அஷ்வின்

    அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 5 விக்கெட் சாய்த்தார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அக்சார் பட்டேல் (6), அஷ்வின் (3) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே மேலும் 7 ரன்கள் எடுத்து ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 66 ரன்னில் ஜேக் லீச்சில் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி ரோகித் சர்மாவை இழக்கும்போது 40.1 ஓவரில் 115 ரன்கள் எடுத்திருந்தது. 42-வது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். 46-வது ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதேஓவரின் 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஆட்டமிழந்தார்.

    ஜோ ரூட், ஜேக் லீச்

    ஜோ ரூட் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இந்தியாவின் பேட்டிங் ஆட்டம் கண்டது. அஷ்வின் பொறுமையாக நின்றால் வேலைக்காகாது என அதிரடியாக ஆட முயன்று 9-வது விக்கெட்டாக ஜோ ரூட் பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா 134 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 6.2 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்னில் சுருண்டது. 

    பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. 12-வது ஓவரின்போது பென் ஸ்டோக்ஸ் கையில் பந்து சென்றது. அவரை பந்தை பளபளப்பாக தவறுதலாக உமிழ் நீரை பயன்படுத்தினார். இது கேமராவில் பதிவானது.

    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் பந்தை பளபளப்பாக உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தெரிவித்துள்ளது. வியர்வையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பென் ஸ்டோக்ஸ் தற்செயலாக உமிழ் நீரை பயன்படுத்தியதால், நடுவர் பந்தை சானிடைசரால் சுத்தம் செய்தார். மேலும், நட்பாக எச்சரிக்கை விடுத்தார்.
    பிரித்வி ஷா ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் மும்பை - புதுச்சேரி அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் ஜெய்ஸ்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரித்வி ஷா உடன் விக்கெட் கீப்பர் தாரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. தாரே 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால் பிரித்வி ஷா சதம் விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியை வெளிப்படுத்தியது. சூர்யகுமார் யாதவ் 58 பந்தில் 133 ரன்கள் விளாசினார். பிரித்வி ஷா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி 152 பந்தில் 227 ரன்கள் குவித்தார்.

    இதனால் மும்பை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 457 ரன்கள் குவித்தது. கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். இதற்கு முன் கிரேம் பொல்லாக் 1974-ல் பார்டர் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் அடித்திருந்தார். தற்போது பிரித்வி ஷா அதை முறியடித்துள்ளார்.

    சேவாக் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2011-ல் 219 ரன்கள் குவித்துள்ளார். ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 2017-ல் இலங்கைக்கு எதிராக 208 ரன்கள் குவித்துள்ளார்.
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது. இது அந்த அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தற்போது இந்த ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய வீரர்களின் அபாரமாக பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

    தொடக்க வீரர் கிராவ்லி அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். அக்‌ஷர் படேல் மிகவும் சிறப்பாக பந்துவீசி 38 ரன் கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய 2-வது சுழற்பந்து வீரர் என்ற பெருமையை அக்‌ஷர் படேல் பெற்றார்.

    2016-17 பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷு 49 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு அடுத்த நிலையில் அக்‌ஷர் படேல் உள்ளார்.

    2017-18-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீரர் யாசிர் ஷா 184 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இது 3-வது சிறந்த நிலையாகும்.

    அக்‌ஷர் படேல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் அறிமுகமானார். அந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது அவர் தனது 2-வது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் அக்‌ஷர் படேல் ஆவார். இதற்கு முன்பு முகமது நிஷார், நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்குமேல் எடுத்திருந்தனர்.

    இந்த டெஸ்டில் சுழற்பந்து வீரர்கள் 9 விக்கெட் (அக்‌ஷர் படேல் 6+அஸ்வின் 3) கைப்பற்றினார்கள். ஒரு இன்னிங்சில் சுழற்பந்து வீரர்கள் அதிக விக்கெட் கைப்பற்றிய பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து மூலம் 8 விக்கெட்டை கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. தேவேந்திர பிஷுவே இந்த 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டுனிடின்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் கப்தில் அதிரடியாக விளையாடி 50 பந்தில் 97 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். கேப்டன் வில்லியம்சன் 35 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 16 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் என்ற நிலையில் இருந்தது. அப்போது சான்ட்னெர் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

    இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோனிசும், சாம்சும் அதிரடியாக விளையாடினார்கள்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 15 ரன் தேவைப்பட்டது. நீசம் வீசிய முதல் பந்தில் சாம்ஸ் 41 ரன்னில் அவுட் ஆனார். 2-வது, 3-வது பந்தில் ஸ்டோனிஸ் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் அவர் சிக்சர் அடித்தார். 5-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

    கடைசி பந்தில் ரிச்சர்ட்சன் பவுண்டரி அடித்தார். ஆஸ்திரேலியா அணியால் கடைசி ஓவரில் 10 ரன்னே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி போராடி தோற்றது.

    ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 37 பந்தில் 78 ரன் (7 பவுண்டரி, 5 சிக்சர்), சான்ட்னெர் 4 விக்கெட்டும், நீசம் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வேகப்பந்து வீரர் ஜாகீர்கானை முந்தி 4-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார்.
    அகமதாபாத்:

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய பகல்- இரவு டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார்.

    அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 599 விக்கெட்டுகளை (234 போட்டிகள்) கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் அஸ்வின் வேகப்பந்து வீரர் ஜாகீர்கானை முந்தி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

    ஜாகீர்கான் சர்வதேச போட்டிகளில் 597 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சர்வதேச போட்டிகள் அனைத்தும் சேர்த்து கும்ப்ளே 953 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த படியாக ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    அஸ்வின் தற்போது டெஸ்டில் 397 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இன்னும் 3 விக்கெட் கைப்பற்றினால் அவர் 400 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைப்பார்.
    அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்தார்.
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் அதிக சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதுடன், நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் கோல்ப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராகவும் விளங்கினார்.

    45 வயதான டைகர் வுட்ஸ் டெலிவிஷன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சின் புறநகர் பகுதியில் உள்ள செங்குத்தாக இறங்கும் மலைப்பகுதியில் தனது சொகுசு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி பலமுறை உருண்டு கவிழ்ந்தது. இதில் காருக்குள் சிக்கிக் கொண்ட டைகர் வுட்ஸ்க்கு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். அவரது காரும் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து டைகர் வுட்சை படுகாயத்துடன் மீட்டனர். அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    நீண்ட நேர அறுவை சிகிச்சை முடிந்து தற்போது டைகர் வுட்ஸ் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பயங்கரமான விபத்தில் சிக்கியும் டைகர் வுட்ஸ் உயிர்தப்பியது அதிசயம் தான் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விளையாடும் போது அடிக்கடி காயத்தில் சிக்கும் டைகர் வுட்சுக்கு தற்போது 10-வது முறையாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு அவர் களம் திரும்ப முடியுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
    ஆமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானத்தை உலகின் மிகப்பெரிய மைதானமாக மாற்றுவதற்கு 2015-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அதை இடித்து புதுப்பிக்கப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் மழை நின்றதும் அரைமணி நேரத்திற்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் வடிகால் வசதி, ராட்சத கோபுர விளக்குகளுக்கு பதிலாக மைதானத்தின் மேற்கூரையில் கீழே நிழல் விழாத வகையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. பல்புகள், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வீரர்களுக்கு உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய 4 உடைமாற்றும் ஓய்வறை என்று கவர்ந்திழுக்கும் வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா


    இந்த மைதானத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா நேற்று பிற்பகல் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை முறைப்படி திறந்து வைத்தார். விழாவில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில் ‘இந்த பிரமாண்டமான ஸ்டேடியம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது எண்ணத்தில் உருவானதாகும். அந்தசமயம் அவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

    கிரிக்கெட்டின் மையமாக இந்தியா விளங்குகிறது. எனவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் நம்மிடம் இருப்பது பொருத்தமானது. இது இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும்’ என்றார்.

    உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகையில், ‘இந்த மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுகிறது. இது அவரது கனவு திட்டம்’ என்றார்.

    அதைத் தொடர்ந்து இ்ந்தியா-இங்கிலாந்து இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 100-வது டெஸ்டில் பங்கேற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரி அமித் ஷா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.
    அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிங்க் பால் டெஸ்ட் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

    ஆனால் ஆடுகளத்தில் இன்று முதல் நாளில் இருந்தே ஸ்பின் பந்து வீச்சு அதிக அளவில் டர்ன் ஆனது. இதை பயன்படுத்தி அக்சார் பட்டேல் 6 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இணைந்து ரோகித் சர்மா, ஷுப்மான் கில்லை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். இருந்தாலும் ஷுப்மான் கில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பினார்.

    இங்கிலாந்து பந்து வீச்சை மாற்றியது. ஜாஃப்ரா ஆர்ச்சரை களம் இறக்கியதும் ஷுப்மான் கில் 11 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தத புஜாரா யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேக் லீச் பந்தில் டபிடபிள்யூ ஆக டக்அவுட்டில் ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜேக் லீச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 27 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.

    விராட் கோலி போல்டாகிய காட்சி

    கடைசி 4 பந்து மீதமுள்ள நிலையில் ரஹானே களம் இறங்கினார். அவர் மூன்று பந்தை சமாளிக்க ரோகித் சர்மா ஒரு பந்தை சந்தித்தார். இவரும் ஆட்டமிழக்கவில்லை. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளது.
    நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். பந்து டர்ன் ஆக அக்சார் பட்டேல், அஷ்வின் அபாரமாக பந்து வீசினர்.

    இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    அப்பீல் செய்யும் இந்திய அணி வீரர்கள்

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஒல்லி போப் 1 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். அக்சார் பட்டேல் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

    அந்த அணியால் 48.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அக்சார் பட்டேல் 21.4 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். அஷ்வின் 16 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் செசனில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    அஷ்வின்

    இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×