என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அதிரடி பேட்ஸ்மேனான யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப் பதான்.  அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார்.

    இவர் தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    38 வயதாகும் யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம், 3 அரைசதம் அடங்கும். 33 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 22 டி20 போட்டிகளில் விளையாடி 236 ரன்கள் அடித்துள்ளார். 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    2007-ம் ஆண்டு டி20-யிலும், 2008-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

    சச்சின் உடன் யூசுப் பதான்

    ‘‘எனக்கு ஆதரவாக இருந்து என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணிகள், பயிற்சியாளர்கள், நாட்டின் அனைத்து ஆதரவாகர்கள் என அனைவருக்கும் நன்றி. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இன்று வந்துள்ளது. நான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.

    இரண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது, உலகக்கோப்பையை வென்று சச்சினை தோளில் சுமந்து சென்றது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம்’’ என்றார்.
    கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என அக்சர் பட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட் டேல் கூறியதாவது:-

    பந்து வீச்சில் இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விக்கெட் வீழ்த்துவதே எனது பலம்.

    இந்த ஆடுகளம் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன் என்றார்.

    வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். 37 வயதான இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே 11-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். மே 28-ந்தேதி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார்.

    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 ஒருநாள் போட்டியில் 38 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டியில் 10 விக்கெட்டுகளும், 1 டெஸ்ட் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    இரண்டு நாட்களிலேயே போட்டி முடிந்தது நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    அகமதாபாத்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்னும், இந்தியா 145 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது.

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 49 ரன் இலக்கை இந்தியா விக்கெட் இழப்பின்றி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் மொத்தம் 30 விக்கெட் வீழ்ந்தன. இதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

    இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 11 விக்கெட்டும், அஸ்வின் 7 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும், இங்கிலாந்து தரப்பில் ஜாக்லீச் 4 விக்கெட் டும், ஜோரூட் 5 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் கூறும்போது, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. இந்திய அணி கூட இந்த ஆடுகளத்தில் திணறியது என்றார்.

    முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கூறும்போது, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவும் சிக்கலில் சிக்கி இருக்கும். ஆனால் இது இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இந்த ஆடுகளம் டெஸ்ட்டுக்கு ஏற்றதல்ல என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, இந்த ஆடுகளத்தை நாம் பார்க்க போகிறோம் என்றால், அது எவ்வாறு இயங்கக்கூடும் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது. அணிகளுக்கு 3 இன்னிங்சை கொடுங்கள் என்றார்.

    கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) கூறும்போது, பேட்ஸ்மேன்களின் திறமை சோதிக்கப்படுவதால் ஒரு போட்டிக்கு இதுபோன்ற ஆடுகளம் இருப்பது நல்லது. ஆனால் இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை மீண்டும் பார்க்க நான் விரும்பவில்லை. மற்ற வீரர்கள் யாரும் இதை பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு பாராட்டு என்று கூறி உள்ளார்.

    ஆனால் இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆடுகளத்தை குறை சொல்லவில்லை. அவர் கூறும்போது, இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றி சிந்திக்க வைக்கிறது. இந்த ஆடுகளத்தில் தான் ரோகித் சர்மா மற்றும் ஜாக்கிராவ்லி அரை சதங்கள் அடித்தனர்.

    இங்கிலாந்து எப்படி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம் என்று யோசித்து கொண்டிருந்தது. பந்தை பயன்படுத்திய விதத்தில் அக்சர் பட்டேலை பாராட்ட வேண்டும். அஸ்வின் மற்றும் அக்சர் சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.

    ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    குல்மார்க்:

    இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் இன்று தொடங்கியது. துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு அல்லது 'டைம் பாஸ்' மட்டுமல்ல. விளையாட்டுகளில், நாம், குழுவாக இணைந்து செயல்படும் உணர்வைக் கற்றுக்கொள்கிறோம், தோல்விகளில் புதிய வழிகளைத் தேடுகிறோம், மீண்டும் வெற்றிகளை பெற கற்றுக்கொள்கிறோம். விளையாட்டானது, வீரர்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் சிறப்பாக்குகிறது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளின் அனுபவம், நாம் முழுமையான அணுகுமுறையுடன் முன்னேற உதவும். இந்த குளிர்கால விளையாட்டுக்கள் புதிய விளையாட்டு சூழல் அமைப்பை நிறுவ உதவும். கேலோ இந்தியா சிறப்பு மையங்களும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவை மேம்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    5 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1200 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஸ்னோஷூ ரேஸ், ஐஸ் ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங், பனிமலையேறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய ராணுவம் மற்றும் ஜவகர் மலையேற்ற பயிற்சி நிறுவனம் மற்றும் குளிர்கால விளையாட்டு அமைப்பின் தடகள வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
    டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400-வது விக்கெட்டை கைப்பற்றினார். சர்வதேச டெஸ்டில் 400 விக்கெட் வீழ்த்திய 16-வது வீரர், இந்திய தரப்பில் 4-வது வீரர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றார்.

    400 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டியது உண்மையில் அற்புதமாக இருக்கிறது. ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    3-வது இன்னிங்சில் அக்சர் பட்டேல் அழகாக பந்து வீசினார். நான் லாக்டவுன் காலத்தில் கடுமையாக உழைத்தேன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது எனது பேட்டிங்கை பற்றி விராட்கோலி, ரவிசாஸ்திரி ஆகியோர் என்னுடன் உரையாடினார்கள்.

    எனது பந்து வீச்சில் ஏதோ ஒரு சிறப்பை அவர்கள் கண்டனர். ஐ.பி.எல். போட்டியிலும் எனது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். லாக் டவுன் காலத்தில் சுமார் 7-8 கிலோ எடை குறைத்தேன்.

    நான் வயதாகி விட்டேனா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் என்னை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி - கேரளா அணிகள் மோதுகின்றன.

    கோவா:

    7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    நேற்று வரை 106 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. இதுவரை ஏ.டி.கே. மோகன் பகான், மும்பை ஆகிய இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.

    அரைஇறுதி போட்டிக்கான மற்ற இரண்டு இடங்களுககு கோவா எப்.சி., கவுகாத்தி (நார்த்ஈஸ்ட்), ஐதராபாத் ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி - கேரளா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கவுகாத்தி அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோற்றால் கோவா- ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் முடிவு காத்திருக்கு வேண்டும்.

    கோவா (3-வது இடம்), கவுகாத்தி (4-வது இடம்) தலா 30 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராபாத் அணி 28 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. லீக் ஆட்டங்கள் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.

    அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட்டில், 2-வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்ச்சரை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தி அஷ்வின் சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 30 விக்கெட்டுகளில் 28 விகெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்த போட்டி இரண்டு நட்களிலேயே முடிவடைந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்சரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட் எனக் மைல்கல்லை எட்டினார்.
    ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டிப்பிடிக்க இந்தியா 3-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் நிதானமாக நின்று விளையாடினால் சரிபட்டுவராது என நினைத்து அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 விக்கெட்டுகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் என 7 விக்கெட் சாய்த்தார்.
    அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக்  லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அஷ்வின்

    அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 5 விக்கெட் சாய்த்தார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அக்சார் பட்டேல் (6), அஷ்வின் (3) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே மேலும் 7 ரன்கள் எடுத்து ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 66 ரன்னில் ஜேக் லீச்சில் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி ரோகித் சர்மாவை இழக்கும்போது 40.1 ஓவரில் 115 ரன்கள் எடுத்திருந்தது. 42-வது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். 46-வது ஓவரின் முதல் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதேஓவரின் 3-வது பந்தில் அக்சார் பட்டேல் ஆட்டமிழந்தார்.

    ஜோ ரூட், ஜேக் லீச்

    ஜோ ரூட் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இந்தியாவின் பேட்டிங் ஆட்டம் கண்டது. அஷ்வின் பொறுமையாக நின்றால் வேலைக்காகாது என அதிரடியாக ஆட முயன்று 9-வது விக்கெட்டாக ஜோ ரூட் பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா 134 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 6.2 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்னில் சுருண்டது. 

    பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. 12-வது ஓவரின்போது பென் ஸ்டோக்ஸ் கையில் பந்து சென்றது. அவரை பந்தை பளபளப்பாக தவறுதலாக உமிழ் நீரை பயன்படுத்தினார். இது கேமராவில் பதிவானது.

    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் பந்தை பளபளப்பாக உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தெரிவித்துள்ளது. வியர்வையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பென் ஸ்டோக்ஸ் தற்செயலாக உமிழ் நீரை பயன்படுத்தியதால், நடுவர் பந்தை சானிடைசரால் சுத்தம் செய்தார். மேலும், நட்பாக எச்சரிக்கை விடுத்தார்.
    ×