என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். பந்து டர்ன் ஆக அக்சார் பட்டேல், அஷ்வின் அபாரமாக பந்து வீசினர்.

    இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    அப்பீல் செய்யும் இந்திய அணி வீரர்கள்

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஒல்லி போப் 1 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். அக்சார் பட்டேல் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

    அந்த அணியால் 48.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அக்சார் பட்டேல் 21.4 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். அஷ்வின் 16 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் செசனில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    அஷ்வின்

    இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    மேற்கு வங்காள கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி. இந்திய அணியில் களம் இறங்கி சதம் அடித்த போதிலும் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இவர் மேற்கு வங்காள கிரிக்கெட் அணிக்காக அதிக அளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

    35 வயதான மனோஜ் திவாரி இன்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமயிலான ஆட்சி வருகிறது 30-ந்தேதி முடிவடைகிறது.

    இதனால் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுடன் மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளது.

    மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். மூன்று டி20 போட்டிகளில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் இதுவரை 2 ஆட்டம் நடந்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது.

    பகல்-இரவாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்துடன் உள்ளன.

    இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலியும் இணைந்து முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 41 சதங்கள் அடித்துள்ளனர்.

    3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலி புதிய சாதனை படைப்பார். சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக கோலி 70 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 71 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சதம் அடிப்பதன் மூலம் அவருடன் விராட் கோலி இணைவார். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார். உள்நாட்டில் இருவரும் தலா 21 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளனர். இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துவதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்டில் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    டோனி, கோலிக்கு அடுத்தபடியாக அசாருதீன் (13), கங்குலி (10), கவாஸ்கர் (10) ஆகியோர் உள்ளனர். 

    அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

    34 வயதான அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வெள்ளைப் பந்து போட்டியான ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    அஸ்வின் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று தேர்வுக்குழு கருதி அவரை சேர்க்காமல் உள்ளது.

    தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2 ஆட்டத்தில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு 2-வது டெஸ்டில் சதம் அடித்தார்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் அவர் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்வுக்குழு அவரை தொடர்ந்து புறக்கணித்தது.

    இந்த நிலையில் அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள் தொடரில் அஸ்வினை தேர்வு செய்யாமல் ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது. டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை நெருங்கிய வீரர், 5 டெஸ்டில் சதங்களை அடித்துள்ளார்.

    ஆனால் அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. அவரது செயல்பாடு அருமையாக இருந்து வருகிறது.

    பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடிய திறமையான பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் தனக்கென முத்திரையை பதித்துள்ள அவரை புறக்கணித்திருக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல முன்னாள் வேகப்பந்து வீரர் நெக்ராவும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 100-வது போட்டியில் விளையாடிய நிலையில் ஜனாதிபதி, அமித் ஷா நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் இன்று பகல்-இரவு டெஸ்ட்-ஆக தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மைதானம் இதுவாகும். 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.  தற்போது கொரோனா தொற்றால் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் 55 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காண வந்துள்ளனர். முதன்முறையாக இந்த மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    இந்த போட்டி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். போட்டி தொடங்குவதற்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

    இஷாந்த் சர்மாவை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். பின்னர் விராட் கோலி அணி வீரர்களை இருவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சக வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    100-வது போட்டியில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் நினைவுப் பரிசை பெற்றது இஷாந்த் சர்மாவுக்கு மிகப்பெரிய கவுரவமாகும்.
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஆமதாபாத்:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. 

    டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது. 

    இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.
    அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.

    இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம் அடைந்தார்.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

    விபத்தில் சிக்கிய டைகர் உட்சை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளதால்.அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் சத்யன் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    பஞ்ச்குலா:

    82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    இந்தியா- இங்கிலாந்தும் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.
    ஆமதாபாத்:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    விராட் கோலி


    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

    தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் இந்திய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின்-அக்‌ஷர் பட்டேல் கூட்டாக இணைந்து மொத்தம் 15 விக்கெட்டுகளை அறுவடை செய்ததோடு, இங்கிலாந்தை 3½ நாளிலேயே சுருட்டி வீசினர். ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது சதமும் வெற்றிக்கு உதவின.

    ஆனால் 3-வது டெஸ்ட் மின்னொளியில் அரங்கேறும் பகல்-இரவு போட்டி என்பதால் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பகல்-இரவு டெஸ்டில், வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து கணிசமாக ஸ்விங் ஆகும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அனுகூலமாக இருக்கும். எனவே முந்தைய டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கிய இந்திய அணி, இந்த டெஸ்டில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது. இதே போல் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்புகிறார்.

    வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 11-வது இந்தியர், 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறுகிறார். 99 டெஸ்டில் விளையாடி 302 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா தனது செஞ்சுரி டெஸ்டில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனையை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 6 விக்கெட் கைப்பற்றினால் அவர் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைவார். அனேகமாக அவர் டெஸ்டில் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 34 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அந்த டெஸ்ட் தான் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் என்பது நினைவு கூரத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது செய்தாக வேண்டும். தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு புஷ்வாணமாகி விடும். அந்த வகையிலும் இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
    தொடக்க டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மிரட்டிய இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட நெருங்க முடியாமல் முடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய இரு டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அந்த அணிக்கும் இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

    இங்கிலாந்து அணியில் கடந்த டெஸ்டில் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், முழங்கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த போட்டியில் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகி உள்ளனர். அவர்களது வருகை இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனாலும் பேட்டிங்கில் ஜோ ரூட் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்ற வகையில் இருப்பது அந்த அணியை கவலையடையச் செய்துள்ளது.

    இந்த போட்டி நடக்கும் மோடேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதியை கொண்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (90 ஆயிரம் ரசிகர்கள் இருக்கை) உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீதம் அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் 55 ஆயிரம் ரசிகர்கள் வரை போட்டியை நேரில் கண்டுகளிப்பார்கள்.

    ஸ்டேடியம் சீரமைப்புக்கு முன்பாக இங்கு நடந்துள்ள 12 டெஸ்டுகளில் இந்தியா 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் 6-ல் டிராவும் கண்டுள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இந்தியா புஜாராவின் இரட்டை சதத்தின் உதவியோடு 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    பிங்க் பந்து டெஸ்டில் இரு அணிகளும் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்திய அணி இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

    இந்திய அணி தனது கடைசி பகல்-இரவு டெஸ்டில் 36 ரன்னில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சுருண்டதும், இங்கிலாந்து 56 ரன்னில் ஆல்-அவுட் ஆனதும் (நியூசிலாந்துக்கு எதிராக) குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதனால் யாருடைய கை ஓங்கும், தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? என்பதை கணிப்பது சிரமம். டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இ்ந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், பென் போக்ஸ், டாம் பெஸ் அல்லது கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம் விளாச மும்பை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
    விஜய் ஹசாரே டிராபியில் இன்று 10 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை - மகாராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய மகாராஷ்ரா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் விளாசியது. அந்த அணியின் யாஷ் நஹார் (119), அசிம் காஜி (104) சதம் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் யாஷவி ஜெய்ஸ்வால் 40 ரன்களும், பிரித்வி ஷா 34 ரன்களும் அடித்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 பந்தில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 47.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - புதுச்சேரி அணிகள் மோதின. டெல்லி அணியின் துருவ் ஷோரே 132 ரன்களும், நிதிஷ் ராணா 137 ரன்களும் விளாச 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

    பின்னர் 355 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 175 ரன்னில் சுருண்டது. இதனால் 179 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாச்தில் இமாச்சல பிரதேசம் அணியும், அருணாச்சல பிரதேசம் அணியை அசாம் 5 விக்கெட்டிலும், மிசோரமை நாகலாந்து 29 ரன்னிலும், சிக்கிமை மேகாலயா 88 ரன்னிலும், மணிப்பூரை 7 விக்கெட்டில் உத்தரகாண்டும், ஹரியானாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவும், சர்வீசஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியும், பெங்காலை சண்டிகர் அணியும் வீழ்த்தின.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி தெரிவித்தால் கட்டாயம் நாட்டிற்காக விளையாடுவேன் என முஷ்டாபிஜுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முஷ்டாபிஜுர் ரஹ்மான் கூறுகையில் ‘‘வங்காளதேச கிரிக்கெட் போர்டு என விரும்புகிறதோ, அதை நான் செய்வேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கேட்டுக்கொண்டால், நான் கட்டாயம் விளையாடுவேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், அதன்பின் நான் என்ன செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய முதல் முன்னுரிமை நாட்டிற்காகத்ததான் இருக்கும்’’ என்றார்.
    ×