என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் போட்டியா?, டெஸ்டா?: வங்காளதேச கிரிக்கெட் போர்டின் முடிவுக்கே விட்டுவிட்டார் முஷ்டாபிஜுர் ரஹ்மான்
Byமாலை மலர்23 Feb 2021 2:55 PM GMT (Updated: 23 Feb 2021 2:55 PM GMT)
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி தெரிவித்தால் கட்டாயம் நாட்டிற்காக விளையாடுவேன் என முஷ்டாபிஜுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஷ்டாபிஜுர் ரஹ்மான் கூறுகையில் ‘‘வங்காளதேச கிரிக்கெட் போர்டு என விரும்புகிறதோ, அதை நான் செய்வேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கேட்டுக்கொண்டால், நான் கட்டாயம் விளையாடுவேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், அதன்பின் நான் என்ன செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய முதல் முன்னுரிமை நாட்டிற்காகத்ததான் இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X