search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்சார் பட்டேல்
    X
    அக்சார் பட்டேல்

    3-வது டெஸ்ட்: இந்தியா அபாரம்- முதல் செசனில் இங்கிலாந்து 81/4

    நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் செசனில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    அஷ்வின்

    இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×