என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டி நடைபெறும் மைதானம்
    X
    போட்டி நடைபெறும் மைதானம்

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஆமதாபாத்:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. 

    டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது. 

    இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×