search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - ரிஷப் பந்த்
    X
    விராட் கோலி - ரிஷப் பந்த்

    இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர்

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது. இது அந்த அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தற்போது இந்த ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய வீரர்களின் அபாரமாக பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

    தொடக்க வீரர் கிராவ்லி அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். அக்‌ஷர் படேல் மிகவும் சிறப்பாக பந்துவீசி 38 ரன் கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய 2-வது சுழற்பந்து வீரர் என்ற பெருமையை அக்‌ஷர் படேல் பெற்றார்.

    2016-17 பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷு 49 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு அடுத்த நிலையில் அக்‌ஷர் படேல் உள்ளார்.

    2017-18-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீரர் யாசிர் ஷா 184 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இது 3-வது சிறந்த நிலையாகும்.

    அக்‌ஷர் படேல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் அறிமுகமானார். அந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது அவர் தனது 2-வது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் அக்‌ஷர் படேல் ஆவார். இதற்கு முன்பு முகமது நிஷார், நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்குமேல் எடுத்திருந்தனர்.

    இந்த டெஸ்டில் சுழற்பந்து வீரர்கள் 9 விக்கெட் (அக்‌ஷர் படேல் 6+அஸ்வின் 3) கைப்பற்றினார்கள். ஒரு இன்னிங்சில் சுழற்பந்து வீரர்கள் அதிக விக்கெட் கைப்பற்றிய பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து மூலம் 8 விக்கெட்டை கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. தேவேந்திர பிஷுவே இந்த 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

    Next Story
    ×