என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனே நகரில் நடைபெற்றது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஷ்ரேயாஸ் அய்யரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மற்ற இரண்டு போட்டிகளில் இருந்து விலகியதோடு, ஒட்டுமொத்த 2021 ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. தவான், ரகானே, அஷ்வின் போன்றோர் போட்டியில் இருந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் காயம்

    இந்த நிலையில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, பும்ரா, குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் பலமான அணியாக திகழ்கிறது. இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    2021 ஐபிஎல் சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினமானது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினம். அந்த அணியில் உள்ள வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றோர் பேட்டிங் செய்ததை பார்த்தோம். ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் முக்கியமானது. அவர் டெஸ்ட் போட்டிக்கும் தயாராகி வருகிறார் என்பதை காட்டுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் மீண்டும் பந்து வீசும் நிலைக்கு வந்தால், இரண்டு அணிகளுக்கும் நல்லது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்த மும்பை அணி வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். சாஹல், குல்தீப் யாதவ் பந்து அடி வாங்கியது. ராஜஸ்தான் அணியில் யாருமில்லை. அதனால் அவர் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரியாது’’ என்றார்.
    கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐதராபாத்தில் முன்னாள் வீரர் எம்.எல்.ஜெய்சிம்மா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்த அணியாகும். டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான அணியே மிகச்சிறந்ததாக இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அணிகளை விட தற்போதுள்ள அணியே மிகவும் சிறப்பானது.

    இந்த அணியை பார்த்தால் ஜெய்சிம்மா பெருமைப்பட்டு இருப்பார்.

    கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது. இதனால் அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

    பவுண்டரி எல்லை பகுதியை அதிகரிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேலே சென்றால், பவுண்சர் விதிப்படி கூடுதலாக ஒரு ரன் மற்றும் கூடுதல் பந்து கொடுக்கப்படுகிறது. கடுமையான இந்த விதி பந்துவீச்சாளர்களை பாதிக்கிறது. இதில் மாற்றம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்று அசத்தியது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

     உற்சாகத்தில் இந்திய அணி

    இதுதொடர்பாக, சாஸ்திரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்க்கையில் மிகவும் கடினமான இந்த கொரோனா தொற்று கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி 20 மற்றும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்று இருப்பது சிறப்பானதாகும் என பதிவிட்டுள்ளார். 
    சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    யூசுப் பதான்

    இதுதொடர்பாக இர்பான் பதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனாலும் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெண்டுல்கர், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணிக்காக ஆடிய இர்பான் பதானும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது.
    புசாரெஸ்ட்:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் 3 சிறந்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவுகள் மூலம் தகுதி காணும்.

    இந்த தகுதி சுற்றில் ‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ருமேனியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ருமேனியாவில் உள்ள புசாரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை சாய்த்து 2-வது வெற்றியை சொந்தமாக்கியது.

    ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து முதலாவது வெற்றியை ருசித்தது. பிரான்ஸ் அணி முதலாவது ஆட்டத்தில் உக்ரைனுடன் ‘டிரா’ கண்டு இருந்தது.
    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போப்ரினை சந்தித்தார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 86-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போப்ரினை சந்தித்தார்.

     வெற்றி உற்சாகத்தில் மெட்விடேவ்.


    2 மணி 37 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 7-6 (7-3), 6-7 (7-9), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் போப்ரினை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லெனார்ட் ஸ்டிருப்பை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), இமில் ரூசுவோரி (பின்லாந்து), டெய்லர் பிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனுமான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 7-6 (7-4), 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 44 நிமிடம் அரங்கேறியது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா காலின்சயாவை தோற்கடித்தார். முதல் செட்டை இழந்த கார்பின் முகுருஜா கடைசி செட்டில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன் பிறகு தனது அனுபவத்தின் மூலம் சரிவை சமாளித்து அசத்திய கார்பின் முகுருஜா வெற்றியையும் தனதாக்கினார். இந்த ஆட்டம் 2 மணி 41 நிமிடம் நீடித்தது. 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து ஆட வேண்டிய செர்பியாவின் நினா சோஜனோவிச் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் நவோமி ஒசாகா களம் இறங்காமலேயே 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபெரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினார். இதேபோல் 6-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிலா பெகுலாவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), மரியா சக்காரி (கிரீஸ்) ஆகியோர் வெற்றி கண்டனர்.
    இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் திசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு அணிகளுக்கு இடையில் குரூப் போட்டி நடைபெற்றது.

    20 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக இலங்கை ஆர்மி அணியின் கேப்டன் திசாரா பேரேரா களம் இறங்கினார். பகுதி நேர பந்து வீச்சாளரான தில்ஹான் கூரே பந்து வீச பெரேரா ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார்.

    இதன் மூலம் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அத்துடன் 13 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இலங்கை வீரர் கவுசல்யா வீரரத்னே 2005-ல் 12 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.

    திசாரா பெரேரா

    கார்பீல்டு சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் ஒயிட்லி, ஹஸ்ரத்துல்லா ஜஜாய், லியோ கார்ட்ர், பொல்லார்டு ஆகியோர் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் விளாசியுள்ளனர்.
    வேகப்பந்து வீச்சில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வக்கார் யூனிஸ்க்கு புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் எனத் தெரியாது என்று முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
    சிறப்பான வகையில் யார்க்கர் வீசக்கூடிய, ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ்க்கு கட்டாயம் இடம் உண்டு. 1989 முதல் 2003 வரை தலை சிறந்த வீரராக கருதப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் 87 டெஸ்ட், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 789 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.

    பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப். இங்கிலாந்து லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதால் தண்டனை பெற்றார். அத்துடன் அவரது சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் வக்கார் யூனிஸ்க்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது தெரியாது என்று முகமது ஆசிஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

    முகமது ஆசிஃப்

    இதுகுறித்து முகமது ஆசிஃப் கூறுகையில் ‘‘பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்த வக்கார் யூனிஸ் மோசடியை கையாண்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலான வருடங்களில் புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவருக்குத் தெரியாது. அவரது இறுதிக் கால கிரிக்கெட்டில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை சற்று தெரிந்து கொண்டார்.

    ரிவர்ஸ் ஸ்விங்கில் ஜாம்பவான் என்று மக்களுக்கு தெரியும். ஆனார், சிறந்த முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் ஒரு பந்து வீச்சாளரை கூட அவர் தயார் செய்ததில்லை. இவரைப் போன்றவர்கள் 20 வருடங்களாக பயிற்சியாளராக உள்ளனர். ஆனால், அவர்கள் தரமான பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. காம்பினேசனை உருவாக்குவதில் அவர்களிடம் குறைபாடு இருந்தது. நாம் அதிக எண்ணிக்கையில் பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம். ஆனால் தரமானவர்கள் இல்லை’’ என்றார்.
    ஐபிஎல் 2021 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்பின் ஐபிஎல் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அந்தந்த அணிகளும் இணைய தயாராகி வருகின்றனர்.

    வீரர்கள் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டெல்லி அணி தற்போது மும்பையில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அஷ்வின், அக்சார் பட்டேல் ஆகியோர் இன்று டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டல் சென்றடைந்தனர்.

    ரிக்கி பாண்டிங்

    அதேபோல் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மையரும் அணியுடன் இணைந்துள்ளார்.

    அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் அணியில் இணைந்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 3-2 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனவும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.
    பொதுவாக விளையாட்டில் திறமையை பொறுத்துதான் வெற்றித் தோல்வி அமையும் என்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் 50 சதவீதம் வெற்றிக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்திலும், இரவு பனிப்பொழிவில் பந்து வீசுவது கடினம் என்பதாலும் இந்திய ஆடுகளத்தில் பகல்-இரவு போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். இப்படிபட்ட சூழ்நிலையில் சேஸிங் செய்வது எளிதானதாகும்.

    அதேபோல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். 3-வது நாட்களுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. இதனால் டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் தேர்வு செய்யும்.

    டீம் இந்தியா

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்றது. அந்த அணி முதல் இன்னிங்சில் ரன்கள் குவித்து வெற்றியும் பெற்றது 2-வது போட்டியின்போது ஆடுகளம் முதல் நாளில் இருந்தே டர்ன் ஆனது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று போட்டியையும் வென்றது.

    3-வது போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை சுருட்டினர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகினர்.

    கடைசி போட்டியிலும் இந்தியா டாஸ் தோல்வி. ஆனால் திறமையை நிரூபித்து மீண்டும் இங்கிலாந்தை குறைந்த ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று 2-வது பேட்டிங் தேர்வு செய்து வெற்றி பெற்றது. அதன்பின் 2-வது போட்டியில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங் கேட்டு 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    டீம் இந்தியா

    அதன்பின் 3-வது, 4-வது, 5-வது என மூன்று போட்டிகளில் இந்தியா டாஸ் தோற்றது. ஆனால் திறமையை வெளிப்படுத்தி மூன்றில் இரண்டை வென்று தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.

    மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் விராட் கோலி டாஸ் தோற்றார். ஆனால் முதலில் சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், சிறப்பாக பந்து வீசி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் டாஸ் நமது கையில் இல்லை. திறமையை நிரூபித்தால் வெற்றி நமக்கே என்பதை இந்திய கிரிக்கெட் அணி செய்து காட்டியுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன.

    பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகினர். நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 329 ரன்கள் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் நிலை இருந்தது. சாம் கர்ரன் சிறப்பான பேட்டிங் செய்ய போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்ரன் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்து 7 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. முதல் போட்டியில் 94 ரன்களும், 2-வது போட்டியில் சதமும் அடித்த பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    வி்ராட் கோலி, புவி

    போட்டியின்போது பேட்டியளித்த விராட் கோலி, பேட்டிங் செய்வதற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் சாய்த்த ஷர்துல் தாகூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்காதது ஆச்சர்யமளிக்கிறது. அதேபோல் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது வழங்காததும் ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.

    இந்தத் தொடரில் விராட் கோலி இரண்டு அரைசதங்கள், ரிஷப் பண்ட் இரண்டு அரைசதம், கேஎல் ராகுல் அரைசதம், சதம் விளாசினர். தவானும் இரண்டு அரைசதம் அடித்தார்.

    பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய், சாம் கர்ரன், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, தாவித் மலான் ஆகியோர் தலா ஒரு அரைசதம் அடித்தனர்.

    பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டும் புவி, பிரசித் கிருஷ்ணா தலா 6 விக்கெட்டும், மார்க் வுட் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×