என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சென்னை அணியைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளார்.
    ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் உள்ள ஆறு நகரங்களில் நடக்கிறது. முதற்கட்டமான சென்னை, மும்பை வான்கடே மைதானங்களில் நடைபெற்றது. தற்போது அகமதாபாத், டெல்லி மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் கிரவுண்ட்மேன்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்திலும் உள்ளன.
    கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  

    வருண் சக்ரவர்த்தி - சந்தீப் வாரியர்

    கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறி வருகிறது.

    சிட்னி:

    கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

    தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது.

    கோப்புபடம்

    இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.37 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    ஐதராபாத் அணி 11 பேர் கொண்ட லெவனில் இருந்து வார்னரை நீக்கியது கடினமான முடிவாகும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பயாலிஸ் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் கேப்டனாக பணியாற்றினார்.

    ஐதராபாத் அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. அவரது தலைமையில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதை தொடர்ந்து ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    வில்லியம்சன் தலைமையிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றது. அந்த அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    நேற்றைய ஆட்டத்தில் வார்னர் 11 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறவில்லை.

    இந்தநிலையில் ஐதராபாத் அணி 11 பேர் கொண்ட லெவனில் இருந்து வார்னரை நீக்கியது கடினமான முடிவாகும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பயாலிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘வார்னர் ஒரு சிறந்த வீரர். அவரை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமானது தான். இந்த நீக்கம் ஏமாற்றத்தை தருகிறது. அணியின் நலன் கருதி மாற்று வீரர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முச்சோவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவை(செக்குடியரசு) எதிர்கொண்டார். 

    விறுவிறுப்பான இந்த மோதலில் முச்சோவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 1 மணி 49 நிமிடங்கள் நீடித்தது. இந்த சீசனில் டாப்-5 இடத்தில் உள்ள வீராங்கனையை முச்சோவா வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் குடல்வால் நோயால் பாதிப்பு அடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான லோகேஷ் ராகுல் நேற்று முன்தினம் இரவு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் அவர் குடல்வால் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. குடல்வால், ஆபரேஷன் மூலம் அகற்றப்பட உள்ளது. எனவே அவர் இப்போதைக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கு பதிலாக நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்தினார்.

    லோகேஷ் ராகுல் 7 ஆட்டங்களில் ஆடி 4 அரைசதம் உள்பட 331 ரன்கள் குவித்துள்ளார். அவர் இல்லாதது பஞ்சாப் அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான்.
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் வீரர் ஷிகர் தவான் அரை சதம் அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
    அகமதாபாத்:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
    டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.
    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

    டெல்லி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், ஆவேஸ் கான், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடி வருகிறது.

    ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    டெல்லி:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 

    ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை தவற விட்டார். 

    மறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் இன்று தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19-வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார். 

    இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட துவங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனீஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

    மனீஷ் பாண்டே 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    இதையடுத்து கேன் வில்லியம்சன் 20 ரன்களிலும், விஜய் சங்கர் 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாக குறைந்தது. அடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாததால், ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக முஸ்தபிஜுர் ரஹ்மான் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி மற்றும் ராகுல் தெவாட்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

    பஞ்சாப் கிங்ஸ்:

    1. அகர்வால், 2. கிறிஸ் கெய்ல், 3.பிரப்சிம்ரன் சிங் 4. மெரிடித், 5. டேவிட் மலன் , 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. ஜோர்டான், 9. பிஷ்னோய், 10 முகமது ஷமி, 11.  ஹர்பிரீத்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:

    பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. இஷாந்த் சர்மா, 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.
    டெல்லியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் 24-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    டெல்லியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டெல்லி, கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப், சென்னை, பெங்களூர், மும்பை அணிகளிடம் தோற்றது. ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் உள்ளது.

    ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை மட்டும் தோற்கடித்து இருந்தது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி , சென்னை அணிகளிடம் தோற்றது.

    இதனால் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப்பை ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் டெல்லி அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    பஞ்சாப் அணி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்றதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 18-ல், டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

    பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் மும்பையிடம் சென்னை அணி தோல்வியை தழுவியது.

    டெல்லியில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.

    அம்பதி ராயுடு ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 27 பந்தில் 72 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். மொய்ன் அலி 36 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), டுபிளசிஸ் 28 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    பொல்லார்ட் 2 விக்கெட் டும், டிரென்ட் போல்ட், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆட் டத்தின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பொல்லார்ட் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவர் 34 பந்தில் 87 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். ரோகித் சர்மா 28 பந்தில் 38 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 24 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சாம் கரண் 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொய்ன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது தோல்வியை தழுவியது. ஆனாலும் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே.கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் செயல்படுத்துவதில்தான் இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிட்ச் இருந்தது.

    அவர்களுக்கு கேட்ச்சுகள் உதவுகின்றன. ஆனால் முக்கியமான கட்டத்தில் நாங்கள் கேட்சுகளை தவற விட்டோம். திட்டத்தை செயல்படுத்துவது முக்கியமானது. அதில் நாங்கள் தவறி விட்டோம்.

    புள்ளிகள் பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் இருந்ததால் இந்த தோல்வி அதிகம் பாதிக்காது. திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. ஆனால் சில வி‌ஷயங்களில் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    சென்னை அணி 8-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 5-ந்தேதி டெல்லியில் சந்திக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி எதிர்கொள்கிறது. 

    ×