என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முதல் டெஸ்டில் காயத்துடன் ஆடிய விர்த்திமான் சஹா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆட முடியாமல் போனால் புதுமுக விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

    மும்பை:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.

    2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பறிபோனது. இதை சரிசெய்யும் வகையில் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அணிக்கு பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்கும்.

    விராட் கோலிக்காக அணியிலிருந்து யார் நீக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்து அவர் முத்திரை பதித்தார். இதனால் ஸ்ரேயாஸ்அய்யர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை.

    கடந்த டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய ரகானே நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 16 டெஸ்டில் அவரது சராசரி 24.39 ஆகும். இதேபோல தொடக்க வீரர் மயங்க் அகர்வால், புஜாரா ஆகியோரது பேட்டிங்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த 3 பேரில் ஒருவர் கழற்றிவிடப்படலாம்.

    முதல் டெஸ்டில் காயத்துடன் ஆடிய விர்த்திமான் சஹா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆட முடியாமல் போனால் புதுமுக விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

    சுழற்பந்தில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மூவரும் சேர்ந்து முதல் டெஸ்டில் 17 விக்கெட் சாய்த்தார்கள்.

    வேகப்பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்தால் முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

    நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர கேப்டன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.பந்து வீச்சில் சவுத்தி, ஜேமிசன் முத்திரை பதிக்க கூடியவர்கள். அஜாஸ் படேல் சுழற்பந்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

    இரு அணிகளும் இதுவரை 61 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 13-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

    துவக்கத்தில் சில நிமிடங்கள் பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அதன்பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடினர். 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்து அசத்தினார். அதன் பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இந்தியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிது.

    2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் பெல்ஜியம் அணியை வீழ்த்தி உள்ளது. 

    வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோத உள்ளது. 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, காலிறுதியில் 3-1 என ஸ்பெயின் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது.

    பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்தியஅணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய ‘ஏ’ அணி அங்கு விளையாடி வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி கான்பூர் டெஸ்ட் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தேர்வுக் குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது.

    வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு கிரிக்கெட் வாரியம் எப்போதுமே முதல் முன்னுரிமையை கொடுக்கும். இதற்காக நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

    ஹர்த்திக் பாண்ட்யா மிகச்சிறந்த வீரர் ஆவார். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இல்லை. தற்போது அணியில் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அவர் இளம்வீரர்.

    காயத்தில் இருந்து குணமடைந்து அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என நம்புகிறேன். கபில்தேவுடன் ஹர்த்திக் பாண்ட்யாவை ஒப்பிட முடியாது.

    இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

    காலே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கை 204 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 34.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது, நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டும் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தார்.

    கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    சட்டோகிராம்:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் சதமடித்து 114 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 133 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இதனால், 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த வங்காளதேசம் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் அரை சதமடித்து 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்டும், சஜித் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மீண்டும் பொறுப்புடன் ஆடினர். அபித் அலி 91 ரன்களிலும் , அப்துல்லா ஷபிக்  73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய அசார் அலி மற்றும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

    இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசார் அலி 24 ரன்களும் பாபர் அசாம் 13  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

    அந்த வகையில், ராஜஸ்தான் ராயலஸ் அணி சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜாஸ் பட்லர் (ரூ.10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 4.கோடி) ஆகிய 3 பேரை தக்கவைத்துள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.62 கோடி நிதி உள்ளது.

    சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், டு பிளிஸ்சிஸ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

    அந்த வகையில் நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே. (சென்னை சூப்பர் கிங்ஸ்) தல டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    இதில் ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், டோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜன் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி ரூபாய்), அப்துல் சமாத் (4 கோடி ரூபாய்), உம்ரான் மாலிக் (4 கோடி ரூபாய்) ஆகியோரை தக்கவதை்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடி ரூபாய் கொடுத்தும், அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷாப் பண்ட்-ஐ 16 கோடி ரூபாய் கொடுத்தும், அக்சார் பட்டேலை 9 கோடி ரூபாய் கொடுத்தும், பிரித்வி ஷாவை 7.5 கோடி ரூபாய் கொடுத்தும், அன்ரிச் நோர்ஜோவை 6.5 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

    கொல்கத்தா அணியில் சக்ரவர்த்தி (8 கோடி ரூபாய்), ரஸல் (12 கோடி ரூபாய்), வெங்கடேஷ் அய்யர் (8 கோடி ரூபாய்), சுனில் நரைன் (6 கோடி ரூபாய்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

    அந்த வகையில் ஆர்.சி.பி. அணி விராட் கோலி (ரூ. 15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ. 7 கோடி) ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ. 57 கோடி மீதம் உள்ளது.

    ஆர்.சி.பி.

    மும்பை அணி ரோகித் சர்மா (ரூ. 16 கோடி), பும்ரா (ரூ. 12 கோடி), சூர்ய குமார் யாதவ் (ரூ. 8 கோடி), பொல்லார்ட் (ரூ. 6 கோடி) ஆகிய நான்குபேரை தக்க வைத்துள்ளது. வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ. 48 கோடி நிதி உள்ளது 
    2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த 4 சீசனில் முறையே அவர் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் புதிய அணிகளாக அகமதாபாத், லக்னோ அணிகள் பங்கேற்கின்றன.

    லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சி.வி.சி. கேபிட்டல் ரூ.5,600 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

    ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும், மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.

    புதிய அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர், ஒரு புதுமுக வீரர் ஆகியோரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே 8 அணிகளில் 7 அணிகள் 18 வீரர்களை தக்க வைத்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்ட்வாட், மொய்ன் அலி ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ஆந்த்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும், மும்பை அணியில் ரோகித்சர்மா, பும்ரா ஆகியோரும், ஐதராபாத் அணியில் வில்லியம்சனும் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பெங்களூர் அணியில் விராட் கோலி, மேகஸ்வெல், டெல்லி அணியில் ரி‌ஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் படேல், ஆன்ரிச் நோர்க்கியா, ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பஞ்சாப் அணியில் எந்த ஒரு வீரரும் தக்க வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுலை புதிய அணியான லக்னோ வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க அந்த அணி முயன்று வருகிறது.

    2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த 4 சீசனில் முறையே அவர் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.
    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார். 

    டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்த அவர், ஹர்பஜன் சிங்கை முந்தினார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
    நியூசிலாந்து அணி 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    கான்பூர்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. 

    இதையடுத்து  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    அரை சதம் அடித்த டாம் லாதம்

    இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது, 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

    ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.

    நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. சோமர்வில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டாம் லாதம் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 

    வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஜடேஜா

    கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பின்வரிசை வீரர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர். 155 ரன்களில் 9  விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்றனர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி டிராவில் முடிந்தது. 

    இப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. நீண்ட நேரம் களத்தில் நின்ற இவர் 91 பந்துகள் தாக்குப்பிடித்து ஆடினார். 
    நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் ஆகியோர் இந்திய பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டு விக்கெட்டை பாதுகாத்து கொண்டனர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.

    இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. ஆகவே, நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

    டாம் லாதம்

    ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.

    நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது. டாம் லாதம் 35 ரன்களுடனும், சோமர்வில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 205 ரன்கள் தேவைப்படுகிறது.
    ×