என் மலர்
விளையாட்டு
மும்பை:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பறிபோனது. இதை சரிசெய்யும் வகையில் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அணிக்கு பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்கும்.
விராட் கோலிக்காக அணியிலிருந்து யார் நீக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்து அவர் முத்திரை பதித்தார். இதனால் ஸ்ரேயாஸ்அய்யர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை.
கடந்த டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய ரகானே நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 16 டெஸ்டில் அவரது சராசரி 24.39 ஆகும். இதேபோல தொடக்க வீரர் மயங்க் அகர்வால், புஜாரா ஆகியோரது பேட்டிங்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த 3 பேரில் ஒருவர் கழற்றிவிடப்படலாம்.
முதல் டெஸ்டில் காயத்துடன் ஆடிய விர்த்திமான் சஹா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆட முடியாமல் போனால் புதுமுக விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
சுழற்பந்தில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மூவரும் சேர்ந்து முதல் டெஸ்டில் 17 விக்கெட் சாய்த்தார்கள்.
வேகப்பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்தால் முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர கேப்டன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.பந்து வீச்சில் சவுத்தி, ஜேமிசன் முத்திரை பதிக்க கூடியவர்கள். அஜாஸ் படேல் சுழற்பந்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
இரு அணிகளும் இதுவரை 61 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 13-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது.
நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது.
பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இந்தியஅணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய ‘ஏ’ அணி அங்கு விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி கான்பூர் டெஸ்ட் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தேர்வுக் குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு கிரிக்கெட் வாரியம் எப்போதுமே முதல் முன்னுரிமையை கொடுக்கும். இதற்காக நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
ஹர்த்திக் பாண்ட்யா மிகச்சிறந்த வீரர் ஆவார். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இல்லை. தற்போது அணியில் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அவர் இளம்வீரர்.
காயத்தில் இருந்து குணமடைந்து அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என நம்புகிறேன். கபில்தேவுடன் ஹர்த்திக் பாண்ட்யாவை ஒப்பிட முடியாது.
இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சி.வி.சி. கேபிட்டல் ரூ.5,600 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும், மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.
புதிய அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர், ஒரு புதுமுக வீரர் ஆகியோரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே 8 அணிகளில் 7 அணிகள் 18 வீரர்களை தக்க வைத்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்ட்வாட், மொய்ன் அலி ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ஆந்த்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும், மும்பை அணியில் ரோகித்சர்மா, பும்ரா ஆகியோரும், ஐதராபாத் அணியில் வில்லியம்சனும் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூர் அணியில் விராட் கோலி, மேகஸ்வெல், டெல்லி அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் படேல், ஆன்ரிச் நோர்க்கியா, ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் அணியில் எந்த ஒரு வீரரும் தக்க வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுலை புதிய அணியான லக்னோ வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க அந்த அணி முயன்று வருகிறது.
2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த 4 சீசனில் முறையே அவர் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









