என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.

    ஜானி பேர்ஸ்டோ 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்தனர். 3ம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    • ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
    • டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

    இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

    • 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது.
    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, புனே, லக்னோ, புனே ஆகிய 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) குழு ஆய்வு செய்து வருகிறது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது. மைதானங்களை பார்த்து ஐ.சி.சி. குழு திருப்தி தெரிவித்தது. இந்திய அணி மோதும் முதல் ஆட்டம் சென்னையில் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி மோதும் 2 ஆட்டமும், பாகிஸ்தான் விளையாடும் 2 போட்டியும் ஆக மொத்தம் 5 ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் 5 போட்டிகள் நடக்கிறது. இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் நவம்பர் 23-ந்தேதி நடக்கிறது.

    இதேபோல பயிற்சி ஆட்டம் நடைபெறும் திருவனந்தபுரம் ஆடுகளத்தையும் ஆய்வு செய்தது.

    ஐ.சி.சி. குழு தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை ஆய்வு செய்து வருகிறது. தொடக்க ஆட்டம், இறுதிபோட்டி உள்பட 5 போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.

    • ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார்.
    • செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஷாஹின் ஹண்டர்ஸ், அபாசின் டிஃபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது, கேப்டன் செதிகுல்லா அடல் 77 ரன்களையும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 19வது ஓவரை, அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அந்த பாலில் சிக்சர் அடித்தார். இதையடுத்து வீசிய பந்து வைடுடன், பைஸ் முறையில் பவுண்டரி ஆகவும் மாறியது. தொடர்ந்து, ஃபிரீ ஹிட் பந்தில் சிக்சர் அடித்த செதிகுல்லா, அதன்பின்னர் வீசப்பட்ட அந்த ஓவருக்கான 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி அரங்கை அதிரவைத்தார். என்ன நடக்கிறது என புரியாமல் பந்துவீச்சாளர் கதிகலங்கி நின்றார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள் கிடைத்தது.

    இதன் மூலம் ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார். அதேசமயம், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சஜாய் படைத்தார்.

    செதிகுல்லாவின் அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஷாட்களை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப்போய் உள்ளனர்.

    இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ரன்களை விளாசினார். இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இதையடுத்து ஆடிய அபாசின் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

    செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிதான் அது. அந்த போட்டியில் 11 ரன்கள் மட்டுமே அடித்த அவர், உள்ளூர் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால், ஆப்கானிஸ்தான் டி20 அணியில் தனது இடத்தை நிச்சயம் உறுதி செய்வார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
    • அதிகபட்சமாக ஷாய் ஹோப் அரை சதம் அடித்து 63 ரன்களை எடுத்தார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. இதில், துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களமிறங்கினர்.

    இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, சூர்யகுமாா் யாதவ் 24 ரன்களும், ஷர்துல் தகூர் 16 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களும், சஞ்சு சாம்சான் 9 ரன்களும், குல்தீப் யாதவ் 8 ரன்களும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களும், முகேஷ் குமார் 6 ரன்களும், அக்சர் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்தனர். உம்ரான் மாலிக் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஷாய் ஹோப் அரை சதம் அடித்து 63 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, கியாஸி கார்டி 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மேலும், கெயில் மேயர்ஸ் 36 ரன்களும், பிரான்டன் கிங் 15 ரன்களும், ஷம்ரான் ஹெட்மெயர் 9 ரன்களும், அலிக் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெகு விரைவாக தனது வெற்றி இலக்கை எட்டி வெற்றி வாகையை சூடியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
    • இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    இதில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

    இதில், முதலில் களமிறங்கிய சாக் கிராவ்லே அரை சதம் அடித்து 73 ரன்களை குவித்தார். தொடர்ந்து, பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.

    ஹாரி ப்ரூக் 7 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன்னும், மொயின் அலி 29 ரன்களும், மார்க்வுட் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக, ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    3ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.
    • அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. இதில், துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களமிறங்கினர்.

    இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, சூர்யகுமாா் யாதவ் 24 ரன்களும், ஷர்துல் தகூர் 16 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களும், சஞ்சு சாம்சான் 9 ரன்களும், குல்தீப் யாதவ் 8 ரன்களும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களும், முகேஷ் குமார் 6 ரன்களும், அக்சர் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்தனர். உம்ரான் மாலிக் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

    • இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார்.
    • துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொருத்தவரை ரோவ்மன் பாவெல் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் நீக்கப்பட்டு, அல்சாரி ஜோசப் மற்றும் கார்ட்டி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

    • இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.
    • லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரைஇறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • லபுசேன் பேட்டிங் செய்தபோது ஸ்டூவர்ட் பிராட் பெய்ல்ஸை மாற்றி வைத்தார்
    • அதன்பின் லபுசேன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    2-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன் களம் இறங்கினார். 43-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் அருகில் சென்று இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். இதை பார்த்த லபுஸ்சேன் புன்னகை உதிர்த்து, அடுத்த பந்தை சந்திக்க தயாரானார்.

    என்ன ஆச்சர்யம்... அடுத்த பந்தில் லபுஸ்சேன் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    அதற்குபின், ஸ்மித் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு ரன்களுக்கு ஓடியபோது, பேர்ஸ்டோவ் பந்தை பிடித்து ஸ்டம்பை தாக்கினார். அப்போது ஸ்மித் கிரீஸ்க்கு சற்று வெளியே நின்றிருந்தார். ஆனால், பெய்ல் ஸ்டம்பில் இருந்து விலகாமல் இருந்ததால் ரன்அவுட்டில் இருந்து தப்பினார்.

    இதனால் அவுட்டில் இருந்து தப்பிய ஸ்மித், 71 ரன்கள் சேர்த்தார். இது அவுட்டா? இல்லையா? என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஸ்மித் அவுட்டில் இருந்து தப்பியதால் ஆஸ்திரேலியா 295 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

    இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    அவர் ஆஷஸ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்னே 36 போட்டிகளில் 195 விக்கெட்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    • பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
    • அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.

    தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

    அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.

    அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×