search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு

    • இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார்.
    • துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொருத்தவரை ரோவ்மன் பாவெல் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் நீக்கப்பட்டு, அல்சாரி ஜோசப் மற்றும் கார்ட்டி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×