என் மலர்
புதுச்சேரி
காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு யானை மீண்டும் திரும்பியது. யானையை மேளதாளத்துடன், மலர்தூவி பக்தர்கள் வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெறுவது வழக்கம்.
கேரளாவில் காட்டு யானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளை வனம் போன்ற பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்கு கடந்த ஜூன் 8-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானையை பாகன்கள் பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் மீண்டும் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டு வரவும், உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் 40 நாட்களுக்குப் பின் நேற்று காலை 7.30 மணிக்கு வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து யானை லட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து ஆங்காங்கே பக்தர்கள் யானை லட்சுமியுடன் நடந்து வந்தனர்.
நேரு வீதி வழியாக வந்தபோது யானை லட்சுமியை மேளதாளங்களுடன், மலர் தூவி வரவேற்றனர். கோவிலில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமியை பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். காலை 10.30 மணி அளவில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட யானை லட்சுமி அங்கு மணக்குள விநாயகரை வணங்கி விட்டு வலம் வந்தது. இதன்பின் யானைக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெறுவது வழக்கம்.
கேரளாவில் காட்டு யானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளை வனம் போன்ற பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்கு கடந்த ஜூன் 8-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானையை பாகன்கள் பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் மீண்டும் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டு வரவும், உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் 40 நாட்களுக்குப் பின் நேற்று காலை 7.30 மணிக்கு வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து யானை லட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து ஆங்காங்கே பக்தர்கள் யானை லட்சுமியுடன் நடந்து வந்தனர்.
நேரு வீதி வழியாக வந்தபோது யானை லட்சுமியை மேளதாளங்களுடன், மலர் தூவி வரவேற்றனர். கோவிலில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமியை பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். காலை 10.30 மணி அளவில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட யானை லட்சுமி அங்கு மணக்குள விநாயகரை வணங்கி விட்டு வலம் வந்தது. இதன்பின் யானைக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநில விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட் இருந்து வருகிறார். அங்கு துணை முதல்-மந்திரியாகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் இருந்து வந்தார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. உடனே சச்சின் பைலட்டை தொடர்பு கொண்டு சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டாததையடுத்து சச்சின் பைலட் வகித்து வந்த துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ‘சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும் நேரம் இது. அகில இந்தியா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்காக சச்சின் பைலட் உழைத்துள்ளதை அங்கீகரிக்கின்றோம்’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட் இருந்து வருகிறார். அங்கு துணை முதல்-மந்திரியாகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் இருந்து வந்தார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. உடனே சச்சின் பைலட்டை தொடர்பு கொண்டு சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டாததையடுத்து சச்சின் பைலட் வகித்து வந்த துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ‘சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும் நேரம் இது. அகில இந்தியா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்காக சச்சின் பைலட் உழைத்துள்ளதை அங்கீகரிக்கின்றோம்’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வாக்கு வங்கியை மேம்படுத்த பட்ஜெட்டில் தேவையில்லாத அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.தி.மு.க. இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி சமர்ப்பிக்கும் பட்ஜெட் கடும் சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளதாக இருக்கும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இக்கட்டான சூழ்நிலையில் தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் செலவு செய்த ரூ.2,042 கோடியை கழித்து மீதமுள்ள ரூ.6,958 கோடி தான் இருக்கும். இதில் 8 மாதங்களுக்கு அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், கடன் அதற்கான வட்டி திருப்பிச்செலுத்துதல், மானியம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படும். மீதமுள்ள ரூ.958 கோடியில் இதர செலவுக்கு இருக்கும். இந்த குறைந்த நிதியில் தேர்தல் நோக்கில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு புதுச்சேரியை மேலும் கடனாளி ஆக்கிவிடக் கூடாது. பொது நோக்கோடும் மாநில மற்றும் மக்கள் நலனை மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும். வாக்கு வங்கியை மேம்படுத்த அடுத்த 8 மாதங்களில் செயல்படுத்த முடியாத தேவையில்லாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சித்த மருத்துவமனை அமைப்பது, டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா ஊழியர்களை பணி அமர்த்தவும் மருந்துகள், மருந்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் பெறாத ஊழியர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மின்துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த அரசின் மீதான அதிருப்தியை குறைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க. இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி சமர்ப்பிக்கும் பட்ஜெட் கடும் சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளதாக இருக்கும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இக்கட்டான சூழ்நிலையில் தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் செலவு செய்த ரூ.2,042 கோடியை கழித்து மீதமுள்ள ரூ.6,958 கோடி தான் இருக்கும். இதில் 8 மாதங்களுக்கு அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், கடன் அதற்கான வட்டி திருப்பிச்செலுத்துதல், மானியம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படும். மீதமுள்ள ரூ.958 கோடியில் இதர செலவுக்கு இருக்கும். இந்த குறைந்த நிதியில் தேர்தல் நோக்கில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு புதுச்சேரியை மேலும் கடனாளி ஆக்கிவிடக் கூடாது. பொது நோக்கோடும் மாநில மற்றும் மக்கள் நலனை மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும். வாக்கு வங்கியை மேம்படுத்த அடுத்த 8 மாதங்களில் செயல்படுத்த முடியாத தேவையில்லாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சித்த மருத்துவமனை அமைப்பது, டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா ஊழியர்களை பணி அமர்த்தவும் மருந்துகள், மருந்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் பெறாத ஊழியர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மின்துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த அரசின் மீதான அதிருப்தியை குறைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவையில் மேலும் 22 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.நைனார்மண்டபம் துலுக்கானதம்மன் நகர் முதல் குறுக்குத்தெரு, 2.புதுச்சேரி அரவிந்தர் வீதி, 3.முதலியார்பேட்டை இந்திரா நகர் காந்தி வீதி, 4.நைனார்மண்டபம் வள்ளலார் நகர் கோதாவரி வீதி, 5.தேங்காய்திட்டு மருதம் வீதி, 6.நைனார்மண்டபம் திருமால் நகர் ராகவேந்திரா வீதி, 7.வாணரப்பேட்டை முருகசாமிதோப்பு ராஜராஜன் வீதி, 8.முதலியார்பேட்டை ரோடியார் மில் வீதி, 9.புதுச்சேரி சங்கரதாஸ் வீதி, 10.குமரகுருபள்ளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, 11.நைனார்மண்டபம் துலுக்கானத்தம்மன் நகர் 5-வது குறுக்குத்தெரு, 12.முதலியார்பேட்டை வைத்திலிங்கசெட்டி வீதி, 13.ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் முதல் முதன்மை சாலை 4-வது குறுக்குத்தெரு, 14.ரெட்டியார்பாளையம் தேவா நகர் 3-வது குறுக்குத்தெரு, 15.சாணரப்பேட்டை புதுத்தெரு,
16.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர், விநாயகர் கோவில் வீதி, 17.காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு (பி2-36), 18.தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் சுப்பையா வீதி, 19.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் வாணிதாசன் வீதி, 20.தர்மாபுரி செட்டி வீதி, 21.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் இளங்கோ வீதி, 22.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பொது போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.நைனார்மண்டபம் துலுக்கானதம்மன் நகர் முதல் குறுக்குத்தெரு, 2.புதுச்சேரி அரவிந்தர் வீதி, 3.முதலியார்பேட்டை இந்திரா நகர் காந்தி வீதி, 4.நைனார்மண்டபம் வள்ளலார் நகர் கோதாவரி வீதி, 5.தேங்காய்திட்டு மருதம் வீதி, 6.நைனார்மண்டபம் திருமால் நகர் ராகவேந்திரா வீதி, 7.வாணரப்பேட்டை முருகசாமிதோப்பு ராஜராஜன் வீதி, 8.முதலியார்பேட்டை ரோடியார் மில் வீதி, 9.புதுச்சேரி சங்கரதாஸ் வீதி, 10.குமரகுருபள்ளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, 11.நைனார்மண்டபம் துலுக்கானத்தம்மன் நகர் 5-வது குறுக்குத்தெரு, 12.முதலியார்பேட்டை வைத்திலிங்கசெட்டி வீதி, 13.ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் முதல் முதன்மை சாலை 4-வது குறுக்குத்தெரு, 14.ரெட்டியார்பாளையம் தேவா நகர் 3-வது குறுக்குத்தெரு, 15.சாணரப்பேட்டை புதுத்தெரு,
16.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர், விநாயகர் கோவில் வீதி, 17.காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு (பி2-36), 18.தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகர் சுப்பையா வீதி, 19.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் வாணிதாசன் வீதி, 20.தர்மாபுரி செட்டி வீதி, 21.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் இளங்கோ வீதி, 22.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பொது போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பேடி திடீரென ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பின் விவரங்களை சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் அல்லது துறை இயக்குனர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களாக கவர்னர் கிரண்பேடி அதிகாலையே கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகிறார். இதனால் இருவேறு விதமான தகவல் வெளியாகி குழப்பம் ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பணிக்கு கவர்னர் தடையாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று மதியம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து தனக்கு ஒரு வாரமாக தகவல் தராதது ஏன்? என கேட்டார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்கிறீர்களா? அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உத்தரவுகளை தினமும் அளிக்கிறீர்களா? என்ன என கேட்டார்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும், சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்தனர். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி யார்? என கேட்டு அவரை வரச்சொன்னார். அதன்படி கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளரான துணை இயக்குனர் ரகுநாதன் அங்கு வந்தார்.
அவரிடம் சரமாரியாக கவர்னர் பல கேள்விகளை கேட்டார். அவர் தெரிவித்த பதில்களுக்கு திருப்தி அடையாமல், ‘செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள். மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள்’ என கவர்னர் ஆவேசமாக கூறினார். ஒரு மணி நேரமாக கவர்னர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து கடிந்துகொண்டதால் அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பின் விவரங்களை சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் அல்லது துறை இயக்குனர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களாக கவர்னர் கிரண்பேடி அதிகாலையே கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகிறார். இதனால் இருவேறு விதமான தகவல் வெளியாகி குழப்பம் ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பணிக்கு கவர்னர் தடையாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று மதியம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து தனக்கு ஒரு வாரமாக தகவல் தராதது ஏன்? என கேட்டார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்கிறீர்களா? அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உத்தரவுகளை தினமும் அளிக்கிறீர்களா? என்ன என கேட்டார்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும், சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்தனர். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி யார்? என கேட்டு அவரை வரச்சொன்னார். அதன்படி கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளரான துணை இயக்குனர் ரகுநாதன் அங்கு வந்தார்.
அவரிடம் சரமாரியாக கவர்னர் பல கேள்விகளை கேட்டார். அவர் தெரிவித்த பதில்களுக்கு திருப்தி அடையாமல், ‘செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள். மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள்’ என கவர்னர் ஆவேசமாக கூறினார். ஒரு மணி நேரமாக கவர்னர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து கடிந்துகொண்டதால் அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வில்லியனூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லியனூர்:
வில்லியனூரை அடுத்த சிவராந்தகம் பகுதியில் பிரெஞ்சு காலத்தில் 8 ஏக்கர் பரபரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் கீழுர், மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்த ஏரி நிரம்பிய பிறகு கோர்க்காடு ஏரிக்கு பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 145 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. தற்போது மழைக்காலத்தில் மட்டுமே ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஏரியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி ஆக்கிரமித்துள்ளார். ஏரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்த்து தீயிட்டு கொளுத்தி உள்ளார். ஏரிக் கரைகளை சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய், காவல், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை ஏரியின் உள்ளே தண்ணீரில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ஏரியை மீட்டெத்து நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வில்லியனூரை அடுத்த சிவராந்தகம் பகுதியில் பிரெஞ்சு காலத்தில் 8 ஏக்கர் பரபரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் கீழுர், மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்த ஏரி நிரம்பிய பிறகு கோர்க்காடு ஏரிக்கு பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 145 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. தற்போது மழைக்காலத்தில் மட்டுமே ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஏரியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி ஆக்கிரமித்துள்ளார். ஏரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்த்து தீயிட்டு கொளுத்தி உள்ளார். ஏரிக் கரைகளை சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய், காவல், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை ஏரியின் உள்ளே தண்ணீரில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ஏரியை மீட்டெத்து நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,999 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,00,937 பேரும், தமிழகத்தில் 1,65,714 பேரும், டெல்லியில் 1,21,582, கர்நாடகத்தில் 59,652 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,999ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,00,937 பேரும், தமிழகத்தில் 1,65,714 பேரும், டெல்லியில் 1,21,582, கர்நாடகத்தில் 59,652 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,999ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் ஜூலை 17-ந்தேதி சரணடைந்தார்.
செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் ஜூலை 17-ந்தேதி சரணடைந்தார்.
செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. புதுச்சேரியிலும் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:
புதுச்சேரியில் 1 - 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும். 6-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.330 வழங்கப்படும்.
மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. புதுச்சேரியிலும் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:
புதுச்சேரியில் 1 - 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும். 6-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.330 வழங்கப்படும்.
மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6,53,751 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,58,692 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,898ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,066 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6,53,751 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,58,692 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,898ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,066 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
வருகிற 21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி. எம்.எஸ். உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. தற்போது முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு கட்ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு சென்டாக் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மருத்துவ மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்ந்த பிறகு காலியிடங்கள் தெரிவிக்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இறுதிக்கட்ட கலந்தாய்வில் தரவரிசைப்படி பங்கேற்க அனுமதிக்கபடுவர். மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 687 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,84,281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,58,140 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 11,194 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,56,369 பேருக்கும், டெல்லியில் 1,18,645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,832ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 687 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,84,281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,58,140 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 11,194 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,56,369 பேருக்கும், டெல்லியில் 1,18,645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,832ஆக உயர்ந்துள்ளது.






