என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த 23-ந் தேதி முதல் நேற்று (27-ந் தேதி) வரை புதுவை பல்கலைக் கழகம் மூடப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய சேவை பணிகளுக்கு தடை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஆயிரத்து 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 13 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 106 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இந்த கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது.
இதில் மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு தொற்று பரவியது உறுதியானது. இதனால் தொற்று பரவிய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஏற்கனவே 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
சட்டசபை வாக்கு எண்ணிக்கையையொட்டி கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து வெளியே நடமாடக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்ல தடை இல்லை.
வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் ரேபிட் பரிசோதனை செய்யலாம்.
இந்த சான்றுகளுடன் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற தன்னுடன் 2 நபர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.

இதனிடையே ஊரடங்கு குறித்து கலெக்டர் பூர்வா கார்க் கூறியதாவது:-
இரவு நேர ஊரடங்கை தவிர்த்து மற்ற நேரங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, உணவு, பழங்கள், பாலகம், மீன், இறைச்சிகடைகள், கால்நடை தீவன கடைகள் திறக்கலாம். சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்கள் செயல் படக்கூடாது. ஓட்டல்களில் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்களின் அறைக்கு சென்றே உணவு வழங்க வேண்டும். டீக்கடை, சிற்றுண்டி கடைகளுக்கு அனுமதியில்லை. மருத்துவ மனைகள், ஆய்வகம், மெடிக்கல் கிளீனிக், மருந்து கடைகள், செய்தித்தாள் விநியோகம், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.
பஸ், ஆட்டோ, டாக்சி பொது வாகன போக்குரவத்து இயங்கலாம். பஸ்களில் நின்று பயணிக்கக்கூடாது. டாக்சியில் டிரைவரை தவிர்த்து 3 பேரும், ஆட்டோ வில் டிரைவரை தவிர்த்து 2 பேரும் பயணிக்கலாம்.
அனைத்து மத இடங்களும், வழிபாட்டு தலங்களும் மூடப்படும். அவசியமான பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள் பாதிரியார்கள், கோவில் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மத சபைகள், கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிது.
கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் இன்றி நடத்தலாம். பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கிகள், காப்பீட்டு அலுவலகம், ஏ.டி.எம்., தொலை தொடர்பு இணையம் தொடர்பானவை, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், குடிநீர், கேபிள், சுகாதாரம், ஒளிபரப்பு, தனியார் பாதுகாப்பு சேவைகள், போலீஸ், தீயணைப்பு, தேர்தல் தொடர்பான சேவைகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி செயல்படும். நீதிமன்றங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.
திருமண நிகழ்ச்சியில் 50, இறுதி சடங்கில் 25 பேர் பங்கேற்கலாம். தொழில்துறை உற்பத்தி, தொழிற்சாலை இயங்கலாம். அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து பணி செய்யலாம்.
புதுவையில் விதிமீறல் தொடர்பாக 2 ஆயிரத்து 830 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 5 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள், காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆதர்ஷ், சுபாஷ், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
புதுவை மூலக்குளம் சாலை தெருவை சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா (வயது 50). இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் (வயது 16). ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மகளை கதிர்காமம் அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். தனது தோழிகள் ஒரே பள்ளியில் படிக்கும்போது, தன்னை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தது குறித்து இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மனம் வருந்தினார்.
நேற்று முன்தினம் காலை ஜான்பிராஸ்வாவும், அவரது மனைவி ஜெனிதா மேரியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மின்விசிறியில் இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இசபெல்ஜிஸ்தின் கஸ்தேன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனா முதல் அலை தீவிரம் குறைந்த நேரத்தில் பல இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.
கூடுதலாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர். ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.






