என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய சமையல் கூடத்தில் கவர்னர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்26 April 2021 4:08 PM GMT (Updated: 26 April 2021 4:08 PM GMT)
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மலிவு விலையில் (ரூ.10-க்கு) உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மேலும் பல இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாண்லே பாலகங்களில் உணவு வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு உணவு தயாரிக்கும் முறைகளை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் மதிய உணவு சாப்பிட உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X