search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவை மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா

    புதுவை மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஆயிரத்து 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 13 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 106 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இந்த கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது.

    இதில் மேலும் 12 தண்டனை கைதிகளுக்கு தொற்று பரவியது உறுதியானது. இதனால் தொற்று பரவிய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×