என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழிவுநீர் வாய்க்கால் தகராறு: அரசு அச்சக ஊழியர் மீது தாக்குதல்
Byமாலை மலர்25 April 2021 10:00 AM GMT (Updated: 25 April 2021 10:00 AM GMT)
வில்லியனூர் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் அரசு அச்சக ஊழியரை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் காலனி முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி அய்யம்மாள்(வயது42). இவர் புதுவை அரசு அச்சகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை அய்யம்மாள் தனது வீட்டின் எதிரே தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த கழிவுநீர் பக்கத்து வீட்டை சேர்ந்த சீத்தாராமன் என்பவரின் வீட்டின் பக்கம் சென்றது.
இதையடுத்து சீத்தாராமன் மற்றும் அவரது மனைவி தனம் மற்றும் சீத்தாராமனின் தந்தை நாராயணசாமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அய்யம்மாளை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து அய்யம்மாள் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X