என் மலர்
விருதுநகர்
திருச்சுழி | திமுக |
விருதுநகர் | திமுக |
அருப்புக்கோட்டை | திமுக |
சிவகாசி | காங்கிரஸ் |
சாத்தூர் | திமுக |
திருவில்லிபுத்தூர் | காங்கிரஸ் |
இராஜபாளையம் | அதிமுக |
மங்குகிற காலத்திற்கு மாங்காயும், பொங்குகிற காலத்திற்கு புளியங்காயும் காய்த்து குலுங்கும் என்பது முதியோர் பழமொழியாகும். இந்த ஆண்டு சீசனில் மா மரங்களில் அதிகமாக பூக்கள் பூத்துக்குலுங்கியது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் மழை பெய்து பூக்கள் உதிரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக மீண்டும் மாமரங்கள் பூத்து கை கொடுத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாங்காய்க்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் மாமரங்கள் ஏராளமாக உள்ளன.
செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் விளையும் நெல்லூர் சப்பட்டை எனும் இமாம்சா ரகம் அதிக ருசி உள்ளது. இதன் விலை கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகிறது.
2-ம் ரக மாங்காய்களான கிளிமூக்கு, ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ணம், நீலம், காசாலட்டு போன்ற மா வகைகள் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.
நெல்லூர் சப்பட்டை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட தற்போது மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு கசப்பானதாகும்.
மாமரங்களில் பூ பூப்பது முதல் பிஞ்சு விடுவது வரை தொடர்ச்சியாக மருந்து அடித்து நோயில் இருந்து காப்பது முதல், மாங்காய் இறக்குவதற்கு ஒரு நபருக்கு ஒருநாள் கூலி ரூ.8 வரை செலவாகிறது. இதனை அடிப்படையாக வைத்து பார்த்தால்கூட இந்த ஆண்டு லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனல் மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50).
இவர் அந்த பகுதியில் உள்ள கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 24-ந்தேதி இவரது செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட உள்ளது. எனவே உங்களது கணக்கு எண், ஏ.டி.எம். விவரங்களை தெரிவிக்கும்படி கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ராஜேஸ்வரி தனது இரு வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 5 லட்சத்து 43 ஆயிரத்து 706-ஐ யாரோ மோசடி செய்துவிட்டனர்.
ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரமும், மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 706-ம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் இருந்து எந்த அழைப்பும் உங்களுக்கு வராது. கணக்கு எண், ஏ.டி.எம். எண் கேட்டால் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என எத்தனையோ முறை விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 45). இவர்களுக்கு 2 மகன்களும், ஜெயலலிதா (17) என்ற மகளும் உள்ளனர்.
முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள் ஜெயலலிதாவுடன் தனியாக முனியம்மாள் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
வழக்கமாக அதிகாலையில் எழுந்து விடும் முனியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கூலி வேலைக்காக சென்று விடுவார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் முனியம்மாள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முனியம்மாளும், ஜெயலலிதாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் தாயும், மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முனியம்மாளின் தாயார் அடைக்கலம் (65) அதே பகுதியில் தான் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஊர் மக்கள் சென்றபோது அங்கு தோட்டத்தில் கட்டிலில்அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆவியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி தலைமையில், போலீசார் சம்ப இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது காரியாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






