என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவ தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்29 April 2021 2:55 PM GMT (Updated: 29 April 2021 2:55 PM GMT)
மீனவ தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர்:
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் ஆறு,குளம், குட்டை, ஏரி, அணைக்கட்டு, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடித்தும் கடல் மீன்களை வாங்கி விற்பனை செய்தும் மீனவ தொழிலாளர்கள் பிழைத்து வருகின்றனர். இவ்வாறு தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் இதுகுறித்த புள்ளி விவரங்களை முறையாக சேகரிக்காமல் உள்ள நிலையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் இதற்கான விவரங்களை சேகரித்து நலவாரிய அட்டை வழங்குவதற்காக மனு கொடுத்தும் உதவி இயக்குனர் இதுவரை ஆய்வு செய்யாமல் அடையாள அட்டை வழங்க மறுக்கப்படுகிறது. மீன்வளத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் மீன்பிடிதடைக்காலத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து அதன் மூலம் நலவாரிய அட்டை வழங்கி சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீனவதொழிலாவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவும் நலவாரிய அட்டை கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X