search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகாசி நகர்குழு செயலாளர் முருகன், மாவட்ட கலெக்டர் கண்ணனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 3 லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லை. இதனால் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் தற்போது 15 பேர் தான் பணியில் உள்ளனர். எனவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமித்து கொரோனா பாதிப்பு அடைந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×