search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை - கணவர் கைது

    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நாகலிங்க நகரை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஜெயபாரதியின் தந்தை ராமசாமி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சரத்குமாரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் சில நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×