என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
Byமாலை மலர்30 April 2021 2:18 PM GMT (Updated: 30 April 2021 2:18 PM GMT)
தளவாய்புரம் அருகே 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம்:
தமிழக அரசு தற்போது கொரோனா காலம் என்பதால் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று தளவாய்புரம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள் ஒன்று கூடி எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும், எங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இதனை அடுத்து பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X