என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திரன், அ.தி.மு.க.நிர்வாகி விஜயநல்லதம்பி ஆகியோர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், ரமணா, பலராமன் ஆகிய 4 பேர் மீது 2 வழக்குகளை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கடும் முயற்சிக்கு பின் தமிழக போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
அதன்படிட கடந்த 12-ந் தேதி ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இரவு 10.30 மணி வரை 11 மணி நேரம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
விசாரணை முடிவில் இன்று (15-ந்தேதி) மீண்டும் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜியிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் மேலும் 48 பேர் நீக்கம்- துரைமுருகன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக முத்தையா அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் முத்தையா மற்றும் கட்சியினர் காலை முதலே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணி அளவில் பிரசாரத்தை முடித்த அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவர் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் முத்தையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த அவர் சிறிது நேரத்திலேயே மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும் பத்தினர் உடனடியாக அவரை வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் முத்தையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தி.மு.க. வேட்பாளரின் திடீர் இறப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தி.மு.க.வினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த தி.மு.க. வேட்பாளருக்கு சுந்தரலட்சுமி என்ற மனைவியும், முத்துஈஸ்வரி, தனலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப் பதிவுக்கு முன்பு இறந்தால் அந்த தொகுதி அல்லது வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் இறந்துள்ளதால் அந்த வார்டு தேர்தல் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான முறையான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள்- கேரள அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர்:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, சாத்தூர் எலக்ட்ரானிக்ஸ் கடை அதிபர் ரவீந்திரன் கொடுத்த புகாரின்பேரில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தலைமறைவான அவரை கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் போலீசார் கைது செய்து விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர்.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு தயாரானபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து அவர் குணமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் விசாரணைக்கு வந்த ராஜேந்திரபாலாஜி கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை வைத்திருக்கவில்லை. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தாமல் சான்றிதழுடன் வரும்படி கூறினர். அதன்படி ராஜேந்திர பாலாஜி சார்பில் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் பகல் 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டதா?. அது யார் மூலம் பெறப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர். தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்காக சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ராஜேந்திர பாலாஜி வந்ததும் மீண்டும் விசாரணை தொடங்கியது.
இரவு 10.30 மணி வரை போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 11 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... பொங்கல் பரிசு மூலம் 120 கோடி கமிஷன் - திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு






