என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் காயம்
    X
    பெண் காயம்

    பன்றி கடித்து பெண் படுகாயம்

    பன்றி கடித்து குதறியதால் பெண் படுகாயம் அடைந்தார்.
    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி காட்டுப்பகுதியில் ஏராளமான  பன்றிகள் உள்ளன. சுமார் 80 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் அடிக்கடி கிராமப்பகுதிகளில் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பாலையம்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாண்டி மனைவி ஆறுமுகம் (வயது 55) என்பவர் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பொது கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக சுற்றித் திரிந்த  பன்றிகள் திடீரென ஆறுமுகத்தை சுற்றி வளைத்து கடித்து குதறின. 

    இதனால் அவர் கூக்குரலிட்டார். இதை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரைந்து வந்து  பன்றிகளை விரட்டி யடித்தனர். இருப்பினும் பன்றி கடித்ததில் ஆறுமுகத்துக்கு கை, கால்களில் ரத்தக்காயம்  ஏற்பட்டது. உடனடியாக அவர்  அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டி காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×