என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
இளம்பெண் மாயம்
திருச்சுழி அருகே இளம்பெண் மாயமானார். இது சம்பந்தமாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே விடத்தகுளம் புதூரைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகள் கனிமொழி(வயது 22). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து வளர்மதி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த கனிமொழி திடீரென மாயமானார்.
அவர் அடிக்கடி செங்கப்படையை சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் செல்போனில் பேசி வந்தார். இதனை கண்டித்தோம். எனவே அவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story






