என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் சித்ரவதை
    X
    பெண் சித்ரவதை

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் ஹெலன் வின்னரசி (வயது 29). இவருக்கும், பவுல் ஜேம்ஸ்  என்பவருக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத் தினர் கூடுதலாக 100 பவுன் வதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக  ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் ஹெலன் வின்னரசி புகார் செய்தார். 

    மேலும் தான் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த நேரத் தில் கணவர் பவுல் ஜேம்ஸ் அமெரிக்கா சென்று விட்ட தாகவும், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி  பவுல் ஜேம்ஸ்  மற்றும் ஸ்டெல்லா,  பரலோக மரியவியாகப்பன்,  ஆரோக்கியமேரி, அந்தோணி என்றஅன்பு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×