என் மலர்
திருவண்ணாமலை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.
இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார்.
திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.
சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.
உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.
உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. உபரிநீர் வெளியேற்றப்பட்டு குளங்கள், கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இதன்படி முழுக்கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் குதிரையாறு அணைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக இந்த தரைப்பாலம் சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தை தற்காலிமாக சீரமைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரால் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் பாலத்திற்கு மறுபுறம் உள்ள பூஞ்சோலை கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மீண்டும் கன மழை பெய்யும் பட்சத்தில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த இரும்பேடு அருகே பழங்காமூர் காவங்கரை பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 70). கணவரை இழந்து குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது.
இதில் வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உடலை மீட்டனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சதீஷ்குமார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பழுதாகியுள்ளன. மேலும் அந்த கட்டிடங்களின் மேற்கூரையும் சேதமடைந்து மழை பெய்தால், தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இந்த 2 வகுப்பறை கட்டிடங்களிலும் மழை நீர் விழுந்து, மாணவர்கள் உட்காரும் பெஞ்சு, மேஜைகள் மற்றும் கல்வி சாதனங்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதனால் இந்த வகுப்பறைகளின் மாணவர்களை, மற்ற 2 வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது கொரோனா காலகட்டமாக இருப்பதால் வகுப்பறைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி சமூக இடைவெளியுடன் உட்கார வைக்க முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து கொடுத்து மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






