என் மலர்
திருப்பூர்
- தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
- என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மக்கள் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழா, பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
* தமிழக தேசிய பக்கம் நிற்கிறது.
* பா.ஜனதாவில் வளர்ச்சி பார்த்து பலருக்கு அச்சம்.
* தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை பா.ஜனதா அரசு அளித்துள்ளது.
* மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்தும் கொடுத்து வருகிறது.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பெரிய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்து திமுக தமிழக அரசுக்கு ஏதும் செய்யவில்லை.
* 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
* என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
* மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்
* தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
* பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள்.
* தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.
- 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார்.
- நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும. 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இது, ஆனால் நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.
மேலும், மஞ்சள் ஏற்றுமதியை பாஜக அரசு தான் ஊக்குவித்துள்ளது. அதனால் தமிழக மஞ்சள் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. அந்த தடையை உடைத்தது பாஜக அரசு தான் என தனது உரையை பேசி முடித்தார் அண்ணாமலை.
- இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
- இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மக்கள் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழா, பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
* ஜவுளி துறையில் சிறப்பு வாய்ந்த நகராக திருப்பூர் உள்ளது.
* நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி பெரும் பங்கு வகிக்கிறது.
* நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.
* இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
* இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
* 2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா.
* என் மண் என் மக்கள் யாத்திரை தன்னுடைய பெயராலும் பெருமை பெற்றுள்ளது.
* என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
* நாடுதான் முதன்மையானது என பா.ஜனதா கருதுகிறது.
* இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.
* தமிழ்மொழி, கலாசாரம் மிக சிறப்பானது.
- திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார்.
- பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இதன்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார். அவருடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணித்தனர். பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the closing ceremony of 'En Mann Ek Makkal' padayatra in Tiruppur, Tamil Nadu. pic.twitter.com/38EwAbaULb
— ANI (@ANI) February 27, 2024
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வருகை தர உள்ள பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
பல்லடம்:
பல்லடம் வரும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் அவிநாசிபாளையம் அலகுமலை நால் ரோட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ய வேண்டுமென 2006ல் வழங்கப்பட்ட பரிந்துரையை அன்றைய காங்கிரஸ் அரசும் அமல்படுத்தவில்லை, கடந்த 2014 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வோம், கொள்முதல் செய்வோம் என விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
எனவே தேர்தல் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு இன்று வருகை தர உள்ள பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
- ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது.
- அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.
திருப்பூர்:
திருப்பூரில் இன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நிறைவு விழா நடைபயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள். பொறுத்து இருந்து பாருங்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கலாம். முக்கிய புள்ளிகளை கட்சிக்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. அதற்கு ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது. அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.
- மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது.
பல்லடம்:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு இன்று 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இன்று பகல் 12 மணியளவில் பல்லடம் மாதப்பூரில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர்.
இன்று காலை முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு பொதுமக்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் என ஏராளமானோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக திரண்டு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து மைதானத்திற்குள் அழைத்து சென்றனர். தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அமருவதற்காக மைதானத்தில் ஏராளமான சேர்கள் போடப்பட்டு இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் பங்கேற்க திரண்டு வந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து மைதானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் 1.30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்தை வந்தடைகிறார்.
அங்கு அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் வகையில் இன்று பகல் 11 மணியளவில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற அவர், பின்னர் திறந்த வெளிவாகனத்தில் யாத்திரையை மேற்கொண்டார்.
பி.என்.ரோடு வழியாக புஷ்பா சந்திப்பு, குமரன் ரோடு, வளம் பாலம், மத்திய பஸ் நிலையம் வழியாக சென்றார். அப்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள குமரன் நினைவு ஸ்தூபிக்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேலும் மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலை, வித்யாலயாவில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்கிறார். தொடர்ந்து பல்லடம் சாலை வழியாக மாதப்பூரில் பொதுக்கூட்டம் நடை பெறும் மைதானத்தை சென்றடைகிறார்.
பாதயாத்திரை நிறைவு விழா நடைபயணம் என்பதால் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதப்பூர் வரை வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. நடைபயணத்தின் போது பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அண்ணாமலை கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி அண்ணாமலையுடன் திறந்த ஜீப்பில் 1 கி.மீ., தூரம் சென்று தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகே சென்றதும் அண்ணாமலையின் நடைபயணத்தை நிறைவு செய்து வைக்கிறார். பின்னர் பிரதமர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என்று பா.ஜ.க.வினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பொதுக்கூட்டம் மைதானம் 5 லட்சம் பேர் அமரும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று பங்கேற்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு இருந்தது.
வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு மேடையின் பின்புறம் பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உணவுக்கூடம், வாகன பார்க்கிங், கழிப்பிடம், தண்ணீர் விநியோகம் என 5 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் சேவைப்பணியில் ஈடுபட்டனர்.
1.12 ஆயிரம் சதுர அடியில் 3 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.
பொதுக்கூட்ட மைதான வளாகத்திற்குள் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தவிர 5 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் தயாராக வைக்கப்பட்டு இருந்தது.பொதுக்கூட்ட அரங்குக்கு வெளியே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
பொதுக்கூட்ட மைதானத்திற்குள் போதை பொருட்கள், நெகிழி பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் தொண்டர்கள், பொதுமக்கள், பொதுக்கூட்டம் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்பே பொதுக்கூட்டம் தொடங்குகிறது. 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

பொதுக்கூட்ட மேடையானது தெற்கு நோக்கி இருக்கும் வகையில் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் பகுதியில் தாமரைசின்னம் பொறிக்கப்பட்டு வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்கள் இடம் பெற்றிருந்தது. 5 லட்சம் சேர்கள் போடப்பட்டு இருந்தது.
- பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்தநிலையில், பல்லடத்தின் முக்கிய இடங்களில் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- சின்னம்மாள் என்பவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
- எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
- மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வளாகத்தில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினக்கூலி 725 ரூபாயை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர் வருகையையொட்டி பா. ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,400 ஏக்கர் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை 80க்கு 60 அடி என்ற அளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பில்லர்கள் கொண்டு மேடை அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று கொண்டு பங்கேற்கும் விதமாகவும், 250 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கான பிரத்யேக வழித்தடம், ஹெலிபேடு, உணவுக்கூடம், பார்க்கிங் வசதி, வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி.களுக்கான பகுதி, பொதுக்கூட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துரிதகதியில் நடக்கின்றன. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு சென்றுள்ளார். இதையடுத்து பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என தெரிகிறது.
இதுகுறித்து பொதுக்கூ ட்டத்திற்கான பொறுப்பாளர்களான பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. அதனை ரத்தாக்கி செயல்படுத்தி காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,333 பூத்களிலும் தலா 370 பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலை, தனது உடலை வருத்திக்கொண்டு யாத்திரைக்காக அனைத்தையும் செய்து வருகிறார். அவரது உழைப்பு ஈடு இணையற்றது. இத்தனை நாட்கள் அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொதுக்கூட்டத்தை முழு வெற்றி பெறச்செய்ய உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் வருகிற 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இதன்படி கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும். கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.
திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி பா. ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக பா. ஜனதா கட்சி அலுவலகத்தில் விளம்பர இசை நிகழ்ச்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் முன்னிலை வகித்தார். இசை தயாரிப்பு உடுமலை பிரவீன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அருள் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், பிரதமர் வருகை குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும் பொதுக்கூட்ட மேடை மற்றும் மைதானத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கொள்ளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
போலீசார் கூறுகையில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட 6 மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.






