search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வளாகத்தில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினக்கூலி 725 ரூபாயை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×