search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் - அண்ணாமலை பேச்சு
    X

    தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் - அண்ணாமலை பேச்சு

    • 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார்.
    • நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

    இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும. 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இது, ஆனால் நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

    மேலும், மஞ்சள் ஏற்றுமதியை பாஜக அரசு தான் ஊக்குவித்துள்ளது. அதனால் தமிழக மஞ்சள் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. அந்த தடையை உடைத்தது பாஜக அரசு தான் என தனது உரையை பேசி முடித்தார் அண்ணாமலை.

    Next Story
    ×