search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா: பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு
    X

    2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா: பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

    • இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
    • இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மக்கள் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழா, பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

    * ஜவுளி துறையில் சிறப்பு வாய்ந்த நகராக திருப்பூர் உள்ளது.

    * நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி பெரும் பங்கு வகிக்கிறது.

    * நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.

    * இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.

    * இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    * 2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா.

    * என் மண் என் மக்கள் யாத்திரை தன்னுடைய பெயராலும் பெருமை பெற்றுள்ளது.

    * என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.

    * நாடுதான் முதன்மையானது என பா.ஜனதா கருதுகிறது.

    * இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.

    * தமிழ்மொழி, கலாசாரம் மிக சிறப்பானது.

    Next Story
    ×